Latest Updates
-
சாணக்கிய நீதி படி இப்படிப்பட்டவர்களுக்கு தானம் செய்வது உங்களை ஏழையாக மாற்றுமாம் - ஜாக்கிரதை -
பச்சை பயறு தோசையும், இஞ்சி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க... -
இன்றைய ராசிபலன் 06 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கதவை தட்டப்போகுதாம் -
சூரிய பெயர்ச்சியால் ஜூன் 15 முதல் இந்த 4 ராசிக்காரர்களின் வருமானம் உயரப்போகுது! -
30 ஆண்டுக்கு பின் சுக்கிரனால் உருவாகும் நவபஞ்சம யோகம்: இந்த 3 ராசிகளுக்கு கோடீஸ்வர யோகத்தைத் தரப்போகுதாம் -
பொட்டுக்கடலை இருந்தா இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு சூப்பரான சைடிஷா இருக்கும் -
சப்பாத்திக்கு இப்படி உருளைக்கிழங்கு சைடு டிஷ் பண்ணுங்க.. கறிக்குழம்பு சுவையில் செமயா இருக்கும்.. -
12 மாநிலங்கள் வழியாக செல்லும் இந்தியாவின் நீண்ட தூரம் பயணிக்கும் ரயில் எது? இதன் கடைசி ஸ்டாப் தமிழ்நாடுதானாம் -
மின்சாரமே இல்லாத காலத்தில் முகலாய மன்னர்களுக்கு எப்படி ஐஸ்கட்டிகள் கிடைத்தது தெரியுமா? இப்படித்தானாம் -
பால் போன்ற வெள்ளையான சருமம் வேண்டுமா? அப்ப இந்த பால் ஃபேஸ் பேக்கை போடுங்க..
சாணக்கிய நீதி படி நீங்க நிம்மதியாக வாழ விரும்பினால் இந்த 3 பேரிடம் எப்பவும் பழகாதீங்க... ஜாக்கிரதை...!
Chanakya Niti: பண்டைய இந்தியாவின் புகழ்பெற்ற பொருளாதார நிபுணரும், தத்துவஞானியுமாக விளங்கியவர் ஆச்சார்ய சாணக்கியர். சாணக்கியரின் ராஜதந்திரக் கொள்கைகளாலும், திட்டங்களாலும்தான் மௌரியப் பேரரசு சக்திவாய்ந்த அரசாக மாறியது. சிறந்த ராஜதந்திரியும் பொருளாதார நிபுணருமான சாணக்கியரின் தந்திரங்கள்தான் நந்த வம்சத்தை வீழ்த்தி, சந்திரகுப்த மௌரியர் என்ற ஒரு சாதாரண இளைஞரை மகத ராஜ்ஜியத்தின் பேரரசராக மாற்றியது.
அரசியலைத் தவிர, வாழ்க்கையின் அனைத்து துறைகளையும் பற்றியும் ஆழமான புரிதலும், ஞானமும் இருந்தது. பொருளாதாரம், அரசியல் மற்றும் ராஜதந்திரம் பற்றி விவாதித்ததோடு மட்டுமல்லாமல், ஆச்சார்ய சாணக்கியர் வாழ்க்கை குறித்த விஷயங்களைப் பற்றியும் விரிவாக எழுதியுள்ளார். மனிதர்கள் கடினமான காலங்களை சந்திக்கும் போது, அவரது சிந்தனைகளும் கொள்கைகளும் மிகவும் பயனுள்ளதாக இருக்கின்றன.

எதிரிகள், பாம்புகள் மற்றும் தேள்களை விட ஆபத்தான சில மனிதர்கள் நம்மைச் சுற்றி இருக்கிறார்கள் என்று சாணக்கிய நீதி கூறுகிறது. எனவே, நாம் அவர்களை அடையாளம் கண்டு, அவர்களிடமிருந்து விலகி இருக்க வேண்டும். அப்போதுதான் நாம் நிம்மதியாகவும், பாதுகாப்பாகவும் வாழ முடியும் என்று சாணக்கியர் கூறுகிறார். ஆபத்தான மிருகங்களை விட ஆபத்தான மனிதர்கள் யாரென்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
பொறாமை கொண்டவர்கள்
ஆச்சார்ய சாணக்கியரின் நீதி சாஸ்திரத்தின்படி, ஒரு மனிதன் பாதுகாப்பாகவும், மகிழ்ச்சியாகவும் வாழ்வதற்கு பொறாமை மற்றும் சுயநலம் கொண்ட நபர்களை எப்போதும் தவிர்க்க வேண்டும். எவ்வளவு கடினமான சூழ்நிலையிலும் கூட, அத்தகையவர்களிடம் ஒருபோதும் உதவி கேட்கக்கூடாது என்று சாணக்கியர் கூறுகிறார், ஏனெனில் அத்தகையவர்கள் பேராசை மற்றும் பொறாமை காரணமாக உங்களுக்குத் தீங்கு விளைவிப்பார்கள்.
உண்மையில், பொறாமை குணம் கொண்டவர்களால் சரி எது தவறு எது என்பதைப் பிரித்தறிய முடியாது. மற்றவர்களின் முன்னேற்றம் மற்றும் வெற்றியைக் கண்டு அவர்கள் ஒருபோதும் மகிழ்ச்சி கொள்ள மாட்டார்கள். மாறாக அவர்களின் மகிழ்ச்சியை கெடுக்க திட்டமிடுவார்கள். தீய மற்றும் சுயநல குணம் கொண்டவர்கள் மற்றவர்களின் வெற்றியைக் கண்டு பொறாமைப்பட்டு, அவர்களுக்குத் தீங்கு செய்ய விரும்புகிறார்கள்.
சுயநலவாதிகள்
அகங்காரம் கொண்ட முரட்டுத்தனமானவர்களை கண்மூடித்தனமாக நம்ப வேண்டாம் என்று ஆச்சார்ய சாணக்கியர் அறிவுறுத்துகிறார், ஏனெனில் அவர்கள் உங்களுக்கு ஒருபோதும் எந்த நன்மையையும் செய்ய மாட்டார்கள், மாறாக ஆபத்தை மட்டுமே ஏற்படுத்துவார்கள். ஒரு எதிரி முன்பிருந்து தாக்குவான், எனவே அவர்களின் தாக்குதலைப் பற்றி நாம் எச்சரிக்கையாக இருக்க முடியும் என்று சாணக்கியர் கூறுகிறார்.
ஆனால், இரக்கமற்ற மற்றும் சுயநலவாதிகள் பின்னாலிருந்து தாக்குகிறார்கள். அத்தகைய நபர்கள் நம்புவதற்குத் தகுதியற்றவர்கள். சுயநலவாதிகள் வாழ்க்கையில் தங்கள் சொந்த நலன்களை மட்டுமே கருத்தில் கொள்வார்கள், மேலும் தங்கள் சுயநலத்திற்காக மற்றவர்களைக் பயன்படுத்திக் கொள்ளவும் அவர்கள் தயங்க மாட்டார்கள்.
முன்கோபக்காரர்கள்
முன்கோபம் கொண்ட ஒருவரை ஒருபோதும் நம்பவோ, அவர்களிடம் உதவி கேட்கவோ கூடாது என்று சாணக்கியர் கூறுகிறார். மனிதனின் மிகப்பெரிய எதிரி கோபம்தான். கோபம் ஒருவரின் பகுத்தறியும் மற்றும் புரிந்துகொள்ளும் திறனைப் பாதிக்கிறது. முன்கோபமுள்ள ஒருவர் தன்னையும் மற்றவர்களையும் உடலளவிலும், மனதளவிலும் காயப்படுத்துகிறார்கள். கோபம் ஒருவரைச் சரி தவறைப் பற்றிய சிந்தனையை இழக்கச் செய்து, தனது சொந்த திருப்தியில் மட்டுமே கவனம் செலுத்த வைக்கிறது. இத்தகைய நபர்கள் எதிரிகளை விட ஆபத்தானவர்களாகக் கருதப்படுகிறார்கள். அப்படிப்பட்டவர்களிடம் ஒருபோதும் நெருங்கக்கூடாது என்று சாணக்கியர் கூறுகிறார்.



Click it and Unblock the Notifications
