Latest Updates
-
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம்
சாணக்கிய நீதி படி நீங்க நிம்மதியாக வாழ விரும்பினால் இந்த 3 பேரிடம் எப்பவும் பழகாதீங்க... ஜாக்கிரதை...!
Chanakya Niti: பண்டைய இந்தியாவின் புகழ்பெற்ற பொருளாதார நிபுணரும், தத்துவஞானியுமாக விளங்கியவர் ஆச்சார்ய சாணக்கியர். சாணக்கியரின் ராஜதந்திரக் கொள்கைகளாலும், திட்டங்களாலும்தான் மௌரியப் பேரரசு சக்திவாய்ந்த அரசாக மாறியது. சிறந்த ராஜதந்திரியும் பொருளாதார நிபுணருமான சாணக்கியரின் தந்திரங்கள்தான் நந்த வம்சத்தை வீழ்த்தி, சந்திரகுப்த மௌரியர் என்ற ஒரு சாதாரண இளைஞரை மகத ராஜ்ஜியத்தின் பேரரசராக மாற்றியது.
அரசியலைத் தவிர, வாழ்க்கையின் அனைத்து துறைகளையும் பற்றியும் ஆழமான புரிதலும், ஞானமும் இருந்தது. பொருளாதாரம், அரசியல் மற்றும் ராஜதந்திரம் பற்றி விவாதித்ததோடு மட்டுமல்லாமல், ஆச்சார்ய சாணக்கியர் வாழ்க்கை குறித்த விஷயங்களைப் பற்றியும் விரிவாக எழுதியுள்ளார். மனிதர்கள் கடினமான காலங்களை சந்திக்கும் போது, அவரது சிந்தனைகளும் கொள்கைகளும் மிகவும் பயனுள்ளதாக இருக்கின்றன.

எதிரிகள், பாம்புகள் மற்றும் தேள்களை விட ஆபத்தான சில மனிதர்கள் நம்மைச் சுற்றி இருக்கிறார்கள் என்று சாணக்கிய நீதி கூறுகிறது. எனவே, நாம் அவர்களை அடையாளம் கண்டு, அவர்களிடமிருந்து விலகி இருக்க வேண்டும். அப்போதுதான் நாம் நிம்மதியாகவும், பாதுகாப்பாகவும் வாழ முடியும் என்று சாணக்கியர் கூறுகிறார். ஆபத்தான மிருகங்களை விட ஆபத்தான மனிதர்கள் யாரென்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
பொறாமை கொண்டவர்கள்
ஆச்சார்ய சாணக்கியரின் நீதி சாஸ்திரத்தின்படி, ஒரு மனிதன் பாதுகாப்பாகவும், மகிழ்ச்சியாகவும் வாழ்வதற்கு பொறாமை மற்றும் சுயநலம் கொண்ட நபர்களை எப்போதும் தவிர்க்க வேண்டும். எவ்வளவு கடினமான சூழ்நிலையிலும் கூட, அத்தகையவர்களிடம் ஒருபோதும் உதவி கேட்கக்கூடாது என்று சாணக்கியர் கூறுகிறார், ஏனெனில் அத்தகையவர்கள் பேராசை மற்றும் பொறாமை காரணமாக உங்களுக்குத் தீங்கு விளைவிப்பார்கள்.
உண்மையில், பொறாமை குணம் கொண்டவர்களால் சரி எது தவறு எது என்பதைப் பிரித்தறிய முடியாது. மற்றவர்களின் முன்னேற்றம் மற்றும் வெற்றியைக் கண்டு அவர்கள் ஒருபோதும் மகிழ்ச்சி கொள்ள மாட்டார்கள். மாறாக அவர்களின் மகிழ்ச்சியை கெடுக்க திட்டமிடுவார்கள். தீய மற்றும் சுயநல குணம் கொண்டவர்கள் மற்றவர்களின் வெற்றியைக் கண்டு பொறாமைப்பட்டு, அவர்களுக்குத் தீங்கு செய்ய விரும்புகிறார்கள்.
சுயநலவாதிகள்
அகங்காரம் கொண்ட முரட்டுத்தனமானவர்களை கண்மூடித்தனமாக நம்ப வேண்டாம் என்று ஆச்சார்ய சாணக்கியர் அறிவுறுத்துகிறார், ஏனெனில் அவர்கள் உங்களுக்கு ஒருபோதும் எந்த நன்மையையும் செய்ய மாட்டார்கள், மாறாக ஆபத்தை மட்டுமே ஏற்படுத்துவார்கள். ஒரு எதிரி முன்பிருந்து தாக்குவான், எனவே அவர்களின் தாக்குதலைப் பற்றி நாம் எச்சரிக்கையாக இருக்க முடியும் என்று சாணக்கியர் கூறுகிறார்.
ஆனால், இரக்கமற்ற மற்றும் சுயநலவாதிகள் பின்னாலிருந்து தாக்குகிறார்கள். அத்தகைய நபர்கள் நம்புவதற்குத் தகுதியற்றவர்கள். சுயநலவாதிகள் வாழ்க்கையில் தங்கள் சொந்த நலன்களை மட்டுமே கருத்தில் கொள்வார்கள், மேலும் தங்கள் சுயநலத்திற்காக மற்றவர்களைக் பயன்படுத்திக் கொள்ளவும் அவர்கள் தயங்க மாட்டார்கள்.
முன்கோபக்காரர்கள்
முன்கோபம் கொண்ட ஒருவரை ஒருபோதும் நம்பவோ, அவர்களிடம் உதவி கேட்கவோ கூடாது என்று சாணக்கியர் கூறுகிறார். மனிதனின் மிகப்பெரிய எதிரி கோபம்தான். கோபம் ஒருவரின் பகுத்தறியும் மற்றும் புரிந்துகொள்ளும் திறனைப் பாதிக்கிறது. முன்கோபமுள்ள ஒருவர் தன்னையும் மற்றவர்களையும் உடலளவிலும், மனதளவிலும் காயப்படுத்துகிறார்கள். கோபம் ஒருவரைச் சரி தவறைப் பற்றிய சிந்தனையை இழக்கச் செய்து, தனது சொந்த திருப்தியில் மட்டுமே கவனம் செலுத்த வைக்கிறது. இத்தகைய நபர்கள் எதிரிகளை விட ஆபத்தானவர்களாகக் கருதப்படுகிறார்கள். அப்படிப்பட்டவர்களிடம் ஒருபோதும் நெருங்கக்கூடாது என்று சாணக்கியர் கூறுகிறார்.



Click it and Unblock the Notifications
