Latest Updates
-
செவ்வாய்-சந்திர சேர்க்கையால் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: மார்ச் 16 முதல் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்.. -
18 மாதங்களுக்கு பின் உருவாகும் மங்களாதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிகளின் நீண்டகால ஆசைகள் நிறைவேறப்போகுதாம்...! -
1500 கிலோ தங்கத்தால் கட்டப்பட்ட தங்க கோயில் தமிழ்நாட்டில் எங்கு உள்ளது தெரியுமா? நீங்க இங்க போயிருக்கீங்களா? -
வெயிலால் உங்க முகம் கருமையாகாமல் இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க... -
1 முறுக்கு பாக்கெட் இருந்தா இந்த மாதிரி காரைக்குடி ஸ்டைலில் குழம்பு வையுங்க... வித்தியாசமா சூப்பரா இருக்கும்.. -
வெயில் காலத்தில் மாலை வேளையில் இத செஞ்சு சாப்பிடுங்க.. உடம்பு குளுகுளு-ன்னு இருக்கும்.. -
அழகான பெண்கள் இந்த 4 ராசி ஆண்களை தேடிப்போய் காதலிப்பார்களாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
மார்ச் இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டப்போகுது... -
கேஸ் அதிகம் தேவைப்படாத அட்டகாசமான சாம்பார் சாதம் ரெசிபி..இந்த மாறி செஞ்சு பாருங்க... டேஸ்ட் செமயா இருக்கும்... -
அடுப்பில்லாமல் செய்யக்கூடிய பச்சப்புளி ரசம் - செஃப் மாதம்பட்டி ரங்கராஜ் ஸ்டைலில் எப்படி செய்றதுன்னு பாருங்க..
சாணக்கிய நீதி படி இந்த விஷயங்களில் தலையிடுவது உங்களுக்கு பெரிய அவமானத்தை ஏற்படுத்துமாம்... இனிமே பண்ணாதீங்க!
Chanakya Niti: சாணக்கிய நீதி படி மகிழ்ச்சியின் ரகசியம் வாழ்க்கையில் பிரச்சினைகளைத் தவிர்ப்பது அல்ல, மாறாக பிரச்சினைகளைத் தீர்க்கும் கலையைக் கற்றுக்கொள்வதாகும். மகிழ்ச்சியான வாழ்க்கைக்கான பல ரகசியங்கள் சாணக்கிய நீதியில் சொல்லப்பட்டுள்ளன. ஆச்சார்யா சாணக்கியர் பண்டைய இந்தியாவின் ஒரு சிறந்த அரசியல்வாதி மற்றும் இராஜதந்திரி ஆவார்.
அவர் தனது சாணக்கிய நீதியில் வாழ்க்கையை வெற்றிகரமாக மாற்ற பல வகையான கொள்கைகளை குறிப்பிட்டுள்ளார். ஒருவர் மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமென்றால் சில விஷயங்களில் தலையிடக்கூடாது என்கிறார் சாணக்கியர். அவை என்னென்ன விஷயங்கள் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

புத்திசாலிகளின் விவாதத்தில் தலையிடக்கூடாது
இரண்டு புத்திசாலிகள் விவாதித்துக் கொண்டிருக்கும் போது, அவர்களின் உரையாடலில் ஒருபோதும் குறுக்கிடக்கூடாது என்று சாணக்கியர் கூறுகிறார். அவ்வாறு செய்வது அவர்களின் பணிக்கு இடையூறை ஏற்படுத்தும். இதை மிகப்பெரிய முட்டாள்தனம் என்கிறார் சாணக்கியர்.
ஒரு புத்திசாலி மனிதன் இதை ஒருபோதும் செய்ய மாட்டான். அப்படிப்பட்ட சூழ்நிலையில் அவர்களுக்கிடையே சென்றால், அவர்கள் உங்களை முட்டாள் என்று நினைப்பார்கள். இது உங்கள் நற்பெயரையும் மரியாதையையும் கெடுக்கும். எனவே புத்திசாலிகளின் நடுவே ஒருபோதும் செல்ல வேண்டாம்.
கணவன்-மனைவி இடையேயான வாக்குவாதத்தில் செல்லக்கூடாது
கணவனும் மனைவியும் வாழ்க்கைத் தேரின் இரு சக்கரங்கள் என்று சாணக்கியர் தனது சாணக்கிய நீதியில் கூறுகிறார். கணவனும் மனைவியும் சேர்ந்து சில வேலைகளைச் செய்யும்போதோ அல்லது வாக்குவாதத்தில் ஈடுபடும் போதோ மூன்றாவது நபர் அவர்களின் வேலையில் தலையிடக் கூடாது என்கிறார் சாணக்கியர். மேலும், அவர்களின் உரையாடலில் யாரும் குறுக்கிடக்கூடாது. இது அவர்களின் தனியுரிமையின் மீதான அத்துமீறல் என்கிறார் சாணக்கியர்.
கலப்பைக்கும், எருதுக்கும் இடையில் செல்லக்கூடாது
கலப்பையும் எருதும் ஒன்றாகச் செல்லும்போது அவற்றுக்கிடையே செல்ல வேண்டாம். அது உங்களை காயப்படுத்தலாம். இவ்வாறு செய்வது மரணத்திற்கு கூட வழிவகுக்கும் என்று சாணக்கியர் கூறுகிறார்.
யாகத்திற்கு இடையில் செல்லக்கூடாது
ஒரு புரோகிதர் நெருப்பு குழிக்கு அருகில் அமர்ந்து பூஜை செய்யும் போது, யாரும் அதன் வழியாக செல்லக்கூடாது. இவ்வாறு செய்வதால் அவர்களின் வழிபாடு தடைபடும், பூஜை தடைபடும். இது ஒரு நபரை பாவத்திற்கு உடந்தையாக ஆக்குகிறது என்று சாணக்கியர் கூறுகிறார்.
சாணக்கியரின் கூற்றுப்படி, ஒரு நபர் மேற்கூறிய விஷயங்களில் அல்லது அவர்களின் வாழ்க்கையில் ஒருபோதும் தலையிடக்கூடாது. இது ஒரு நபருக்கு மரணம் அல்லது சேதத்தை ஏற்படுத்தும் என்பதால் கவனமாக இருக்க வேண்டும்.



Click it and Unblock the Notifications












