Latest Updates
-
1 வருடத்துக்கு பின் மேஷம் சொல்லும் சுக்கிரன்: இந்த 3 ராசிக்காரங்க ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம்...! -
336 ஆண்டுகளுக்கு முன் சத்ரபதி சாம்பாஜி மகாராஜாக்கு 11 மார்ச் 'இதே' நாளில் என்ன நடந்தது தெரியுமா? -
4 பிரெட், 1 கப் தயிர் இருந்தா 10 நிமிஷத்துல இந்த மாதிரி வடை சுடுங்க... மொறுமொறுனு டேஸ்ட் பிரமாதமா இருக்கும்... -
இந்த 4 ராசி ஆண்கள் ரொம்ப பொஸசிவான கணவர்களாக இருப்பார்களாம்...இவங்க மனைவிகள்தான் பாவம்..உங்க ராசி இதுல இருக்கா? -
LPG Gas: தலைவிரித்தாடும் சிலிண்டர் தட்டுப்பாடு... சிலிண்டர் சீக்கிரம் தீராம இருக்க இப்படி சமையல் பண்ணுங்க...! -
கோதுமை ரவா தோசையும்.. புதினா சட்னியும்..- 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஉளைச்சலான நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்..
சாணக்கிய நீதி படி வாழ்க்கையில் இந்த 3 விஷயங்களை செய்வதற்கு ஒருபோதும் தயங்காதீர்கள்... அதான் நல்லது...!
சாணக்கியர் இந்தியாவின் புகழ்பெற்ற அரசியல் மற்றும் பொருளாதார மேதைகளில் ஒருவராவார். அவரின் கொள்கைகள் மற்றும் அறிவுரைகள் எக்காலத்திற்கும் பொருந்துபவை, அதனால்தான் இன்றும் சாணக்கிய நீதி புகழ்பெற்றதாக இருக்கிறது.
சாணக்கிய நீதியின் படி வாழ்க்கையில் சில விஷயங்களை செய்வதற்கு ஒருபோதும் தயங்கக்கூடாது, இல்லையெனில் நீங்கள் நஷ்டத்தை சந்திக்கக்கூடும் என்று அவர் நம்பினார். ஏனெனில் ஆச்சார்யா சாணக்கியரின் வாழ்க்கையே பல போராட்டங்கள் நிறைந்ததாக இருந்தது.

சாணக்கியர் தனது வாழ்க்கையில் பல சிரமங்களை எதிர்கொண்டார், ஆனால் அவை ஒருபோதும் அவரது ஆற்றல் மீது ஆதிக்கம் செலுத்த அனுமதிக்கவில்லை. பேரழிவை எப்படி வாய்ப்பாக மாற்றுவது என்பதில் சாணக்கியர் வல்லவராக இருந்தார். அவரது படைப்புகளில் சாணக்கியர் இவற்றை பற்றி குறிப்பிட்டுள்ளார். ஒரு நபர் செய்வதற்கு தவிர்க்கும் சில விஷயங்கள் உள்ளன, ஆனால் அந்த செயல்களை செய்ய தயங்கக்கூடாது. அவை என்னவென்று இந்த பதிவில் பார்க்கலாம்.
கடனை கேட்க தயங்கக்கூடாது
பொருளாதார செழிப்பு இல்லாமல், பொருள்சார்ந்த இந்த சமுதாயத்தின் தேவைகளை பூர்த்தி செய்ய முடியாது என்று சாணக்கியர் நம்பினார். உங்கள் கருணையால் நீங்கள் ஒருவருக்கு கடன் கொடுத்திருந்தால், அதைத் திரும்பக் கேட்க ஒருபோதும் வெட்கப்பட வேண்டாம் என்று அவர் கூறினார். நீங்கள் பண விஷயத்தில் வெட்கப்பட்டால், அது உங்களுக்கு தீங்கு விளைவிக்கும்.
சாப்பிட தயங்கக்கூடாது
பெரும்பாலும், ஒருவர் உறவினர் அல்லது நண்பர் வீட்டிற்குச் செல்லும்போது, மக்கள் தயங்கி தயங்கி பாதி வயிறு மட்டுமே சாப்பிடுவார்கள். சாணக்கியர் உணவை எப்போதும் வயிறார சாப்பிட வேண்டும் என்று அறிவுறுத்துகிறார். எந்த இடத்தில் அமர்ந்தாலும் சாப்பிடத் தயங்கக் கூடாது, எந்த நேரமாக இருந்தாலும்,இடமாக இருந்தாலும் சாப்பிடத் தயங்கக்கூடாது.
கற்றுக்கொள்வதற்கு தயங்கக்கூடாது
ஒரு நபர் தனது வாழ்நாள் முழுவதும் எதையாவது கற்றுக் கொண்டே இருப்பார் என்று சாணக்கியர் நம்பினார். நீங்கள் குருவிடமிருந்து அறிவைப் பெறுகிறீர்கள் என்றால், அதற்காக ஒருபோதும் வெட்கப்பட வேண்டாம் என்று அவர் நம்பினார். உங்களுக்கு எந்த விஷயத்திலாவது ஆர்வம் இருந்தால், அதைப்பற்றி கேள்வி கேட்க ஒருபோதும் வெட்கப்பட வேண்டாம். அவ்வாறு செய்தால் நஷ்டம் ஏற்படுவதுடன் எதிர்காலத்தில் பிரச்சனைகளையும், இழப்புகளையும் சந்திக்க வேண்டி வரும்.



Click it and Unblock the Notifications












