சாணக்கிய நீதி படி இந்த 4 நபர்களிடம் தெரியாம கூட உதவி கேட்ராதீங்க... இவங்க கெட்டத மட்டும்தான் செய்வாங்களாம்...!

ஆச்சார்யா சாணக்கியர் இந்தியாவின் முதல் சிறந்த பொருளாதார நிபுணர் மற்றும் தத்துவஞானி ஆவார். மௌரிய வம்சத்தின் வெற்றிக்கு சாணக்கியரின் இராஜதந்திரமே காரணாமாக இருந்தது. சிறந்த தத்துவஞானியும், பொருளாதார நிபுணருமான சாணக்கியர் தனது கொள்கைகளின் வலிமையால் நந்த வம்சத்தை அழித்தார், மேலும் ஒரு எளிய குழந்தை சந்திரகுப்த மௌரியரை மகதத்தின் பேரரசர் ஆக்கினார்.

சாணக்கியருக்கு அரசியல் மட்டுமின்றி சமூகத்தின் ஒவ்வொரு விஷயத்திலும் ஆழ்ந்த அறிவும் நுண்ணறிவும் இருந்தது. பொருளாதாரம், அரசியல், இராஜதந்திரம் தவிர, ஆச்சார்ய சாணக்கியர் நடைமுறை வாழ்க்கை பற்றியும் பல விஷயங்களைச் சொல்லியிருக்கிறார். இன்றும் மனிதர்களுக்கு இக்கட்டான காலங்களில் அவரது வார்த்தைகளும் கொள்கைகளும் பெரிதும் உதவுகின்றன.

Chanakya Niti: Never Ask Help From These People in Tamil

இதுபோன்ற பல விஷயங்களை ஆச்சார்ய சாணக்கியர் தனது சாணக்கிய நீதியில் கூறியிருக்கிறார், இவற்றை ஒருவர் சரியாகப் பின்பற்றினால், அவர் வாழ்க்கையில் ஒருபோதும் ஏமாற்றமடைய வேண்டியதில்லை. சாணக்கியக் கொள்கையின்படி, மனிதர்களுக்கு மற்றவர்களை சரியாக கணிக்கும் திறன் இருந்தால், அவர்கள் வாழ்க்கையில் ஒருபோதும் தோற்கடிக்கப்பட மாட்டார்கள்.

சாணக்கியர் சொல்வதென்ன?
சாணக்கிய நீதியின் கூற்றுப்படி, நம்மைச் சுற்றி பாம்பு, தேள் மட்டுமல்ல எதிரிகளையும் விட ஆபத்தான சிலர் இருக்கிறார்கள். எனவே அத்தகையவர்களை அடையாளம் கண்டு அவர்களிடமிருந்து தூரத்தை இருக்கும் திறன் நமக்கு இருக்க வேண்டும். மேலும், வாழ்க்கையில் அப்படிப்பட்டவர்களிடம் உதவியை ஒருபோதும் பெறக்கூடாது.

சுயநலவாதிகள்
பிறப்பால் பார்வையற்ற ஒருவரால் எதையும் பார்க்க முடியாது என்பது போல, காமம், கோபம் மற்றும் போதை ஆகியவற்றால் நிறைந்தவர் அதைத் தவிர வேறு எதையும் பார்க்க முடியாது. அதே சமயம் சுயநலவாதிகளும் யாரிடமும் எந்த குறையும் பார்ப்பதில்லை. அவர்களுக்கு அனைவரும் சமம். அதனால் தான் சுயநலவாதியாக இருக்கும் ஒருவருடன் நட்பு கொள்ளவோ, அவர்களிடம் இருந்து உதவியாக பெறக்கூடாது.

மோசமானவர்கள்
ஆச்சார்ய சாணக்கியர், தவறுதலாகக் கூட சுயநலவாதிகளை நம்பக்கூடாது என்று கூறுகிறார். ஏனெனில் அப்படிப்பட்டவர்கள் உங்களுக்கு ஒருபோதும் நன்மை செய்ய முடியாது, மாறாக அவர்கள் உங்களை சிக்கலில் ஆழ்த்துவார்கள். ஆச்சார்யா சாணக்கியரின் கூற்றுப்படி, எதிரி எதிரில் இருந்து தாக்குகிறான், அவனுடைய தாக்குதலை எதிர்கொள்ள நாம் எப்போதும் கவனமாக இருக்கிறோம். ஆனால் சுயநலவாதிகள் மற்றும் மோசமானவர்கள் முதுகுக்குப் பின்னால் தாக்குகிறார்கள். அத்தகையவர்களை ஒருபோதும் நம்பக்கூடாது. ஒரு சுயநலவாதி தன் சொந்த நன்மையைத் தவிர வாழ்க்கையில் எதையும் நினைப்பதில்லை. மேலும் தன் சுயநலத்திற்காக மற்றவர்களை சிக்க வைக்க அவர்கள் தயங்க மாட்டார்கள்.

கோபத்தில் மூழ்கியவர்கள்
ஆச்சார்யா சாணக்கியரின் கூற்றுப்படி, கோபம் அதிகமாகக் கொண்டவரிடமிருந்து எப்போதும் விலகி இருக்க வேண்டும். கோபம் ஒரு மனிதனின் மிகப்பெரிய எதிரி. கோபம் கொள்ளும் தருணத்தில், ஒருவரின் சிந்திக்கும், புரிந்துகொள்ளும் ஆற்றல் செயலிழக்கிறது. கோபப்படுவதால், ஒருவர் தனக்கும், தன்னை சுற்றி இருப்பவர்களுக்கும் தீங்கு செய்கிறார். கோபத்தில், ஒரு நபரின் சரி மற்றும் தவறு பற்றிய புரிதல் குறைந்து, அவர் தனது மகிழ்ச்சியைப் பற்றி மட்டுமே சிந்திக்கிறார். அத்தகையவர்கள் எதிரிகளை விட ஆபத்தானவர்கள்

பேராசைக் கொண்டவர்கள்
ஆச்சார்ய சாணக்கியரின் நீதி சாஸ்திரத்தில், ஒரு மனிதன் தனது சொந்த நலனுக்காக, பேராசை மற்றும் பொறாமை கொண்ட நபரிடமிருந்து எப்போதும் விலகி இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இக்கட்டான சமயங்களில் கூட அப்படிப்பட்டவர்களிடம் உதவியை நாடக்கூடாது. ஏனென்றால், பேராசை மற்றும் பொறாமை விவகாரத்தில் உங்களுக்கு உதவுவதை விட இத்தகைய மக்கள் தீமையைத்தான் ஏற்படுத்துகிறார்கள்.

உண்மையில், பொறாமை குணம் கொண்டவர்களுக்கு சரி மற்றும் தவறு பற்றிய புரிதல் இருக்காது. மற்றவர்களின் நல்வாழ்வு மற்றும் முன்னேற்றத்தில் அவர்கள் ஒருபோதும் மகிழ்ச்சியடைவதில்லை. துன்மார்க்கமும் பேராசையும் கொண்டவர்கள் மற்றவர்களின் முன்னேற்றத்தைக் கண்டு பொறாமைப்பட்டு அவர்களுக்குத் தீங்கு செய்ய முயற்சிப்பார்கள்.

Desktop Bottom Promotion