Latest Updates
-
30 ஆண்டுக்கு பின் சனியும்-செவ்வாயும் மீனத்தில் இணைவதால் இந்த 3 ராசிக்காரங்க டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
No Oil Noi Boil Recipe: அடுப்பே தேவைப்படாத ஆரோக்கியமான, சுவையான இட்லி மற்றும் சட்னி ரெசிபி...ட்ரை பண்ணுங்க...! -
1 வருடத்துக்கு பின் மேஷம் செல்லும் சுக்கிரன்: இந்த 3 ராசிக்காரங்க ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம்...! -
336 ஆண்டுகளுக்கு முன் சத்ரபதி சாம்பாஜி மகாராஜாக்கு 11 மார்ச் 'இதே' நாளில் என்ன நடந்தது தெரியுமா? -
4 பிரெட், 1 கப் தயிர் இருந்தா 10 நிமிஷத்துல இந்த மாதிரி வடை சுடுங்க... மொறுமொறுனு டேஸ்ட் பிரமாதமா இருக்கும்... -
இந்த 4 ராசி ஆண்கள் ரொம்ப பொஸசிவான கணவர்களாக இருப்பார்களாம்...இவங்க மனைவிகள்தான் பாவம்..உங்க ராசி இதுல இருக்கா? -
LPG Gas: தலைவிரித்தாடும் சிலிண்டர் தட்டுப்பாடு... சிலிண்டர் சீக்கிரம் தீராம இருக்க இப்படி சமையல் பண்ணுங்க...! -
கோதுமை ரவா தோசையும்.. புதினா சட்னியும்..- 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஉளைச்சலான நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது...
சாணக்கிய நீதி படி ஆண்கள் இந்த தவறுகளை தெரியாம கூட பண்ணக்கூடாது... இல்லனா அவங்க கல்யாண வாழ்க்கை காலி...!
Chanakya Niti: சாணக்கியர் பண்டைய இந்தியாவின் ஒரு சிறந்த அறிஞர். சந்திரகுப்த மௌரியரின் அறிவுசார் திறன்களின் அடிப்படையில் பேரரசர் ஆக்கப்பட்டார். வாழ்க்கை தொடர்பான அனைத்து விஷயங்களைப் பற்றியும் தனது சாணக்கிய நீதியில் குறிப்பிட்டுள்ளார்.
சாணக்கியர் ஒரு சிறந்த பொருளாதார நிபுணர். அவர் ஒரு திறமையான அரசியல்வாதி மற்றும் இராஜதந்திரியாகவும் இருந்தார். சாணக்கியரின் கொள்கைகள் இன்றும் மிகவும் பயனுள்ளதாக உள்ளன. ஆச்சார்ய சாணக்கியரின் வார்த்தைகளை ஒருவர் ஏற்றுக்கொண்டால், ஒரு நபர் தனது வாழ்க்கையில் இருந்து அனைத்து பிரச்சினைகளையும் அகற்ற முடியும்.

மகிழ்ச்சியான திருமண வாழ்க்கை ஒரு பெரிய பரிசு போன்றது. எல்லோருக்கும் வாழ்க்கையில் இந்த பரிசு கிடைப்பதில்லை. கணவன்-மனைவி இருவரும் ஒருவருக்கு ஒருவர் சமமான அன்பையும் மரியாதையையும் கொடுத்தால்தான் தாம்பத்தியம் மகிழ்ச்சியாக இருக்கும்.
சாணக்கியரின் சில கொள்கைகளைப் பின்பற்றினால், மகிழ்ச்சியான திருமண வாழ்க்கையைப் பெறலாம். மகிழ்ச்சியான திருமண வாழ்க்கையைப் பெற கணவனும் மனைவியும் சில தவறுகளைத் தவிர்க்க வேண்டும் என்று சாணக்கியர் கூறுகிறார்.
கிண்டல்
வாழ்க்கையில் மகிழ்ச்சியும் துக்கமும் சூரிய ஒளி மற்றும் நிழல் போன்றவை. ஒரு மனிதனின் வாழ்க்கையில் பிரச்சனைகள் வந்து கொண்டே இருக்கும். எனவே கணவனும் மனைவியும் ஒருவரையொருவர் எதிலும் பரிகாசம் செய்யக்கூடாது.
வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு இது முக்கிய காரணம் என்று சாணக்கியர் நம்புகிறார். உங்கள் வாழ்க்கையில் சின்ன சின்ன விஷயங்களை புறக்கணிக்க கற்றுக்கொள்ளுங்கள். இல்லையெனில், உங்கள் திருமண வாழ்க்கை விரைவில் முறிந்துவிடும்.
ஒருவருக்கொருவர் பேசிக்காமல் இருப்பது
உங்கள் திருமண வாழ்க்கையில் எத்தனை பிரச்சனைகள் வந்தாலும், நீங்கள் இருவரும் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ள வேண்டும். கணவன்-மனைவி இடையே சிறு சிறு சண்டைகள் தவிர்க்க முடியாதவை. அதனால நீங்க ரெண்டு பேரும் பேசுவதை உடனே நிறுத்திட விடக்கூடாது. அப்படிச் செய்தால் சிறிய சண்டை கூட பெரிய சண்டையாக மாறும்.
ஒத்துழைப்பு இல்லாமை
கணவன்-மனைவி இருவரும் சிறிய, பெரிய பணிகளில் ஒருவருக்கொருவர் ஒத்துழைக்க வேண்டும். பெரும்பாலானோர் வீட்டு வேலைகளை பெண்களிடம் மட்டுமே விட்டு விடுகின்றனர். இது முதலில் நன்றாகத் தோன்றினாலும் பின்னர் அது மோதலுக்கு வழிவகுக்கும். திருமண வாழ்வு வெற்றிபெற கணவன்-மனைவி இடையே ஒத்துழைப்பு அவசியம். வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்க, நாம் ஒருவருக்கொருவர் இணக்கமாக இருக்க வேண்டும்.
கோபம்
கோபம் என்பது கணவன்-மனைவி இடையேயான அனைத்து உறவுகளையும் முடிவுக்குக் கொண்டுவரும் ஒரு உணர்ச்சியாகும். கோபத்தைக் கட்டுப்படுத்த முடியாத ஒருவன் வாழ்க்கையில் ஏமாற்றத்தை சந்திக்கிறான். சாணக்கிய நீதியின் கூற்றுப்படி, ஆண்களும் பெண்களும் தங்கள் கோபத்தைக் குறைத்து, பிரச்சினையை அமைதியாக தீர்க்க வேண்டும்.
செலவுகள்
வாழ்க்கையை மகிழ்ச்சியாகவும், நிம்மதியாகவும் வாழ பணம் மிகவும் அவசியம். கணவன்-மனைவி இருவருக்கும் இடையே பணப் பயன்பாடு குறித்து தெளிவான புரிதல் இருந்தால் மட்டுமே மகிழ்ச்சியாக இருக்கும்.
தம்பதிகளில் ஒருவர் பண விஷயத்தில் ஏமாற்றினால், உங்கள் வாழக்கையில் விரைவில் பிரச்சினைகள் வந்துவிடும். உங்கள் குடும்பத்தின் வசதிக்காக செலவு செய்வது நல்லது. ஆனால் தேவையற்ற செலவுகள் நிதி சிக்கல்களைஅதிகரிக்கும். இதனால் கணவன்-மனைவி இடையே தகராறும் ஏற்படுகிறது.
ரகசியங்களை பகிர்ந்து கொள்வது
கணவன் மனைவி இடையேயான விஷயங்களில் ரகசியம் காக்கப்பட வேண்டும். அவர்கள் தங்கள் அந்தரங்க விஷயங்களை எப்போதும் ரகசியமாக வைத்திருக்க வேண்டும், மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளக்கூடாது. இது அவர்களின் துணைக்கு அவமானத்தை ஏற்படுத்துகிறது மற்றும் திருமண வாழ்க்கையில் சிக்கல்களை உருவாக்குகிறது.
ஒழுக்கக்கேடு
அனைவரும் ஒழுக்கத்துடன் வாழ வேண்டும். அதை மீறுவது உறவை சீர்குலைக்கும். ஆணோ, பெண்ணோ தங்கள் கண்ணியத்தை மறந்துவிட்டால், உறவு முறிவதற்கு அதிக நேரம் எடுத்துக் கொள்ளாது. சாணக்கிய நீதியின் கூற்றுப்படி கணவனும் மனைவியும் கண்ணியமாக நடந்து கொள்ள வேண்டும்.



Click it and Unblock the Notifications













