Latest Updates
-
வக்ரமாகும் சனிபகவான்: ஜூலை முதல் 138 நாட்களுக்கு இந்த 4 ராசிக்கு தொழில் வளரும், வருமானம் அதிகரிக்கும்! -
வெயில் காலத்தில் ஏன் அடிக்கடி சண்டை வருது? தம்பதிகளே, இந்த ஒரு விஷயத்தை கவனிங்க! -
திருமண சீசன்ல வெயில், மழையால் கவலையா? பட்ஜெட் வீணாகாம இருக்க இந்த 5 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க! -
வயசானாலும் இளமையா தெரியணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்குகளை போடுங்க.. -
1 கப் உளுந்து இருந்தா, ஈவ்னிங் டைம்-ல இப்படி செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
பாபா வாங்கா கணிப்புப்படி, அடுத்த 6 மாதம் இந்த 5 ராசிக்கு ராஜவாழ்க்கை தான்.. உங்க ராசி இதுல இருக்கா? -
ஜூன் மாத வானிலை மாற்றமா? இந்த 5 வாஸ்து செடிகள் இருந்தா வீடே குளிர்ச்சியாகவும் அதிர்ஷ்டமாகவும் மாறும்! -
அடிக்குற வெயிலுக்கு மாம்பழத்தை இப்படி சர்பத் செஞ்சு குடிங்க.. குளுகுளுன்னு இருக்கும்.. -
உங்களுக்கு மாரடைப்பு வரக்கூடாதா? அப்ப டாக்டர் சொல்ற இந்த டயட்டை ஃபாலோ பண்ணுங்க.. -
சுக்கிர பெயர்ச்சியால் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 5 ராசிக்காரர்களுக்கு செல்வம் இரட்டிப்பாகும்..
சாணக்கிய நீதி படி இந்த 6 பழக்கங்களை மாற்றாத வரை உங்க வாழ்க்கையில் கடைசிவரை வெற்றி கிட்டக்கூட வராதாம்...!
Chanakya Niti: சாணக்கியர் இந்தியாவின் ஒரு சிறந்த அறிஞர் மற்றும் பொருளாதார நிபுணர் என்பது சந்தேகமேயில்லை. சாணக்கியர் தனது நீதி சாஸ்திரத்தில் வாழ்க்கையின் பல அம்சங்களைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார். மனிதர்களின் சில பழக்கவழக்கங்களைப் பற்றி சாணக்கியர் கூறியுள்ளார்.
இந்தப் பண்புகளால், அவர்கள் செய்யும் வேலை பாழாகிறது. அத்தகைய இயல்பு காரணமாக, அவர்கள் வாழ்க்கையில் எப்போதும் அமைதியற்றவர்கள். ஒன்று அல்லது மற்றொன்று துன்பம் எப்போதும் மனதில் இருக்கும்.

மனதைக் கட்டுப்படுத்தாவிட்டால் பலவிதமான பிரச்சனைகள் அதிகரித்து வெற்றி வெகு தொலைவிற்கு சென்று விடும் சாணக்கியர் கூறுகிறார். ஒவ்வொரு நபரும் தனது வாழ்க்கை வசதிகள் நிறைந்ததாக இருக்க வேண்டும் மற்றும் தங்கள் கனவுகளை நிறைவேற்ற பணம் சம்பாதிக்க விரும்புகிறார்கள். ஆனால் அவர்களின் சில குணாதிசயங்கள் உங்கள் வாழ்க்கையில் வெற்றிக்கு தடையாக இருக்கலாம் என்று சாணக்கியர் கூறியுள்ளார்.
ஏமாற்றுதல்
சாணக்கியரின் கூற்றுப்படி, ஏமாற்று அல்லது மோசமான செயல்கள் மூலம் பணம் சம்பாதிப்பவர்களின் பணம் அவர்கள் எவ்வளவு ஜாக்கிரதையாக இருந்தாலும் அவர்கள் கையில் நீண்ட காலம் தங்காது. அது மட்டுமின்றி அவர்களை சுற்றி எப்போதும் பிரச்சினைகள் சூழ்ந்துகொண்டே இருக்கும். இதனால் அவர்கள் நிம்மதியின்றி தவிப்பார்கள்.
பொறாமை
பொறாமை என்னும் மோசமான குணம் கொண்டவர்களிடம் வேறு எத்தனை நல்ல குணங்கள் இருந்தாலும் அவர்களுக்கு சமூகத்தில் நல்ல பெயர் கிடைக்காது என்று சாணக்கியர் கூறுகிறார். மற்றவர்களின் வெற்றியைக் கண்டு பொறாமைப்படுபவர் ஒருபோதும் மகிழ்ச்சியாக இருக்க முடியாது. எனவே மற்றவர்களின் வெற்றியைப் பார்த்து பொறாமை கொள்ளாதீர்கள், உங்களிடம் இருப்பதை வைத்து நிறைவாக வாழுங்கள்.
அவமரியாதை
வாழ்க்கையில் வெற்றிபெற விரும்புபவர்கள் மற்றவர்களை எப்போதும் மதிக்க வேண்டும், அவர்களின் நிலையைக் கருத்தில் கொண்டு அவர்களை அவமதிக்கக் கூடாது. குறிப்பாக உங்கள் ஆசிரியர்கள், முதியவர்கள் மற்றும் ஏழைகளை ஒருபோதும் அவமதிக்காதீர்கள். இப்படி செய்பவர்கள் மீது லக்ஷ்மி தேவி கொள்கிறார். அதனால் அவர்கள் வாழ்க்கையில் வெற்றி ஒருபோதும் அவர்களை நெருங்காது.
தாமதமாக எழுந்திருப்பது
பகல் நேரங்களில் உறங்குபவர்களுக்கு எப்போதும் லட்சுமி தேவியின் அருள் கிடைக்காது. அதேபோல காலை சூரியன் உதித்தப் பிறகும் தூங்குபவர்கள் வாழ்நாள் முழுவதும் வறுமையை எதிகொள்ள வேண்டியிருக்கும் என்று சாணக்கியர் கூறுகிறார்.
மோசமான வார்த்தைகள்
பேச்சில் நிதானம் இல்லாதவர்களையோ, எப்போதும் கடுமையான வார்த்தைகளைப் பேசுபவர்களையோ லட்சுமி தேவி தன் அருகில் வைத்துக் கொள்ள விரும்ப மாட்டார் என்று சாணக்கியர் கூறுகிறார். ஏனென்றால், லட்சுமி தேவி பிறர் மனதை உடைப்பவர்களிடம் கோபப்படுகிறார். அப்படிப்பட்டவர்கள் வாழ்வில் எப்போதும் செல்வந்தராக முடியாது.
சோம்பேறித்தனம்
சாணக்கிய நீதியின் கூற்றுப்படி, சோம்பேறித்தனம் என்பது ஒரு நபரை வெற்றிபெற அனுமதிக்காத ஒரு மோசமான குணமாகும். ஒரு சோம்பேறி தன் வாழ்க்கையில் வரும் வாய்ப்புகளைப் பயன்படுத்தத் எப்போதும் தவறி விடுவார். இப்படிப்பட்டவர்கள் வாழ்நாள் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.



Click it and Unblock the Notifications
