பாபா வாங்கா கணிப்பு படி 2026-ல் நடக்கப்போகும் மோசமான பேரழிவு... இது நடந்தா அவ்வளவுதான்...!

பாபா வாங்கா உலகப்புகழ் பெற்ற தீர்க்கதரிசிகளில் ஒருவராவார். அவரது பல ஆபத்தான கணிப்புகள் பலித்ததால் அவரின் தீர்க்கதரிசனங்கள் எப்போதும் சுவாரஸ்யமானதாகவும், ஆர்வத்தைத் தூண்டுவதாகவும் உள்ளன. 2025 ஆம் ஆண்டு முழுவதும், உலகின் பல நாடுகளில் போர்கள், மோதல்கள் மற்றும் இயற்கை பேரழிவுகள் நடந்துள்ளன.

இஸ்ரேல்-ஹமாஸ் போர் முதல் ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானுக்கு இடையில் தற்போது நடந்து வரும் பதட்டங்கள், முடிவில்லாத ரஷ்யா-உக்ரைன் மோதல் வரை, இந்த ஆண்டு மனித குலத்திற்கு எதிரான பல மோசமான சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. மேலும் உலகெங்கிலும் உள்ள பல்வேறு நாடுகள் பேரழிவை ஏற்படுத்தும் வெள்ளம், பூகம்பங்கள் மற்றும் வெப்ப அலைகளால் பாதிக்கப்பட்டுள்ளன. ​​2025 ஆம் ஆண்டு முடியும் தருவாயில் இருப்பதால், 2026 ஆம் ஆண்டிற்கான கணிப்புகள் உலகம் முழுவதும் அச்சத்தை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளன.

Baba Vanga s Terrible Predictions for 2026

பண நெருக்கடி

பாபா வாங்கா கணித்துள்ள மிகவும் ஆபத்தான கணிப்புகளில் ஒன்று 2026 ஆம் ஆண்டில் ஒரு குறிப்பிடத்தக்க உலகளாவிய பொருளாதார நெருக்கடியை அவர் கணித்துள்ளதாகக் கூறப்படுகிறது. ஒரு நிதி பேரழிவை அவர் "Cash Crush" என்று கணித்துள்ளதாகக் கூறப்படுகிறது. 2026 ஆம் ஆண்டில், முழு உலகளாவிய நிதி அமைப்பும், பணம் முதல் டிஜிட்டல் நாணயம் என அனைத்தின் மதிப்பும் சரிந்துவிடும் என்று பாபா வாங்கா கணித்ததாக பிரிட்டிஷ் ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

உலகளாவிய சந்தை தொடர்ந்து நிலையற்றதாக இருப்பதால், பணவீக்கம் அதிகரித்து வருகிறது, அனைத்து விதமான கடன்களுக்கும் வட்டி விகிதங்கள் அதிகரித்து வருகின்றன, இதனால் அவரது தீர்க்கதரிசனம் மீண்டும் இப்போது கவலைக்குரியதாக இருக்கிறது. பாபா வாங்காவின் கணிப்பு ஒருவேளை உண்மையாகிவிட்டால் என்ன செய்வது என்பது குறித்து உலகம் பல்வேறு விவாதங்களையும், உரையாடல்களையும் நடத்தத் தொடங்கியுள்ளது.

பாபா வாங்கா கணிப்பு ஏன் அச்சத்தை கிளப்புகிறது?

பாபா வாங்காவின் "பண நெருக்கடி" பற்றிய கணிப்பு, உலகம் ஒரு கட்டத்தில் முழு பணம் சார்ந்த அமைப்பும் சரிவை அனுபவிக்கும் என்ற கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டது. இது பெரிய வங்கிகள் திவாலாவது, பேரழிவு தரும் நாணய மதிப்பிழப்பு மற்றும் உலகளவில் கடுமையான பண பற்றாக்குறைக்கு வழிவகுக்கும். இது நடந்தால், உலகளாவிய தாக்கம் ஏற்படும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர், குறிப்பாக ஏற்கனவே பொருளாதார மந்தநிலை அல்லது நிதிக் கொள்கைகளில் உறுதியற்ற தன்மையை எதிர்கொள்ளும் நாடுகளின் நிலையை இது மேலும் மோசமாக்கும்.

பாபா வாங்கா எப்போது இந்த பயங்கரமான கணிப்பை வெளியிட்டார்?

பல பொருளாதார வல்லுநர்கள் இந்த கணிப்பை போலி அறிவியல் என்று புறக்கணித்துள்ளனர். ஆனால் உலகம் முழுவதும் பல தொடர்ச்சியான மோதல்களில் சிக்கியுள்ளது, தொழில்நுட்பத் துறையில் பெரிய அளவிலான பணிநீக்கங்கள் நடந்து வருகின்றன, ரஷ்ய-உக்ரைன் மோதல் உலகளாவிய பொருளாதார நெருக்கடியை தொடர்ந்து அதிகரித்து வருகிறது, மேலும் கிரிப்டோகரன்சி முதலீட்டின் மதிப்பும் சரிந்து வருகிறது, இந்த காரணிகள் அனைத்தும் பாபா வாங்காவின் கணிப்பு பலிக்க வாய்ப்புள்ளது என்ற அச்சத்தை கிளப்பியுள்ளது.

உலகளாவிய மோதல்

பொருளாதார பிரச்சினை மட்டுமின்றி பாபா வாங்கா 2026-ல் ஒரு உலகளாவிய மோதல் ஏற்படும் என்று கணித்துள்ளார், இது மூன்றாம் உலகப் போராக இருக்கலாம் என்று பலரும் கருதுகிறார்கள். உலகளாவிய பதட்டங்கள் ஒரு பெரிய போருக்கு வழிவகுக்கும் என்று அவர் கணித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த காலகட்டத்தில் மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் பதட்டங்கள், ரஷ்யா-அமெரிக்கா மோதல் மற்றும் சீனா-தைவான் மோதல் போன்றவற்றால் அவரது கணிப்பு உண்மையாகிவிடும் என்று பலர் நம்புகிறார்கள்.

Desktop Bottom Promotion