Latest Updates
-
இன்றைய ராசிபலன் 01 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு நீண்டநாள் ஆசை நிறைவேறப்போகுதாம் -
August 2026 Numerology: உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. ஆகஸ்ட் மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
காரசாரமான பன்னீர் கிரேவி - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணி பாருங்க.. -
தலைமுடி வறண்டு பிரஷ் மாதிரி இருக்கா? அப்ப இந்த வாழைப்பழ ஹேர் மாஸ்க்கை போடுங்க.. -
ஆகஸ்ட் மாதம் நிகழும் ஆண்டின் 2-வது சூரிய கிரகணம்: இந்த 3 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்! -
வெண்டைக்காயை இப்படி கிரேவி செய்யுங்க.. சாதம், சப்பாத்திக்கு தாறுமாறா இருக்கும்.. -
தினமும் ஒரு கொய்யாப்பழம் சாப்பிடுவதால் உடலினுள் என்ன நடக்கும்? - விளக்கும் டாக்டர்! -
சிம்ம ராசியில் இருக்கும் கேதுவால் டிசம்பர் மாதத்திற்குள் இந்த 4 ராசிக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்காம்.. -
ரவா அடையும், ஹோட்டல் ஸ்டைல் தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 31 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் தேடிவரும் நாளாக இருக்குமாம்
அகமதாபாத் விமான விபத்து போல வரலாற்றில் நடந்த மோசமான விமான விபத்துகளும் அதற்கான காரணங்களும்...!
Ahmedabad Plane Crash: சமீப காலமாக விமான விபத்துகள் அதிகமாக நடந்து வருகின்றன. இன்று பிற்பகல் வியாழக் கிழமை அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து லண்டனுக்குச் சென்ற ஏர் இந்தியா விமானம் புறப்படும்போது விபத்துக்குள்ளானது. இந்த எதிர்பாராத விபத்தில் குறைந்தது 130 பேர் கொல்லப்பட்டிருக்கலாம் என்று மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகின்றன.
242 பயணிகளை ஏற்றிச் சென்ற விமானம் ஓடுபாதையில் வேகமாகச் செல்லத் தொடங்கியபோது அது கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்து விமானப் போக்குவரத்து பற்றிய அச்சத்தையும், கேள்வியையும் மீண்டும் எழுப்பியுள்ளது. இந்த பதிவில் இதுவரை விமான விபத்துகளால் ஏற்பட்ட மறக்க முடியாத அழிவுகளைப் பற்றி தெரிந்து கொள்ளலாம்.

நேபாள விமான விபத்து
பிரைவேட் ஏர்லைன்ஸைனா எட்டி ஏர்லைன்ஸால் இயக்கப்படும் ஏடிஆர் 72, ஜனவரி 15, 2023 அன்று பொகாராவில் தரையிறங்குவதற்கு சிறிது நேரத்திற்கு முன்பு விபத்துக்குள்ளானது, இது நேபாளத்தின் மிக மோசமான விமான விபத்துகளில் ஒன்றாகும். இந்த விமான விபத்தில் 72 பேர் கொல்லப்பட்டனர். இந்த விமானத்தில் இரண்டு குழந்தைகள், நான்கு பணியாளர்கள் மற்றும் 15 வெளிநாட்டினர் உட்பட 72 பேர் இருந்தனர். யாரும் உயிர் பிழைக்கவில்லை. அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட விசாரணைக் குழு வெளியிட்ட அறிக்கையின்படி, விமானிகள் தவறுதலாக மின்சாரத்தை துண்டித்ததே காரணமாக இருந்தது.
ஜப்பான் ஏர்லைன்ஸ் விமானம் 123 விபத்து
ஆகஸ்ட் 12, 1985 அன்று, டோக்கியோவிலிருந்து ஒசாகாவிற்குச் சென்ற JAL விமானம் 123 விபத்துக்குள்ளானது, அதில் பயணித்த 524 பேரில் 520 பேர் இறந்தனர். விமானம் புறப்படுவதற்கு முன்பு விமானத்தின் வால் பகுதி தொழில்நுட்ப வல்லுநர்களால் சரி செய்யப்பட்டது, இருப்பினும், விமானம் விபத்திற்கு உள்ளானது. இன்றுவரை இது ஜப்பானின் மோசமான விமான விபத்துகளில் ஒன்றாக உள்ளது.
மலேசியா ஏர்லைன்ஸ் விமானம் விபத்து
மலேசியா ஏர்லைன்ஸ் விமானம் 17 (MH17) என்பது ஆம்ஸ்டர்டாமில் இருந்து கோலாலம்பூருக்குச் செல்ல திட்டமிடப்பட்ட சர்வதேச பயணிகள் விமானமாகும், இது ஜூலை 17, 2014 அன்று உக்ரைனில் சுட்டு வீழ்த்தப்பட்டது, இதில் 298 பயணிகளும் கொல்லப்பட்டனர். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, 2022 ஆம் ஆண்டில், டச்சு நீதிமன்றம் அனைத்து பயணிகளையும் கொலை செய்த மூன்று பேரை குற்றவாளிகளாகக் அறிவித்தது. நீதிமன்றம் அவர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்தது.
ஏர் இந்தியா விமானம் 182
கனடாவிலிருந்து லண்டன் வழியாக இந்தியாவுக்கு வந்து கொண்டிருந்த ஏர் இந்தியா விமானம் ஜூன் 23, 1985 அன்று அயர்லாந்து கடற்கரையில் வெடித்ததில் அதில் இருந்த 329 பேரும் உயிரிழந்தனர். பயணிகளில் சோதனை செய்யப்பட்ட பையில் இருந்த வெடிகுண்டு திடீரென வெடித்தது. அதில் 24 இந்தியர்களும் 268 கனேடிய குடிமக்களும் இருந்தனர், அவர்களில் பெரும்பாலோர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள். ஆனால் கடலில் இருந்து வெறும் 131 உடல்கள் மட்டுமே மீட்கப்பட்டன.
சார்கி தாத்ரி நடுவானில் நடந்த விபத்து
உலகின் மிக மோசமான நடுவானில் நடந்த விமான விபத்து, இந்திய கிராமமான சார்கி தாத்ரியில் நிகழ்ந்தது, இந்த மோசமான விபத்தில் 349 பேர்இறந்தனர். இந்த மோதலில் பாதிக்கப்பட்டது சவுதி அரேபியா ஏர்லைன்ஸ் விமானம் SV763 ஆகும், இது இந்தியாவில் டெல்லியின் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட விமானமாகும்.
ஏர் பிரான்ஸ் விமானம் 447
ஜூன் 1, 2009 அன்று 228 பேருடன் சென்ற ஏர் பிரான்ஸ் விமானம் 447 திடீரென விபத்துக்குள்ளானது. பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவிலிருந்து பாரிஸுக்குச் செல்லும் வழியில் ஏர் பிரான்ஸ் விமானம் 447 அட்லாண்டிக் பெருங்கடலில் விழுந்து காணாமல் போனது. நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு, விமானப் போக்குவரத்துத் துறையின் இரண்டு மிகப்பெரிய நிறுவனங்கள் மீது இந்த விபத்து தொடர்பாக குற்றம் சுமத்தப்பட்டது. ஆனால் இந்த குற்றச்சாட்டுகளை இரண்டு நிறுவனங்களுமே மறுத்தன.
துருக்கிய ஏர்லைன்ஸ் விமானம் 981
மார்ச் 3, 1974 அன்று, துருக்கிய ஏர்லைன்ஸ் விமானம் 981, பிரான்சில் விபத்துக்குள்ளானது. விமானத்தின் சரக்கு கதவில் வடிவமைப்பு குறைபாடு இருந்ததால், பறக்கும் போது கதவு வெடித்துச் சிதறியது. அந்த காலகட்டத்தில், இந்த பேரழிவு ஐரோப்பிய வரலாற்றில் மிக மோசமான விமான விபத்தாக இருந்தது, இதில் 346 பேர் உயிரிழந்தனர்.
அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம் 191
மே 25, 1979 அன்று, அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம் 191, சிகாகோவில் விபத்துக்குள்ளானது. விமானத்தின் இடது இயந்திரம் புறப்படும் போது தொழில்நுட்பக் கோளாறுக்கு ஆளானது, இதன் விளைவாக விமானத்திலிருந்து இயந்திரம் விழுந்து விபத்துக்குள்ளானது. இன்றுவரை, இந்த விமான விபத்து அமெரிக்க வரலாற்றில் மிக மோசமான விமானப் பேரழிவாகும், இதில் 273 பேர் உயிரிழந்தனர்.



Click it and Unblock the Notifications
