Latest Updates
-
வெறும் தோசையை விட முட்டை தோசை ஏன் சிறந்தது? - விளக்கும் டாக்டர்.பிரகாஷ்மூர்த்தி! -
ஜூன் இறுதியில் உருவாகும் அங்காரக யோகம்: டிசம்பர் வரை இந்த 3 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்! -
1/2 கப் வேர்க்கடலை இருந்தா.. இப்படி சட்னி அரைங்க.. வீட்டுல எல்லாரும் எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 27 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு ராஜயோகம் கதவைத் தட்டப்போகுதாம் -
புதன் வக்ர பெயர்ச்சியால் ஜூன் இறுதியில் இந்த 3 ராசிக்கு பண வரவு அதிகரிக்கும்.. -
சுக்கிரன்-கேதுவின் இணைப்பால் ஜூலை மாதம் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
அடர்த்தியான தலைமுடியை பெற உதவும் செம்பருத்தி எண்ணெய் - எப்படி தயாரிக்கணும் தெரியுமா? -
இறந்தவர்கள் கனவில் வருவது அதிர்ஷ்டமா? எச்சரிக்கையா? கனவு சாஸ்திரம் கூறும் உண்மை என்ன? -
உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. அடுத்த ஜென்மம் என்னவா பிறப்பீங்க-ன்னு சொல்றோம்.. -
4 தக்காளி இருந்தா கோயம்புத்தூர் ஸ்டைலில் குருமா வைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு வேற லெவலில் இருக்கும்
அந்த இரண்டு வார்த்தைகள்!
ஒரு ஊரில் துறவி மடம் ஒன்று இருந்தது. அங்கு அமைதியையே பின்பற்ற வேண்டும். துறவிகள் யாரும் பேசவேக் கூடாது. ஆனால் அங்குள்ள துறவிகள் பத்து வருடத்திற்கு ஒரு முறை மட்டும் பேசலாம். அதுவும் இரண்டு வார்த்தைகள் மட்டுமே பேசலாம்.
அப்போது அங்கு பத்து வருடங்கள் தங்கிய பிறகு துறவி ஒருவர் குருவிடம் சென்றார். குரு "பத்து வருடம் ஆகிற்று, நீ பேச நினைக்கும் இரண்டு வார்த்தை என்ன?" என்று கேட்டார். அதற்கு அந்த துறவி "மெத்தை...கடினம்.." என்று தெரிவி்த்தார். அதற்கு குரு "அப்படியா!" என்று கேட்டார்.
மீண்டும் பத்து வருடம் கழித்து குருவிடம் சென்றார். "பத்து வருடம் ஆகிற்று, நீ பேச நினைக்கும் இரண்டு வார்த்தை என்ன?" என்று குரு மறுபடியும் கேட்டார். அதற்கு அந்த துறவி "உணவு...நாற்றம்..." என்று கூறினார். அதற்கு குரு "அப்படியா!" என்று மட்டும் கேட்டார்.
அந்த துறவி மறுபடியும் பத்து வருடத்திற்கு பிறகு குருவைப் பார்க்க போனார். குருவும் "இந்த பத்து வருடத்திற்கு நீ பேச நினைக்கும் இரண்டு வார்த்தை என்ன?" என்று கேட்டார். அதற்கு அந்த துறவி "நான் செல்கிறேன்" என்று சொன்னார். அதற்கு அந்த குரு "எனக்கு ஏன் என்று தெரியும். ஏனெனில் உனக்கு எப்போதும் புகார் கூறுவதே வழக்கமாக இருந்தது" என்று சொன்னார்.
துறவியாக ஆசைப்படுபவர்களுக்கு எந்த ஒரு தேவையும் இருக்கக் கூடாது. அவ்வாறு இருந்தால் அவர்கள் துறவியாக முடியாது என்பது தான் இந்த கதையின் கருத்து ஆகும்.



Click it and Unblock the Notifications