Latest Updates
-
30 ஆண்டுக்கு பின் சனியும்-செவ்வாயும் மீனத்தில் இணைவதால் இந்த 3 ராசிக்காரங்க டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
No Oil Noi Boil Recipe: அடுப்பே தேவைப்படாத ஆரோக்கியமான, சுவையான இட்லி மற்றும் சட்னி ரெசிபி...ட்ரை பண்ணுங்க...! -
1 வருடத்துக்கு பின் மேஷம் செல்லும் சுக்கிரன்: இந்த 3 ராசிக்காரங்க ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம்...! -
336 ஆண்டுகளுக்கு முன் சத்ரபதி சாம்பாஜி மகாராஜாக்கு 11 மார்ச் 'இதே' நாளில் என்ன நடந்தது தெரியுமா? -
4 பிரெட், 1 கப் தயிர் இருந்தா 10 நிமிஷத்துல இந்த மாதிரி வடை சுடுங்க... மொறுமொறுனு டேஸ்ட் பிரமாதமா இருக்கும்... -
இந்த 4 ராசி ஆண்கள் ரொம்ப பொஸசிவான கணவர்களாக இருப்பார்களாம்...இவங்க மனைவிகள்தான் பாவம்..உங்க ராசி இதுல இருக்கா? -
LPG Gas: தலைவிரித்தாடும் சிலிண்டர் தட்டுப்பாடு... சிலிண்டர் சீக்கிரம் தீராம இருக்க இப்படி சமையல் பண்ணுங்க...! -
கோதுமை ரவா தோசையும்.. புதினா சட்னியும்..- 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஉளைச்சலான நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது...
அந்த இரண்டு வார்த்தைகள்!
ஒரு ஊரில் துறவி மடம் ஒன்று இருந்தது. அங்கு அமைதியையே பின்பற்ற வேண்டும். துறவிகள் யாரும் பேசவேக் கூடாது. ஆனால் அங்குள்ள துறவிகள் பத்து வருடத்திற்கு ஒரு முறை மட்டும் பேசலாம். அதுவும் இரண்டு வார்த்தைகள் மட்டுமே பேசலாம்.
அப்போது அங்கு பத்து வருடங்கள் தங்கிய பிறகு துறவி ஒருவர் குருவிடம் சென்றார். குரு "பத்து வருடம் ஆகிற்று, நீ பேச நினைக்கும் இரண்டு வார்த்தை என்ன?" என்று கேட்டார். அதற்கு அந்த துறவி "மெத்தை...கடினம்.." என்று தெரிவி்த்தார். அதற்கு குரு "அப்படியா!" என்று கேட்டார்.
மீண்டும் பத்து வருடம் கழித்து குருவிடம் சென்றார். "பத்து வருடம் ஆகிற்று, நீ பேச நினைக்கும் இரண்டு வார்த்தை என்ன?" என்று குரு மறுபடியும் கேட்டார். அதற்கு அந்த துறவி "உணவு...நாற்றம்..." என்று கூறினார். அதற்கு குரு "அப்படியா!" என்று மட்டும் கேட்டார்.
அந்த துறவி மறுபடியும் பத்து வருடத்திற்கு பிறகு குருவைப் பார்க்க போனார். குருவும் "இந்த பத்து வருடத்திற்கு நீ பேச நினைக்கும் இரண்டு வார்த்தை என்ன?" என்று கேட்டார். அதற்கு அந்த துறவி "நான் செல்கிறேன்" என்று சொன்னார். அதற்கு அந்த குரு "எனக்கு ஏன் என்று தெரியும். ஏனெனில் உனக்கு எப்போதும் புகார் கூறுவதே வழக்கமாக இருந்தது" என்று சொன்னார்.
துறவியாக ஆசைப்படுபவர்களுக்கு எந்த ஒரு தேவையும் இருக்கக் கூடாது. அவ்வாறு இருந்தால் அவர்கள் துறவியாக முடியாது என்பது தான் இந்த கதையின் கருத்து ஆகும்.



Click it and Unblock the Notifications











