Latest Updates
-
மிளகாய் கிள்ளிப் போட்ட சாம்பார் - 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
கொளுத்தும் வெயிலில் வீடு சூடாக இருக்கா? இந்த 3 வாஸ்து மாற்றங்களைச் செஞ்சா வீடு ஜில்லென்று மாறும்! -
உங்களுக்கு குடல் புற்றுநோய் வரக்கூடாதா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 7 உணவுகளை அடிக்கடி சாப்பிடுங்க போதும்..! -
சனி ஜெயந்தி நாளில் 2 முறை நடக்கும் சந்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு செல்வமும், வெற்றியும் குவியப்போகுது! -
வாரம் ஒருமுறை இந்த கம்பு அடை தோசையை செஞ்சு சாப்பிடுங்க.. எலும்பு பிரச்சனையே வராது... -
இன்றைய ராசிபலன் 13 மே 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு மனஅழுத்தம் நிறைந்த நாளாக இருக்குமாம் -
சனிபகவான் ரேவதி நட்சத்திரத்திற்கு செல்வதால் துரதிர்ஷ்டத்தையும், ஆபத்துகளையும் சந்திக்கப்போகும் 3 ராசிகள் -
சௌ சௌ வாங்குனா இந்த மாதிரி வித்தியாசமா சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும் -
ஹன்டா வைரஸ் Vs. கொரோனா வைரஸ்: இந்த இரண்டில் எது மிகவும் ஆபத்தானது? அவற்றின் அறிகுறிகள் என்னென்ன தெரியுமா? -
விஜய் சிஎம் ஆனதும் த்ரிஷா போட்ட அந்த ஒரு பதிவு... பின்னணியில் இருக்கும் மர்மம் என்ன?
அந்த இரண்டு வார்த்தைகள்!
ஒரு ஊரில் துறவி மடம் ஒன்று இருந்தது. அங்கு அமைதியையே பின்பற்ற வேண்டும். துறவிகள் யாரும் பேசவேக் கூடாது. ஆனால் அங்குள்ள துறவிகள் பத்து வருடத்திற்கு ஒரு முறை மட்டும் பேசலாம். அதுவும் இரண்டு வார்த்தைகள் மட்டுமே பேசலாம்.
அப்போது அங்கு பத்து வருடங்கள் தங்கிய பிறகு துறவி ஒருவர் குருவிடம் சென்றார். குரு "பத்து வருடம் ஆகிற்று, நீ பேச நினைக்கும் இரண்டு வார்த்தை என்ன?" என்று கேட்டார். அதற்கு அந்த துறவி "மெத்தை...கடினம்.." என்று தெரிவி்த்தார். அதற்கு குரு "அப்படியா!" என்று கேட்டார்.
மீண்டும் பத்து வருடம் கழித்து குருவிடம் சென்றார். "பத்து வருடம் ஆகிற்று, நீ பேச நினைக்கும் இரண்டு வார்த்தை என்ன?" என்று குரு மறுபடியும் கேட்டார். அதற்கு அந்த துறவி "உணவு...நாற்றம்..." என்று கூறினார். அதற்கு குரு "அப்படியா!" என்று மட்டும் கேட்டார்.
அந்த துறவி மறுபடியும் பத்து வருடத்திற்கு பிறகு குருவைப் பார்க்க போனார். குருவும் "இந்த பத்து வருடத்திற்கு நீ பேச நினைக்கும் இரண்டு வார்த்தை என்ன?" என்று கேட்டார். அதற்கு அந்த துறவி "நான் செல்கிறேன்" என்று சொன்னார். அதற்கு அந்த குரு "எனக்கு ஏன் என்று தெரியும். ஏனெனில் உனக்கு எப்போதும் புகார் கூறுவதே வழக்கமாக இருந்தது" என்று சொன்னார்.
துறவியாக ஆசைப்படுபவர்களுக்கு எந்த ஒரு தேவையும் இருக்கக் கூடாது. அவ்வாறு இருந்தால் அவர்கள் துறவியாக முடியாது என்பது தான் இந்த கதையின் கருத்து ஆகும்.



Click it and Unblock the Notifications