Latest Updates
-
சாணக்கிய நீதி படி பெண்கள் இந்த 5 விஷயங்களில் ஆண்களை விட பலமடங்கு உயர்ந்தவர்களாக இருப்பார்களாம் -
அபூர்வமான துவித்வாதச யோகம்: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பண வரவு அதிகரிக்கும்.. -
1 கப் ரவையும், 1/2 கப் அவலும் இருந்தா.. காலையில் 10 நிமிடத்தில் இந்த டிபன் காம்போவை செய்யுங்க.. -
இன்றைய ராசிபலன் 12 ஜூன் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
சந்திர மங்கள யோகம்: இன்று முதல் இந்த 4 ராசிக்கு பண வரவு அதிகரிக்கும், முன்னேற்ற பாதை திறக்கும்.. -
இட்லிக்கு எப்பவும் சட்னி அரைக்காம.. இப்படி டிபன் சாம்பார் செய்யுங்க.. கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
இந்த படத்துல உங்களுக்கு முதலில் என்ன தெரிஞ்சுது சொல்லுங்க.. உங்க மைண்ட்செட் என்னன்னு சொல்றோம்.. -
உங்க வாயைச் சுற்றி கருப்பா இருக்கா? அப்ப கருப்பு உளுந்து வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
லாப திருஷ்டி யோகத்தால் இந்த 4 ராசிக்காரர்களுக்கு தொழிலில் இரட்டிப்பு லாபம் கிடைக்கப்போகுது..! -
1 கப் தட்டப்பயறும், 2 உருளைக்கிழங்கும் இருந்தா.. இப்படி கிரேவி செய்யுங்க.. எல்லாத்துக்கும் செமயா இருக்கும்..
விதியின் கதை
போர்க்களத்தில் ஜப்பானிய வீரர்களிடம் மறுநாள் போரில் எப்படி தாக்குதல் நடத்துவது என்பதைப் பற்றி படைத் தளபதி உரையாற்றிகொண்டிருந்தார். எதிரணியினரை விட இவரது அணியில் ணியில் குறைந்த வீரர்களே இருந்தனர். தளபதிக்கு வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை இருந்தாலும், போர் வீரர்களிடையே அச்சமும், சந்தேகமும் சூழ்ந்திருந்தது. அவர்களிடையே நம்பிக்கையை அதிகரிக்கச் செய்ய என்ன செய்வது என்று யோசித்தான் தளபதி.
அனைவரையும் அழைத்தான். " நண்பர்களே, நாம் போரின் இறுதிக் கட்டத்தை நெருங்கி விட்டோம். தாக்குதலைத் தீவிரப் படுத்தினால் வெற்றி நமதே. ஆனாலும் குறைந்த வீரர்களைக் கொண்டு எவ்வாறு வெற்றி பெறுவது என்ற சந்தேகம் நம்மிடையே சூழ்ந்துள்ளது. அதனால் கடவுளை வேண்டிக் கொண்டு இந்த நாணயத்தை சுண்டுகிறேன். தலை விழுந்தால் தாக்குதலைத் தொடரலாம். வெற்றி நமதே. பூ விழுந்தால் தோல்வி. நாம் சரணடைந்து விடலாம்" என்றான்."தலைவிதியை நாணயம் தீர்மானிக்கட்டும்" என்றான்.
அனைவரும் ஆமோதித்தனர். கடவுளை வேண்டியவாறே சுண்டினான். விழுந்தது தலை. வீரர்கள் அனைவருக்கும் மகிழ்ச்சி. தன்னம்பிக்கை பொங்க தாக்குதலைத் தொடர்ந்தனர். வெற்றி வாகை சூடினார்கள்.
போர் முடிந்ததும் தளபதியின் உதவியாளன் , "தலை விதியை யாராலும் மாற்ற முடியாது. நாணயம் காட்டியது சரியாக இருக்கிறது"என்றான். தளபதியும் சிரித்துக் கொண்டே சொன்னான் "சரியாகச் சொன்னாய்" என்றவாறே, நாணயத்தை அவனிடம் காட்டினான். "நாணயத்தின் இருபக்கங்களும் தலை"
கருத்து: நம்பிக்கை தான் வெற்றியைத் தருகிறது.



Click it and Unblock the Notifications