Latest Updates
-
LPG Gas: தலைவிரித்தாடும் சிலிண்டர் தட்டுப்பாடு... சிலிண்டர் சீக்கிரம் தீராம இருக்க இப்படி சமையல் பண்ணுங்க...! -
கோதுமை ரவா தோசையும்.. புதினா சட்னியும்..- 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஉளைச்சலான நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது...
எண்ணமும்... கண்ணோட்டமும்...!!
ஒரு ஊரில் ஹோகென் எனும் ஜென் மாஸ்டர் கோவிலில் வசித்து வந்தார். அப்போது அந்த வழியாக வந்த நான்கு துறவிகள் ஹோகெனிடம், ஒரு நாள் இரவு தங்குவதற்கு அனுமதி கேட்டனர். அவரும் அனுமதி வழங்கினார்.
அன்று இரவு கடும் குளிராக இருந்தது. எனவே, கோயிலுக்கு வெளியில் தீயை மூட்டி குளிர் காய்ந்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென அவர்களுக்குள் ஒரு விவாதம் ஏற்பட்டது. அது அக உண்மை பெரிதா, புற உண்மை பெரிதா என்பதுதான்.
இதனிடையே, துறவிகள் வெகு நேரமாகியும் வராததால், ஹொகென் மாஸ்டர் அவர்களை தேடி வெளியில் வந்தார். அப்போது அவர்களுக்குள் நடந்த வாக்குவாதத்தை பார்த்து அருகில் வந்தார். துறவிகள் நால்வரும் அக உண்மை மற்றும் புற உண்மை பற்றிய விவாதித்து கொண்டிருந்ததை கண்டார்.
அப்போது அவர் "அங்கே ஒரு பெரிய கல் இருக்கிறது. அதன் உண்மையான நிலை பற்றியது, உங்கள் புத்தியின் உள்ளே இருக்கிறதா அல்லது வெளியே இருக்கிறதா?" என்று கேட்டார்.
அந்த நால்வரில் ஒருவர் "அந்த கல்லின் உண்மை என் புத்தியின் உள்ளே இருக்கிறத; ஏனெனில் புத்தமதத்தின் படி ஒவ்வொரு பொருளும், ஒருவரின் மனதின் உள்ளே பொருளாக்கப்படுகிறது," என்றார்.
அதற்கு ஹோகென் "அப்படியென்றால் அந்த கல்லின் பாரத்தை உன் புத்தி உணர வேண்டுமே!" என்றார்.
ஆகவே "எந்த ஒரு பொருளைப் பற்றி சொன்னாலும் அதைப்பற்றி, அதன் தன்மைகளைப் பற்றி நம் மனதில் பதிந்து ஒரு எண்ணம் இருக்கும். எனவே, புற உண்மையை அக உண்மை அறிந்து வைத்திருக்க வேண்டும் என்பது புத்தமதத்தின் கருத்தாக இருக்கிறது.



Click it and Unblock the Notifications











