Latest Updates
-
மிளகாய் கிள்ளிப் போட்ட சாம்பார் - 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
கொளுத்தும் வெயிலில் வீடு சூடாக இருக்கா? இந்த 3 வாஸ்து மாற்றங்களைச் செஞ்சா வீடு ஜில்லென்று மாறும்! -
உங்களுக்கு குடல் புற்றுநோய் வரக்கூடாதா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 7 உணவுகளை அடிக்கடி சாப்பிடுங்க போதும்..! -
சனி ஜெயந்தி நாளில் 2 முறை நடக்கும் சந்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு செல்வமும், வெற்றியும் குவியப்போகுது! -
வாரம் ஒருமுறை இந்த கம்பு அடை தோசையை செஞ்சு சாப்பிடுங்க.. எலும்பு பிரச்சனையே வராது... -
இன்றைய ராசிபலன் 13 மே 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு மனஅழுத்தம் நிறைந்த நாளாக இருக்குமாம் -
சனிபகவான் ரேவதி நட்சத்திரத்திற்கு செல்வதால் துரதிர்ஷ்டத்தையும், ஆபத்துகளையும் சந்திக்கப்போகும் 3 ராசிகள் -
சௌ சௌ வாங்குனா இந்த மாதிரி வித்தியாசமா சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும் -
ஹன்டா வைரஸ் Vs. கொரோனா வைரஸ்: இந்த இரண்டில் எது மிகவும் ஆபத்தானது? அவற்றின் அறிகுறிகள் என்னென்ன தெரியுமா? -
விஜய் சிஎம் ஆனதும் த்ரிஷா போட்ட அந்த ஒரு பதிவு... பின்னணியில் இருக்கும் மர்மம் என்ன?
எளிய கேள்வி
வஜ்ர சூத்திரம் என்று அறியப்படும் மஹாயான பௌத்த நெறி சாஸ்திரத்தில் வல்லமை படைத்த துறவி ஒருவர் இருந்தார். பல துறவிகளும், குருமார்களும் ஏன் சாமான்யர்களும் கூட அவரை அணுகி அந்த சாஸ்திரத்தின் அம்சங்களையும் பொருளையும் கேட்டு அறிந்து தெளிந்தனர். அந்த காலகட்டத்தில் புத்தகங்கள் விலை மதிப்பில்லாத பொக்கிஷமாக கருதப்பட்ட்தால் அவரிடம் இருந்த அந்த ஒரே பிரதியை (வஜ்ர சூத்திரம்) அவர் தன்னிடம் இருந்த பையில் பாதுகாத்து வைத்து முதுகில் சுமந்தே திரிந்தார். ஒரு நாள் அவர் ஒரு மலைப்பாதையில் களைத்த நிலையில் ஏறிக்கொண்டிருந்தபோது, ஒரு மூதாட்டி தேநீர் மற்றும் ரொட்டி விற்றுக் கொண்டிருந்த கடையை சென்றடைந்தார்.
மிகவும் பசியுடன் இருந்த அந்த துறவியிடம் உணவு வாங்குவதற்கு பணம் ஏதும் இல்லாதிருந்தது. ஆகவே தன் பசியை எப்படியாவது தீர்ப்பதற்கு ஒரு வழியை யோசித்த அவர் அந்த முதிய பெண்மணியை பார்த்து "எனக்கு தேநீரும் ரொட்டியும் தந்தால் நான் உனக்கு விலை மதிப்பற்ற வஜ்ர சூத்திர நூலை தருகிறேன்" என்று வேண்டினார்.
வஜ்ர சூத்திரம் என்று அறியப்படும் சாஸ்திரத்தை பற்றியோ, அந்த நூலை பற்றியோ எதுவுமே கேள்விப்பட்டிராத அந்த கல்வியறிவற்ற முதியவள் துறவியை பார்த்து " துறவியே, நான் ஒரு எளிய கேள்வி கேட்பேன் அதற்கு நீர் பதில் சொன்னாலே போதும் நான் உமக்கு தேநீரும் ரொட்டியும் தருவேன்" என்று சொன்னாள்.
அதையடுத்து அந்த மூதாட்டி தன் கேள்வியை இப்படி கேட்டாள் - " நீர் இந்த ரொட்டியை உண்ணும்போது உங்கள் கடந்த கால மனத்தால் உண்ணுவீர்களா? நிகழ் காலத்தைச் சேர்ந்த மனத்தால் உண்ணுவீர்களா? அல்லது எதிர்கால மனத்தால் உண்ணுவீர்களா?"
முதியவள் கேட்ட அந்த கேள்விக்கு துறவியால் பதில் சொல்ல முடியாததால் வஜ்ர சூத்திர நூலை எடுத்து அதை புரட்டி அதில் பதிலை தேட முயன்றார். இப்படி அந்த கேள்விக்கான பதிலுக்காக அவர் அந்த நூலை வாசித்துக்கொண்டே இருந்ததில் பொழுதும் சாய்ந்து மாலையாகி விட்டது. கடையை மூடி தன் பொருட்களையெல்லாம் எடுத்துக்கொண்டு கிளம்பிய அந்த முதியவள் துறவியை பார்த்து " நீர் ஒரு அறிவில்லாத துறவி, இந்த ரொட்டிகளை உம் வாயால் சாப்பிடும்!" என்று சொல்லி அந்த துறவியை குழப்பத்தில் ஆழ்த்திவிட்டு சென்றாள்.



Click it and Unblock the Notifications