Latest Updates
-
அடுத்த 6 மாதம் இந்த 3 ராசிக்காரங்க தொழில் மற்றும் பண விஷயத்தில் கவனமா இருக்கணும்.. -
Actor Bhagyaraj Death: வாக்கிங் சென்ற பின் காலமான நடிகர் பாக்யராஜ்! உண்மையில் வாக்கிங் மாரடைப்பை ஏற்படுத்துமா? -
சத்தான.. எலுமிச்சை இஞ்சி ரசம் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
வெறும் தோசையை விட முட்டை தோசை ஏன் சிறந்தது? - விளக்கும் டாக்டர்.பிரகாஷ்மூர்த்தி! -
ஜூன் இறுதியில் உருவாகும் அங்காரக யோகம்: டிசம்பர் வரை இந்த 3 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்! -
1/2 கப் வேர்க்கடலை இருந்தா.. இப்படி சட்னி அரைங்க.. வீட்டுல எல்லாரும் எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 27 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு ராஜயோகம் கதவைத் தட்டப்போகுதாம் -
புதன் வக்ர பெயர்ச்சியால் ஜூன் இறுதியில் இந்த 3 ராசிக்கு பண வரவு அதிகரிக்கும்.. -
சுக்கிரன்-கேதுவின் இணைப்பால் ஜூலை மாதம் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
அடர்த்தியான தலைமுடியை பெற உதவும் செம்பருத்தி எண்ணெய் - எப்படி தயாரிக்கணும் தெரியுமா?
எளிய கேள்வி
வஜ்ர சூத்திரம் என்று அறியப்படும் மஹாயான பௌத்த நெறி சாஸ்திரத்தில் வல்லமை படைத்த துறவி ஒருவர் இருந்தார். பல துறவிகளும், குருமார்களும் ஏன் சாமான்யர்களும் கூட அவரை அணுகி அந்த சாஸ்திரத்தின் அம்சங்களையும் பொருளையும் கேட்டு அறிந்து தெளிந்தனர். அந்த காலகட்டத்தில் புத்தகங்கள் விலை மதிப்பில்லாத பொக்கிஷமாக கருதப்பட்ட்தால் அவரிடம் இருந்த அந்த ஒரே பிரதியை (வஜ்ர சூத்திரம்) அவர் தன்னிடம் இருந்த பையில் பாதுகாத்து வைத்து முதுகில் சுமந்தே திரிந்தார். ஒரு நாள் அவர் ஒரு மலைப்பாதையில் களைத்த நிலையில் ஏறிக்கொண்டிருந்தபோது, ஒரு மூதாட்டி தேநீர் மற்றும் ரொட்டி விற்றுக் கொண்டிருந்த கடையை சென்றடைந்தார்.
மிகவும் பசியுடன் இருந்த அந்த துறவியிடம் உணவு வாங்குவதற்கு பணம் ஏதும் இல்லாதிருந்தது. ஆகவே தன் பசியை எப்படியாவது தீர்ப்பதற்கு ஒரு வழியை யோசித்த அவர் அந்த முதிய பெண்மணியை பார்த்து "எனக்கு தேநீரும் ரொட்டியும் தந்தால் நான் உனக்கு விலை மதிப்பற்ற வஜ்ர சூத்திர நூலை தருகிறேன்" என்று வேண்டினார்.
வஜ்ர சூத்திரம் என்று அறியப்படும் சாஸ்திரத்தை பற்றியோ, அந்த நூலை பற்றியோ எதுவுமே கேள்விப்பட்டிராத அந்த கல்வியறிவற்ற முதியவள் துறவியை பார்த்து " துறவியே, நான் ஒரு எளிய கேள்வி கேட்பேன் அதற்கு நீர் பதில் சொன்னாலே போதும் நான் உமக்கு தேநீரும் ரொட்டியும் தருவேன்" என்று சொன்னாள்.
அதையடுத்து அந்த மூதாட்டி தன் கேள்வியை இப்படி கேட்டாள் - " நீர் இந்த ரொட்டியை உண்ணும்போது உங்கள் கடந்த கால மனத்தால் உண்ணுவீர்களா? நிகழ் காலத்தைச் சேர்ந்த மனத்தால் உண்ணுவீர்களா? அல்லது எதிர்கால மனத்தால் உண்ணுவீர்களா?"
முதியவள் கேட்ட அந்த கேள்விக்கு துறவியால் பதில் சொல்ல முடியாததால் வஜ்ர சூத்திர நூலை எடுத்து அதை புரட்டி அதில் பதிலை தேட முயன்றார். இப்படி அந்த கேள்விக்கான பதிலுக்காக அவர் அந்த நூலை வாசித்துக்கொண்டே இருந்ததில் பொழுதும் சாய்ந்து மாலையாகி விட்டது. கடையை மூடி தன் பொருட்களையெல்லாம் எடுத்துக்கொண்டு கிளம்பிய அந்த முதியவள் துறவியை பார்த்து " நீர் ஒரு அறிவில்லாத துறவி, இந்த ரொட்டிகளை உம் வாயால் சாப்பிடும்!" என்று சொல்லி அந்த துறவியை குழப்பத்தில் ஆழ்த்திவிட்டு சென்றாள்.



Click it and Unblock the Notifications