கை உணர்த்திய கதை!!!

By Maha

தம்பா மாகாணத்தில் மொகுசென் என்ற குரு, ஒரு கோவிலில் வாழ்ந்து வந்தார். அவரை பின்பற்றும் பக்தர்களுள் ஒருவன் குருவை பார்க்கச் சென்றான். அப்போது குருவிடம் அவன் தன் மனைவியின் கஞ்சத்தனத்தை பற்றி புகார் கூறினான். பிகுரு அவனை அழைத்து "உன் மனைவியை இங்கு அழைத்து வா" என்று கூறினார்.

குரு அவன் மனைவியிடம் ஒரு சிறிய சோதனை செய்தார். அது என்னவென்றால், அவன் மனைவியிடம் தனது தன் விரல்கள் அனைத்தையும் உள்ளடக்கி கைகளை நீட்டி காண்பித்து இது என்ன என்று கேட்டார். அதற்கு அவள் "இது ஒரு குறைபாடு" என்று கூறினாள்.

பின்பு அவர் விரல்களை விரித்து கைகளை சதுரமாக செய்து "இது போல் இருந்தால் என்ன?" என்று மீண்டும் கேட்டார். அவள் "இது வேறு வகையான குறைபாடு" என்று சொன்னாள்.

பிறகு அந்த குரு அவளிடம் "நீங்கள் இந்த அளவிற்கு புரிந்து கொண்டிருப்பதை கண்டு மகிழ்கிறேன், நீங்கள் ஒரு நல்ல மனைவி" என்று அவளை ஊக்குவித்து கூறினார். மேலும் அவர் அவளிடம் "நம்மிடம் எவ்வளவு இருக்கிறது என்பது முக்கியமல்ல. நம்மிடம் இருப்பதை கொண்டு நாம் என்ன செய்கிறோம் என்பது தான் முக்கியம்" என்றும் சொல்லி, நான் கேட்ட அனைத்திற்கும் சரியாக புரிந்து கொண்டு பதிலளித்த நீங்கள், ஏன் வாழ்க்கையில் செலவழிப்பதை பெரிய விஷயமாக நினைக்கிறீர்" என்று கூறி சென்றுவிட்டார்.

அதன்பின்பு கணவன் மனைவி இருவரும் சேமிப்பையும், செலவு செய்வதையும் புரிந்துகொண்டு சந்தோசமாக வாழ்ந்து வந்தனர்.

Story first published: Wednesday, August 1, 2012, 11:25 [IST]
Desktop Bottom Promotion