Latest Updates
-
இந்த 5 உணவுகள் உங்கள் உடலில் துர்நாற்றத்தை ஏற்படுத்தி சங்கடமாக உணர வைக்குமாம் - பார்த்து சாப்பிடுங்க -
வாஸ்து செடிகள்: கோடை வெயிலில் வீட்டை குளிர்ச்சியாக வைத்து அதிர்ஷ்டத்தை அள்ளுவது எப்படி? -
சிக்கன் பிரியாணியை விட சூப்பரா இருக்கும் ஆம்பூர் ஸ்டைல் சோயா பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க -
சனிபகவானின் வக்ர பெயர்ச்சியால் 138 நாட்களுக்கு ஜெயிக்கிற குதிரையா மாறப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
சீதா நவமி: உங்கள் வீட்டில் இந்த மாற்றங்களைச் செய்தா பணமழை கொட்டுமா? அதிர்ஷ்டம் தரும் வாஸ்து ரகசியம்! -
கோடையில் இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க.. உடல் எடையும் குறையும், உடல் சூடும் தணியும்.. -
இன்றைய ராசிபலன் 25 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ராஜயோகம் கூடிவரப்போகுதாம் -
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்!
தியானத்தில் பூனை
ஒரு ஊரில் ஆன்மீக மாஸ்டர் இருந்தார். அவர் தினமும் மாலையில் தனது சீடர்களுடன் சேர்ந்து, தியானம் செய்வதை வழக்கமாக கொண்டிருந்தார். அப்போது அவர் தியானம் செய்கையில், அங்கு இருக்கும் ஒரு பூனை அவர் பக்கத்தில் வந்து சப்தம் எழுப்பி, அவரது தியானத்திற்கு இடையூறு ஏற்படுத்திக் கொண்டே இருந்தது. அதனால் அவர் மாலை வேளையில் அந்த பூனையை தியானம் செய்யும் போது மட்டும் கட்டிப் போடுமாறு உத்தரவிட்டார்.
ஆண்டுகள் கழித்து அந்த மாஸ்டர் இறந்துவிட்டார். இருப்பினும் அவரது சீடர்கள் தியானம் செய்யும் போதெல்லாம், அந்த பூனையை கட்டிப் போட்டே தியானம் செய்வார்கள். சில நாட்கள் கழித்து அந்த பூனையும் இறந்துவிட்டது. இருப்பினும் அவர்கள் மற்றொரு பூனையை கொண்டு வந்து கட்டிப் போட்டு தியானம் செய்தார்கள்.
மேலும் பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு, அந்த மாஸ்டரின் வம்சாவளிகள் தியானம் செய்யும் போதெல்லாம் பூனையை கட்டிப் போட்டு தியானம் செய்வதை பரம்பரை வழக்கமாக கொண்டுவிட்டனர்.
இக்கதையில் இருந்து, அந்த மாஸ்டர் எதற்கு அந்த பூனையை கட்ட சொன்னார் என்று தெரியாத அந்த சீடர்கள், அவர் கூறிய ஒரு காரணத்தினால் அதனை தொடர்ந்து வந்து, பரம்பரை வழக்கமாக்கிக் கொண்டனர். ஆகவே "எதை செய்யும் போதும் எதற்கு செய்ய வேண்டும் என்பதை நன்கு தெரிந்து கொண்டு பிறகு செய்ய வேண்டும்" என்பது நன்கு புரிகிறது.



Click it and Unblock the Notifications