Latest Updates
-
அடுத்த 6 மாதம் இந்த 3 ராசிக்காரங்க தொழில் மற்றும் பண விஷயத்தில் கவனமா இருக்கணும்.. -
Actor Bhagyaraj Death: வாக்கிங் சென்ற பின் காலமான நடிகர் பாக்யராஜ்! உண்மையில் வாக்கிங் மாரடைப்பை ஏற்படுத்துமா? -
சத்தான.. எலுமிச்சை இஞ்சி ரசம் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
வெறும் தோசையை விட முட்டை தோசை ஏன் சிறந்தது? - விளக்கும் டாக்டர்.பிரகாஷ்மூர்த்தி! -
ஜூன் இறுதியில் உருவாகும் அங்காரக யோகம்: டிசம்பர் வரை இந்த 3 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்! -
1/2 கப் வேர்க்கடலை இருந்தா.. இப்படி சட்னி அரைங்க.. வீட்டுல எல்லாரும் எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 27 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு ராஜயோகம் கதவைத் தட்டப்போகுதாம் -
புதன் வக்ர பெயர்ச்சியால் ஜூன் இறுதியில் இந்த 3 ராசிக்கு பண வரவு அதிகரிக்கும்.. -
சுக்கிரன்-கேதுவின் இணைப்பால் ஜூலை மாதம் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
அடர்த்தியான தலைமுடியை பெற உதவும் செம்பருத்தி எண்ணெய் - எப்படி தயாரிக்கணும் தெரியுமா?
ஜென் குருவும், பகல் தூக்கமும்
ஸோயேன் ஷாகு என்ற ஜென் குரு தம் சீடர்களுக்கு அளவற்ற ஆன்மிக தத்துவங்களையும் ஞானத்தையும் கற்பித்தளித்த பின் தனது 61வது வயதில் இவ்வுலகை விட்டு மறைந்தார். அவருடைய சீடர்களுக்கு கோடைக்காலத்தின் நடுவில் பகல் நேரத்தில் தூங்குவது வழக்கமாக இருந்தது. ஸோயேன் அவர் வாழ்ந்த காலத்தில் இதை ஒருபோதும் கண்டு கொண்டதில்லை. ஆனால் அவர் ஒரு கணமும் பகல் பொழுதில் தூங்கியதில்லை.
ஸோயேன் தனது 12வது வயதிலேயே டெண்டாய் ஆன்மீக தத்துவத்தை கற்றார். ஒரு முறை ஒரு கோடைக்கால பகல் பொழுதில் தன் குரு வெளியே சென்றிருந்த சமயத்தில் ஸோயேன் தன்னை மறந்து உறங்கிவிட்டார். மூன்று மணி நேரம் கழித்து ஸோயேன் கண் விழித்தபோது குரு திரும்பி வந்து கொண்டிருந்தார். வழியை மறிக்கும் வகையில் தரையில் படுத்திருந்த ஸோயேன் சுதாரித்து எழுந்திருக்கும் முன் குரு வந்துவிட்டார். தரையில் படுத்திருந்த ஸோயேனைப் பார்த்து குரு "மன்னிக்க வேண்டும், மன்னிக்க வேண்டும்" என்று முனங்கியபடியே அவர் மீது இடிக்காமல் கவனமாக, ஸோயேனை ஒரு விருந்தினரைப் போல மரியாதையுடன் பார்த்தபடி கடந்து சென்றார்.
அந்த சம்பவத்திற்குப் பிறகு ஒருபோதும் ஸோயேன் பகலில் தூங்கியதே இல்லை.



Click it and Unblock the Notifications