ஜென் குருவும், பகல் தூக்கமும்

By Maha

ஸோயேன் ஷாகு என்ற ஜென் குரு தம் சீடர்களுக்கு அளவற்ற ஆன்மிக தத்துவங்களையும் ஞானத்தையும் கற்பித்தளித்த பின் தனது 61வது வயதில் இவ்வுலகை விட்டு மறைந்தார். அவருடைய சீடர்களுக்கு கோடைக்காலத்தின் நடுவில் பகல் நேரத்தில் தூங்குவது வழக்கமாக இருந்தது. ஸோயேன் அவர் வாழ்ந்த காலத்தில் இதை ஒருபோதும் கண்டு கொண்டதில்லை. ஆனால் அவர் ஒரு கணமும் பகல் பொழுதில் தூங்கியதில்லை.

ஸோயேன் தனது 12வது வயதிலேயே டெண்டாய் ஆன்மீக தத்துவத்தை கற்றார். ஒரு முறை ஒரு கோடைக்கால பகல் பொழுதில் தன் குரு வெளியே சென்றிருந்த சமயத்தில் ஸோயேன் தன்னை மறந்து உறங்கிவிட்டார். மூன்று மணி நேரம் கழித்து ஸோயேன் கண் விழித்தபோது குரு திரும்பி வந்து கொண்டிருந்தார். வழியை மறிக்கும் வகையில் தரையில் படுத்திருந்த ஸோயேன் சுதாரித்து எழுந்திருக்கும் முன் குரு வந்துவிட்டார். தரையில் படுத்திருந்த ஸோயேனைப் பார்த்து குரு "மன்னிக்க வேண்டும், மன்னிக்க வேண்டும்" என்று முனங்கியபடியே அவர் மீது இடிக்காமல் கவனமாக, ஸோயேனை ஒரு விருந்தினரைப் போல மரியாதையுடன் பார்த்தபடி கடந்து சென்றார்.

அந்த சம்பவத்திற்குப் பிறகு ஒருபோதும் ஸோயேன் பகலில் தூங்கியதே இல்லை.

Story first published: Friday, June 29, 2012, 7:54 [IST]
Desktop Bottom Promotion