Latest Updates
-
கொளுத்தும் வெயிலில் வீடு சூடாக இருக்கா? இந்த 3 வாஸ்து மாற்றங்களைச் செஞ்சா வீடு ஜில்லென்று மாறும்! -
உங்களுக்கு குடல் புற்றுநோய் வரக்கூடாதா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 7 உணவுகளை அடிக்கடி சாப்பிடுங்க போதும்..! -
சனி ஜெயந்தி நாளில் 2 முறை நடக்கும் சந்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு செல்வமும், வெற்றியும் குவியப்போகுது! -
வாரம் ஒருமுறை இந்த கம்பு அடை தோசையை செஞ்சு சாப்பிடுங்க.. எலும்பு பிரச்சனையே வராது... -
இன்றைய ராசிபலன் 13 மே 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு மனஅழுத்தம் நிறைந்த நாளாக இருக்குமாம் -
சனிபகவான் ரேவதி நட்சத்திரத்திற்கு செல்வதால் துரதிர்ஷ்டத்தையும், ஆபத்துகளையும் சந்திக்கப்போகும் 3 ராசிகள் -
சௌ சௌ வாங்குனா இந்த மாதிரி வித்தியாசமா சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும் -
ஹன்டா வைரஸ் Vs. கொரோனா வைரஸ்: இந்த இரண்டில் எது மிகவும் ஆபத்தானது? அவற்றின் அறிகுறிகள் என்னென்ன தெரியுமா? -
விஜய் சிஎம் ஆனதும் த்ரிஷா போட்ட அந்த ஒரு பதிவு... பின்னணியில் இருக்கும் மர்மம் என்ன? -
கல்யாண மேடையில் ரத்தக் களரி! வரதட்சணை கேட்டு மணமகன் வீட்டார் செய்த அராஜகம் - அதிர்ச்சியில் உறைந்த விருந்தினர்கள்!
குரு நாற்காலி!!!
ஒரு ஊரில் ஜென் மாஸ்டர் ஒருவர் இருந்தார். அவருடன் 20 வருடங்களாக, அவரது சீடன் ரின்சாய் என்பவன் இருந்தான். ஒரு நாள் ரின்சாய் மாஸ்டர் அமரும் இருக்கையில் அமர்ந்தான். அப்போது அங்கு வந்த மாஸ்டர், ரின்சாய் தனது இருக்கையில் அமர்ந்திருப்பதை பார்த்துவிட்டு, எதுவும் கோபப்படாமல் அமைதியாக ரின்சாயின் இருக்கையில் அமர்ந்தார்.
சிறிது நேரம் அவர்கள் இருவரும் எதுவும் பேசவில்லை. சிறிது நேரம் கழித்து, ரின்சாய் மாஸ்டரிடம் "நீங்கள் வருத்தப்படுகிறீர்களா? நான் உங்களை அவமதித்துவிட்டேன் என்று நினைக்கிறீர்களா? நான் நன்றி கெட்டு நடப்பதாக நினைக்கிறீர்களா?" என்று கேட்டான்.
அதற்கு மாஸ்டர் சிரித்துவிட்டு "நீ முதலில் மாணவனாக இருந்து சீடனாக ஆனாய், இப்போது சீடனாக இருந்து மாஸ்டராக ஆக தகுதி உடையவனாக இருக்கிறாய். மேலும் என் வேலைகளை பகிர்ந்து கொள்ள நீ தகுதியுடையவனாகிவிட்டாய் என்பதை நினைக்கும் போது, எனக்கு பெருமையாகத் தான் உள்ளது. எனக்கு முன்பே அவை நடக்கும் என்பதும் நன்றாக தெரியும்" என்று கூறினார்.
ஆகவே தகுதியுடையோர் இகழ்ச்சி அடையார்..!!



Click it and Unblock the Notifications