Latest Updates
-
கோடையில் இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க.. உடல் எடையும் குறையும், உடல் சூடும் தணியும்.. -
இன்றைய ராசிபலன் 25 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ராஜயோகம் கூடிவரப்போகுதாம் -
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்! -
மட்டன் சுவையை மிஞ்சும் சோயா உருளைக்கிழங்கு குருமா ரெசிபி - செஞ்சு பாருங்க, செமையா இருக்கும் -
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்! -
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டகாத்து வீசும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க
செய்யும் தொழிலே சிறந்தது!!!

அந்த ஜென் துறவி மிகவும் சக்தி வாய்ந்தவர். அவருக்கு கடவுளின் அருள் முழுவதும் கிடைத்ததால், அவர் எது சொன்னாலும் நடக்கும். அத்தகையவரிடம் அவன் சந்தித்து, வரம் ஒன்றை வாங்கிக் கொண்டு சென்றான். அது என்னவென்றால், அவன் எப்போதும் பலமிக்கவனாக, அவன் நினைப்பது எல்லாம் நடக்கக்கூடியதான ஒரு வரம் வேண்டி கேட்டுக் கொண்டான். துறவியும் அவனுக்கு அவன் ஆசைப்படியே வரத்தையும் கொடுத்தார்.
அப்போது அவன் ஒரு நாள் ஒரு பெரிய வியாபாரியின் வீட்டிற்கு சென்றான். அப்போது அந்த வியாபாரியின் செல்வாக்கை கண்டு, நானும் ஒரு பெரிய வியாபாரி ஆக வேண்டும் என்று நினைத்தான். உடனே அவனும் ஒரு பெரிய வியாபாரியாக மாறிவிட்டான்.
மற்றொரு நாள் ஒரு அரசாங்க அதிகாரியைக் கண்டான். அப்போது அந்த அதிகாரியைப் பார்த்ததும், பணக்கார வியாபாரிகள் முதல் அனைவரும் பயப்படுவதைக் கண்டான். ஆகவே அதிகாரியாக வேண்டும் என்று நினைத்தான். அதிகாரியும் ஆனான். பின் அவன் அதிகாரியாக வெளியே வெயிலில் செல்லும் போது சூரியனின் வெப்பத்தை அவனால் தாங்க முடியவில்லை. ஆகவே சூரியன் மிகவும் சக்தி வாய்ந்தது என்று எண்ணி சூரியனாக மாறினான்.
சூரியனாக மாறியப்பின் மேகம் சூரியனை மறைத்ததால், மேகமாக மாற ஆசைப்பட்டான். மேகமாக மாறியதும் காற்று வீசும் போது மேகம் கலைந்தது, எனவே மேகத்தை விட காற்று பலமிக்கது என்று காற்றாக மாறினான். காற்றாக இருக்கும் போது, மலையை காற்றால் அசைக்க முடியவில்லை, ஆகவே மலையே சிறந்தது என்று மலையாக மாறினான்.
மலையாக மாறியப்பின் மலையின் சிறு பகுதி உடைந்து விழுந்தது. எப்படியென்று பார்த்தால், அங்கு ஒரு கல்லுடைக்கும் தொழிலாளி தன் உளியால் மலையின் சிறு பகுதியை உடைத்தான். ஆகவே மலையை விட கல்லுடைக்கும் தொழிலாளியே சிறந்தது என்று நினைத்து, இறுதியில் பழைய தொழிலான கல்லுடைக்கும் தொழிலாளியாகவே மாறிவிட்டான்.
இந்த கதையிலிருந்து, 'செய்யும் தொழிலே தெய்வம்' என்னும் பழமொழிக்கேற்ப, நாம் செய்யும் தொழிலை சந்தோஷமாக சிறந்ததாக நினைத்து செய்து வந்தால், நாம் எப்போதுமே பலசாலி தான் என்பதை நன்கு தெளிவுறுத்துகிறது.



Click it and Unblock the Notifications