Latest Updates
-
எப்பவும் ஒரே மாதிரி பாஸ்தா செய்யாம, இப்படி முட்டை பொடிமாஸ் பெப்பர் பாஸ்தா செய்யுங்க.. அள்ளும்.. -
Aadi Amavasai 2026: ஆடி அமாவாசை நாளில் மறந்தும் இந்த 7 விஷயங்களை செஞ்சுடாதீங்க.. -
இந்த 4 ராசி ஆண்கள் ரொம்ப கவர்ச்சியானவர்களாக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 வருடம் கழித்து சிம்ம ராசிக்கு செல்லும் புதன்: ஆகஸ்ட் இறுதியில் இந்த 4 ராசிக்கு செல்வம் குவியப்போகுது! -
Aadi Amavasai 2026: தர்ப்பணம் என்றால் என்ன? ஆடி அமாவாசை அன்று ஏன் அவசியம் தர்ப்பணம் கொடுக்க வேண்டும் -
மூட்டு வலி நீங்க, இரத்தம் ஊற உதவும் முருங்கைக்கீரை கொள்ளு சூப் - எப்படி செய்யணும் தெரியுமா? -
சனிபெயர்ச்சியால் 2027-ல் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
21 நாட்கள் தொடர்ந்து 1 நெல்லிக்காய் சாப்பிடுங்க, உடம்புல நடக்குற அதிசயத்தை பாருங்க.. கூறும் டாக்டர்! -
பாலக் புலாவ் ரெசிபி - இந்த சத்தான புலாவை ட்ரை பண்ணுங்க - குழந்தைகள் விரும்பி சாப்பிடுவாங்க -
பழைய விமானங்கள் ஓய்வு பெற்ற அவற்றின் நிலை என்னவாகும் தெரியுமா? இப்படிலாம் கூட பண்ணுவாங்களா?
புனிதம் இல்லை, வெறும் வெறுமை!
சீன பேரரசர் வ்ஹு என்பவர் புத்தமதத்தை உறுதிப்படுத்தும் உன்னத நடவடிக்கைகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருந்தார். அதனால் அவர் புத்தமதக் கோயில்கள் மற்றும் மடாலயங்கள் கட்டுவது, புத்த துறவிகளுக்கு கல்வி மற்றும் மனிதநேய செயல்கள் போன்ற பணிகளை மிகவும் ஆர்வத்துடன் செய்து கொண்டிருந்தார்.
ஒரு நாள் பேரரசர் பெரிய புத்த ஆசிரியரான போதி தர்மாவிடம் "என் நற்பணிகளுக்கான தகுதி என்ன?" என்று கேட்டார். போதி தர்மா அதற்கு "இதுவரை ஏதும் இல்லை" என்று அரசர் எதிர்பாராத பதிலைச் சொன்னார்.
பின்பு பேரரசர் அவரிடம் "சரி, உண்மையில் புனித நிலை என்றால் என்ன அர்த்தம்?" என்று கேட்டார். அதற்கு குருவும் "புனிதம் இல்லை, வெறும் வெறுமை" என்று அவரின் கேள்வியை சரி செய்தார். மறுபடியும் பேரரசர் போதி தர்மாவிடம் "பிறகு என்னை யார் வழி நடத்துவது" என்று கேட்க, குரு "எனக்கு தெரியாது" என்று பதில் அளித்தார்.
தான் கேட்ட கேள்விகளுக்கு சரியான பதிலைத் தரவில்லை என்று போதிதர்மாவின் மேல் பேரரசர் கோபம் கொண்டதால், போதிதர்மா இராஜ்ஜியம் விட்டு சென்றார்.
பின்னர் பேரரசர் வ்ஹு, இளவரசர் ஷிகோ மற்றும் ஆலோசகருடன், அதனைப் பற்றி பேசிக் கொண்டிருக்கையில் தான் பேரரசருக்கு போதிதர்மாவின் பெருந்தன்மையும், அவரது பதிலுக்கான உண்மையும் அரசருக்கு தெரிய வந்தது. அதனால் அவர் வருத்தம் கொண்டு மீண்டும் போதிதர்மாவை ராஜ்ஜியத்திற்கு வருமாறு தூது அனுப்பினார். அப்போது இளவரசர் சிகோ "இந்த உலகில் உள்ள எல்லா மக்களை அனுப்பினாலும் அவர் இனி திரும்ப மாட்டார்" என்றான்.



Click it and Unblock the Notifications