Latest Updates
-
மே மாதத்தில் நடக்கும் கிரக பெயர்ச்சிகளால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
வெயில் கொடுமை! திருமணத்தை மாற்ற முடியாமல் தவிக்கிறீர்களா? இந்த 5 டிப்ஸ் உங்கள் விழாவை காப்பாற்றும்! -
1/4 கப் தனியா இருந்தா இந்த வித்தியாசமான சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமாக இருக்கும் -
வட இந்தியத் திருமணங்கள்: சுட்டெரிக்கும் வெயிலில் சிக்கித் தவிக்கும் கொண்டாட்டங்கள் - இதோ சில அதிரடி மாற்றங்கள்! -
இந்த 5 உணவுகள் உங்கள் உடலில் துர்நாற்றத்தை ஏற்படுத்தி சங்கடமாக உணர வைக்குமாம் - பார்த்து சாப்பிடுங்க -
வாஸ்து செடிகள்: கோடை வெயிலில் வீட்டை குளிர்ச்சியாக வைத்து அதிர்ஷ்டத்தை அள்ளுவது எப்படி? -
சிக்கன் பிரியாணியை விட சூப்பரா இருக்கும் ஆம்பூர் ஸ்டைல் சோயா பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க -
சனிபகவானின் வக்ர பெயர்ச்சியால் 138 நாட்களுக்கு ஜெயிக்கிற குதிரையா மாறப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
சீதா நவமி: உங்கள் வீட்டில் இந்த மாற்றங்களைச் செய்தா பணமழை கொட்டுமா? அதிர்ஷ்டம் தரும் வாஸ்து ரகசியம்! -
கோடையில் இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க.. உடல் எடையும் குறையும், உடல் சூடும் தணியும்..
ஒரு நல்ல சீடனின் அழகு!!!
ஓர் ஊரில் ஜென் மாஸ்டர் கத்தான் என்பவர் வாழ்ந்து வந்தார். அவர் ஒரு குறிப்பில் "ஒரு சீடன் என்பவன் யார்? என்பதை, சீடன் என்பவன் புத்தமதக் கருத்துக்களை மற்றவர்களுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும், மடாலயத்தை மிகவும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் மற்றும் அரிசி மூட்டை, துணி மூட்டை ஆகியவற்றை எங்கும் பத்திரமாக தூக்கவும், சுத்தமாக அவற்றை வைத்துக் கொள்ளவும் வேண்டும்" என்னும் மூன்று கருத்துக்களின் மூலம் தெளிவாக கூறியுள்ளார்.
அதேப்போல் தான் கசன் என்னும் சீடன், தன் குருவிற்கு மிகவும் ஒரு நல்ல சீடனாக இருந்தான். ஆனால் அவனுடைய குரு மிகவும் கோபம் கொள்பவர். அவர் தன் சீடர்களுக்கு புத்தமதக் கருத்துக்களை சொல்லிக் கொடுக்கும் போது எப்போதுமே மிகவும் கடுமையாகவே இருப்பார். சிலசமயங்களில் அடிக்க கூட செய்வார். அதனாலேயே நிறைய சீடர்கள் அவரிடம் கல்வி கற்காமல் சென்றுவிட்டனர்.
ஆனால் கசன் மட்டும் அவரை விட்டு செல்லாமல், அவருடன் இருந்தான். ஏனெனில் அவன் ஜென் மாஸ்டர் கத்தான் கூறிய ஒரு குறிப்பான "நல்ல சீடனாக இல்லாதவன், எங்கு சென்றாலும் தனது குருவின் செல்வாக்கை பயன்படுத்துவான், நியாயமான சீடனாக இருப்பவன் தனது குருவின் இரக்கத்தால் ஈர்த்து மட்டும் இருப்பான், ஆனால் நல்ல சீடன் என்பவன் அவருடன் இருந்து அவரிடம் இருக்கும் அனைத்தையும் கற்றுக் கொண்டு வளர்வான்" என்பதை படித்ததால், இவனும் ஒரு நல்ல சீடனாக தன் குருவிற்கு இருக்கிறான்.



Click it and Unblock the Notifications