ஒப்பிட வேண்டாம்!!!

By Maha

ஒரு நாள் ஜென் துறவியான சாங் சூ, தனது நண்பருடன் நதிக் கரையோரம் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவர் தனது நண்பரிடம் "இந்த மீன்கள் எவ்வளவு சந்தோஷமாக நீந்திக் கொண்டிருக்கிறது பாருங்கள்" என்று கூறினார்.

அதற்கு சாங் சூ-வின் நண்பர் "நீங்கள் ஒரு மீன் இல்லை. எனவே உண்மையில், அந்த மீன்கள் தங்கள் நீச்சலை சந்தோஷமாக செய்கிறது என்று நீங்கள் எப்படி கூறலாம்?" என்று கேட்டார்.

உடனே சாங் சூ "நீ நானாக முடியாது. அதனால் அவை சந்தோசமாக இருப்பதை நீ உணர்வது என்பது மிகவும் கடினம்" என்றார்.

அவரவருக்கென சில குணாதிசயங்கள் உள்ளன. அதனால் ஒருவரை மற்றொருவருடன் ஒப்பிடுதல் தவறு என்பதை இக்கதை நன்குஉணர்த்துகிறது.

Story first published: Thursday, August 23, 2012, 17:19 [IST]
Desktop Bottom Promotion