Latest Updates
-
இன்றைய ராசிபலன் 25 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ராஜயோகம் கூடிவரப்போகுதாம் -
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்! -
மட்டன் சுவையை மிஞ்சும் சோயா உருளைக்கிழங்கு குருமா ரெசிபி - செஞ்சு பாருங்க, செமையா இருக்கும் -
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்! -
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டகாத்து வீசும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க -
வீட்டிலேயே மாம்பழ ஐஸ்க்ரீம்மை ஈஸியாக செய்வது எப்படி-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க..
மனதில் நோயை சேர்க்க வேண்டாம்!!!

அதில் மகாதேவன் நேர்மையானவன், எதையுமே மனதில் வைத்து பேசத் தெரியாதவன். எப்போதுமே வெளிப்படையாக பேசும் குணம் கொண்டவன். அவனுக்கு தான் கற்ற கல்வியை மற்றவர்களுக்கும் கற்பிக்க வேண்டும் என்ற ஆசை உண்டு. மேலும் தன்னைப் போலவே அனைவரும் நேர்மையாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுபவன்.
ஆனால் சகாதேவன் சற்று வித்தியாசமானவன். எதையும் வெளிப்படையாக பேச மாட்டான். மிகவும் பொறுமை சாலி, எந்த பிரச்சனைக்கும் செல்லாதவன். யார் என்ன சொல்லி, திட்டினாலும், ஏமாற்றினாலும், அதை தன் மனதிலே வைத்து, கஷ்டப்பட்டுக் கொண்டிருப்பவன். ஒரு முறை விளையாடிக் கொண்டிருக்கும் போது, ஒரு மாணவன் அவனிடம் வம்பு இழுத்து, அடித்து திட்டிவிட்டான். அப்போது சகாதேவனுடன் அவனது நண்பன் மகாதேவன் இல்லை.
இதனால் சகாதேவனுக்கு உடல் நிலை சரியில்லாமல் போனது. உடல் நிலை சரியில்லை என்பதை அறிந்த அவனுடைய நண்பன் மகாதேவன், அவனை மருத்துவரிடம் அழைத்துச் செல்லாமல், அவனது குருவிடம் அழைத்துச் சென்றான். நீண்ட நாட்கள் அவர்களுடன் இருந்த அந்த குருவிற்கு சகாதேவனுக்கு எதனால் உடல் நிலை சரியில்லை என்று புரிந்துவிட்டது. அதனால் அவர் சகாதேவனிடம் "இது உடலில் வந்த நோய் அல்ல. உன் மனதில் வந்த நோய். அதை நீ தான் சரி செய்ய வேண்டும்" என்று கூறினார்.
அந்த குரு, அவ்வாறு சொல்வதற்கு காரணம், அந்த சகாதேவனின் மனதில் தைரியம் குறைவாகவும், அளவுக்கு அதிகமான பொறுமை, சகிப்புத் தன்மை அளவுக்கு அதிகமாக இருப்பது போன்றவை இருக்கின்றன. இவையும் ஒரு வகையான நோய் தான். ஆகவே அந்த நோயை அவன் சரிசெய்து விட்டால், அவன் சரியாகிவிடுவான், என்பதற்காகவே சொன்னார்.



Click it and Unblock the Notifications