Latest Updates
-
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்...
மனதில் நோயை சேர்க்க வேண்டாம்!!!

அதில் மகாதேவன் நேர்மையானவன், எதையுமே மனதில் வைத்து பேசத் தெரியாதவன். எப்போதுமே வெளிப்படையாக பேசும் குணம் கொண்டவன். அவனுக்கு தான் கற்ற கல்வியை மற்றவர்களுக்கும் கற்பிக்க வேண்டும் என்ற ஆசை உண்டு. மேலும் தன்னைப் போலவே அனைவரும் நேர்மையாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுபவன்.
ஆனால் சகாதேவன் சற்று வித்தியாசமானவன். எதையும் வெளிப்படையாக பேச மாட்டான். மிகவும் பொறுமை சாலி, எந்த பிரச்சனைக்கும் செல்லாதவன். யார் என்ன சொல்லி, திட்டினாலும், ஏமாற்றினாலும், அதை தன் மனதிலே வைத்து, கஷ்டப்பட்டுக் கொண்டிருப்பவன். ஒரு முறை விளையாடிக் கொண்டிருக்கும் போது, ஒரு மாணவன் அவனிடம் வம்பு இழுத்து, அடித்து திட்டிவிட்டான். அப்போது சகாதேவனுடன் அவனது நண்பன் மகாதேவன் இல்லை.
இதனால் சகாதேவனுக்கு உடல் நிலை சரியில்லாமல் போனது. உடல் நிலை சரியில்லை என்பதை அறிந்த அவனுடைய நண்பன் மகாதேவன், அவனை மருத்துவரிடம் அழைத்துச் செல்லாமல், அவனது குருவிடம் அழைத்துச் சென்றான். நீண்ட நாட்கள் அவர்களுடன் இருந்த அந்த குருவிற்கு சகாதேவனுக்கு எதனால் உடல் நிலை சரியில்லை என்று புரிந்துவிட்டது. அதனால் அவர் சகாதேவனிடம் "இது உடலில் வந்த நோய் அல்ல. உன் மனதில் வந்த நோய். அதை நீ தான் சரி செய்ய வேண்டும்" என்று கூறினார்.
அந்த குரு, அவ்வாறு சொல்வதற்கு காரணம், அந்த சகாதேவனின் மனதில் தைரியம் குறைவாகவும், அளவுக்கு அதிகமான பொறுமை, சகிப்புத் தன்மை அளவுக்கு அதிகமாக இருப்பது போன்றவை இருக்கின்றன. இவையும் ஒரு வகையான நோய் தான். ஆகவே அந்த நோயை அவன் சரிசெய்து விட்டால், அவன் சரியாகிவிடுவான், என்பதற்காகவே சொன்னார்.



Click it and Unblock the Notifications











