Latest Updates
-
30 ஆண்டுக்கு பின் சனியும்-செவ்வாயும் மீனத்தில் இணைவதால் இந்த 3 ராசிக்காரங்க டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
No Oil Noi Boil Recipe: அடுப்பே தேவைப்படாத ஆரோக்கியமான, சுவையான இட்லி மற்றும் சட்னி ரெசிபி...ட்ரை பண்ணுங்க...! -
1 வருடத்துக்கு பின் மேஷம் செல்லும் சுக்கிரன்: இந்த 3 ராசிக்காரங்க ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம்...! -
336 ஆண்டுகளுக்கு முன் சத்ரபதி சாம்பாஜி மகாராஜாக்கு 11 மார்ச் 'இதே' நாளில் என்ன நடந்தது தெரியுமா? -
4 பிரெட், 1 கப் தயிர் இருந்தா 10 நிமிஷத்துல இந்த மாதிரி வடை சுடுங்க... மொறுமொறுனு டேஸ்ட் பிரமாதமா இருக்கும்... -
இந்த 4 ராசி ஆண்கள் ரொம்ப பொஸசிவான கணவர்களாக இருப்பார்களாம்...இவங்க மனைவிகள்தான் பாவம்..உங்க ராசி இதுல இருக்கா? -
LPG Gas: தலைவிரித்தாடும் சிலிண்டர் தட்டுப்பாடு... சிலிண்டர் சீக்கிரம் தீராம இருக்க இப்படி சமையல் பண்ணுங்க...! -
கோதுமை ரவா தோசையும்.. புதினா சட்னியும்..- 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஉளைச்சலான நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது...
ஆணவத்திற்கு குருவின் அர்த்தம்!!!
ஒரு நாட்டின் பிரதம மந்திரியாக டாங் வம்சத்தை சேர்ந்த ஒருவர் இருந்தார். அவர் ஆட்சியை நன்கு நடத்துவதில் மிகவும் சிறந்தவர். அத்தகைய அவருக்கு புகழ், அதிகாரம் மற்றும் செல்வமானது இருப்பினும், அவர் புத்த சமயக் கருத்துகளை பற்றி அறிவதில் ஆர்வமுள்ளவராகக் இருந்தார்.
அதற்காக மந்திரி, அந்த ஊரில் இருக்கும் ஒரு ஜென் குருவிடம் அடிக்கடி சென்று கற்றுக் கொண்டார். அவ்வாறு கற்கும் அவருக்கு, தான் ஒரு மந்திரி என்ற எந்த ஒரு அலட்டலும் இல்லாமல், ஒரு உண்மையான சிஷ்யன் போல நன்கு கற்று வந்தார். அவர்கள் இருவரும் ஒரு நல்ல குரு, சிஷ்யனாக இருந்து வந்தனர். மேலும் மந்திரி, ஒரு உண்மையான சிஷ்யனாகவே இருந்து வந்தார்.
ஒரு நாள் எப்போதும் போல, அந்த மந்திரி ஜென் குருவிடம் கற்க வந்தார். அப்போது அந்த மந்திரி குருவிடம், "புத்த சமயத்தின் படி, ஆணவம் என்றால் என்ன?" என்று கேட்டார். அதை கேட்டதும் உடனே குருவின் முகமானது சிவப்பு நிறமாக மாறியது. பின் குரு கோபமாக தனது குரலை சற்று உயர்த்தி "என்ன முட்டாள்தனமான கேள்வி இது?" என்று கேட்டார்.
இந்த மறுமொழியை எதிர்பாராத அந்த மந்திரிக்கும் கோபமும், அதிர்ச்சியும் ஏற்பட்டது. பின் குரு சிரித்துக் கொண்டே "இது தான் உண்மையான ஆணவம்" என்றார்.
இந்த கதையிலிருந்தது என்ன தெரிகிறதென்றால், இதுவரை குருவிடம் கோபம் கொள்ளாத சிஷ்யனாக இருந்த மந்திரிக்கு, குரு கோபப்பட்டு பேசியதைக் கேட்டதும், அந்த மந்திரிக்கு, அது எப்படி நான் ஒரு நாட்டின் மந்திரி என்னைப் பார்த்து எப்படி கோபத்தோடு பேசலாம் என்று எண்ணி மந்திரி கோபப்பட்டதே, உண்மையான ஆணவம் என்பது நன்கு புரிகிறது.



Click it and Unblock the Notifications











