Latest Updates
-
சனி-சுக்கிரனால் உருவாகும் நவபஞ்சம யோகம்: ஜூன் 25 முதல் இந்த 5 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டும்... -
2 உருளைக்கிழங்கு இருந்தா, இப்படி குருமா செய்யுங்க.. சிக்கன், மட்டன்-லாம் தோத்துடும்.. -
ஜூன் 17-ல் உருவாகும் அரிய கிரக சேர்க்கையால் அற்புதமான நன்மைகளை அடையப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா -
கோவை அன்னபூர்ணா ஹோட்டல் வெஜ் குருமா ரெசிபி - இப்படி செஞ்சு பாருங்க - சப்பாத்தி, பூரிக்கு டக்கரா இருக்கும் -
இனிப்புகளின் ராஜா என்று அழைக்கப்படும் இனிப்பு எது தெரியுமா? உங்களுக்கு இந்த இனிப்பு பிடிக்குமா? -
எந்த கீரை வாங்கினாலும் இப்படி ஒருவாட்டி செய்யுங்க.. பிடிக்காதவங்களும் கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
ஜூலை 27-ல் நடக்கும் சனி வக்ர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரர்களின் கனவு நனவாகப்போகுது..! -
இந்த 4 மாதங்களில் பிறந்த பெண்கள் மிகச்சிறந்த அம்மாக்களாக இருப்பார்களாம் - நீங்க பிறந்த மாதம் என்ன? -
முதலைகள் ஏன் கற்களை விரும்பி சாப்பிடுகின்றன தெரியுமா? இதுக்குப் பின்னாடி இப்படி ஒரு காரணம் இருக்கா? -
International Yoga day 2026: வாய்வு தொல்லையால் அவதிப்படுகிறீர்களா? அப்ப தினமும் இந்த யோசனங்களை செய்யுங்க..
உங்க வீட்டிற்கு பெயிண்ட் அடிக்கணுமா? முக்கியமான குறிப்புகளை பகிர்கிறார் நெரோலாக் பெயிண்ட்ஸ் மேலாளர் மகேந்திரன்
தமிழர்கள் பொதுவாக தங்கள் வீட்டிற்கு தை மாதம் பெயிண்ட் அடிப்பதை வழக்கமாக கொண்டிருபார்கள்.. அத்துடன் வீட்டில் ஏதேனும் விஷேசங்கள் வந்தால், திருமணம் போன்ற கொண்டாட்ட நேரங்களிலும் துக்கமான நிகழ்வின் போதும் வண்ணம் பூசுவார்கள்.. அப்படி வீட்டிற்கு பெயிண்ட் அடிக்கும் போது, எப்போதும் போல வெள்ளை நிறத்தை அடிக்காமல், சற்று வித்தியாசமாக வீட்டிற்கு வரும் விருந்தாளிகள் அசந்து போகும் வகையில், ஒவ்வொரு அறைக்கும் பொருத்தமான பெயிண்ட் நிறங்களை தேர்ந்தெடுத்து அடிக்கலாம்.
இதனால் வீடு அழகாக இருப்பதுடன், மனமும் அமைதியாகவும் சந்தோஷமாகவும் இருக்கும். பொதுவாகவே வீட்டிற்கு அடிக்கும் பெயிண்டிங் அலங்காரத்திற்காகவே அடிக்கபப்டுகிறது.. ஆனால் அதிலும் நாம் கவனிக்க வேண்டிய சில முக்கியமான விஷயங்கள் உள்ளன.. அவை என்னென்ன? என்ன மாதிரியான பெயிண்டிங் அடிக்க வேண்டும்? அதில் முக்கியமாக நாம் கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன? என அனைத்து கேள்விகளுக்கும் பெயிண்டிங் துறையில் பல ஆண்டுகளாக பணிபுரியும் நெரோலாக் பெயிண்ட்ஸ் சேல்ஸ் எக்ஸிகியூடிவ் மகேந்திரன் விளக்குகிறார்..

பெயிண்டிங்கில் எத்தனை வகைகள் இருக்கு? என்ற கேள்விக்கு பதிலளித்த மகேந்திரன், ”பொதுவாக பெயிண்ட்டிங் என்பது டெக்கரேட்டிவ் பெயிண்டிங், ஆடோ மொபைல் பெயிண்டிங், இன்டர்ஸ்டியல் பெயிண்டிங், ஆட்டோ பவுடர் கோட்டிங் என பல வகைகள் இருக்கு.. இதில் வீடுகளுக்கு அடிக்கப்படும் பெயிண்டிங் டெக்கரேட்டிவ் பெயிண்ட் எனவும், கார், ஆட்டோ, பைக் என வாகனங்களுக்கு அடிக்கப்படும் பெயிண்டிங் ஆட்டோ மொபைல் பெயிண்டிங் எனவும் சொல்லப்படுகிறது.. மேலும் இதில் ஆட்டோ ரீபெயிண்டிங் என்பதும் அடங்கும்.. அதாவது அதில் பழைய கார், பஸ், பைக்குகளுக்கு மீண்டு புதிது போல பெயிண்ட் செய்யப்படுவதாகும்.. இதில் பவுடர் கோட்டிங் என்பது நம் வீடுகளில் உள்ள வாஷிங் மிஷின், ஃபிரிட்ஜ் ஆகியவற்றுக்கு அடிக்கப்படும் பெயிண்ட்கள் ஆகும்.. இதில் பெரிய பெரிய கம்பெனிகளுக்கு அடிக்கப்படும் பெயிண்ட்தான் இண்டர்ஸ்டியல் பெயிண்டிங்ஸ் ஆகும்” என்றார்..
பெயிண்ட் ஏன் அடிக்கணும்? அது ஒரு கட்டடத்திற்கு முக்கியமா? அடிக்காமல் இருக்க கூடாதா? என்ற கேள்விகளுக்கு பதிலளித்தவர், கண்டிப்பாக பெயிண்டிங் தேவை. அது மிக முக்கியமான ஒரு விஷயமாக பார்க்கப்படுகிறது.. காரணம் எந்த ஒரு பொருளுமே பார்க்கும் போது அழகாக தெரிய வேண்டும்.. அதற்கு பெயிண்டிங்தான் அழகு சேர்க்கும்.. ஒரு கட்டிடத்திற்கோ அல்லது ஒரு பொருளுக்கோ பெயிண்ட்தான் அழகு சேர்க்கும்.. எவ்வளவு பெரிய அழகான வீட்டை கட்டினாலும் பெயிண்டிங் அடித்தால் மட்டுமே ஒரு ஃபினிஷிங் லுக் கிடைக்கும்.. அந்த வீடும் அழகான முழுமையான வீடாக மாறும்.. அது வாகனமாக இருந்தாலும் சரி பெயிண்ட் அடித்தால்தான் பார்ப்பதற்கு அழகாக தெரியும்.. அதனால் பெயிண்டிங் என்பது முக்கியம்தான்” என்று கூறினார்..
மேலும் குறைந்த ( Volatile Organic Compounds) VOC பெயிண்ட் பாரம்பரிய பெயிண்ட் விட குறைவான ஆவியாகும் கரிம கலவைகளை(VOCs) கொண்டுள்ளது. VOCகள் ரசாயனங்கள் ஆகும், அவை பெயிண்ட் காய்ந்தவுடன் காற்றில் வெளியிடப்படலாம் மற்றும் மோசமான உட்புற காற்றின் தரம் மற்றும் உடல்நலப் பிரச்சினைகளுக்கு பங்களிக்கலாம். அதனால் வீட்டின் உட்புரத்தில் பெயிண்ட் அடிக்க சரியான பெயிட்டிங்கை தேர்வு செய்தல் நல்லது..
அப்படி சரியான பெயிண்டைத் தேர்ந்தெடுக்க சில டிப்ஸ் கொடுங்க என்ற கேள்விக்கு பதிலளித்தவர், வீட்டிற்கு பெயிண்ட் அடிக்கும் முன் கருத்தில் கொள்ள வேண்டியது, கூடுதல் பணம் செலவழித்தாலும் எப்போதும் நல்ல தரமான, நல்ல பிராண்ட் பெயிண்ட்களை வாங்குவது. பெயிண்ட் அடிப்பதற்கு முன், சுவர்களில் நீர்-எதிர்ப்பு பொருட்களை பயன்படுத்த மறக்காதீர்கள், ஏனெனில் இது சுவற்றில் இருந்து கசிவு அல்லது ஈரப்பதம் ஆகாமல் தடுக்கிறது. அறைகள் எவ்வளவு சூரிய ஒளியைப் பெறுகின்றன என்பதைப் பொறுத்து பெயிண்டுகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.. உதாரணமாக, ஒரு இருண்ட அறைக்கு வெளிர் நிறங்களை தேர்ந்தெடுக்க வேண்டும்.. அதே நேரத்தில் ஒரு பிரகாசமான நல்ல இளி நிறைந்து இருக்கும் அறைக்கு அடர் நிறங்களைப் பயன்படுத்தலாம்” என்றார்..
பழைய பெயிண்டிங் மேல் அபப்டியே வண்ணம் அடிக்கலாம் என்ற கேள்விக்கு, கண்டிப்பாக அப்படி பழைய பெயிண்ட் மேல் புதிய பெயிண்டிங்கை அடிக்கக்கூடாது. இதற்கு முதலில் சுவர்களை நன்றாக சுத்தம் செய்ய வேண்டும் அதன் பிறகு பிரைமர் கோட்டிங் போட வேண்டும்.. அதன் பின்னர்தான் பெயிண்டிங் அடிக்க ஆரம்பிக்க வேண்டும்” என்று கூறினார்..
வீட்டின் உட்புறத்தில் பெயின்ட் அடிக்கும் முன் கருத்தில் கொள்ள வேண்டியவை குறித்த கேள்விக்கு, வீட்டின் உட்புறத்தில் புதிய கோட் பெயிண்ட் அடித்தால் சிறிய துளைகளைக் கூட பெரிதாகக் காண்பிக்கும். எனவே, பெயிண்ட் அடிப்பதற்கு முன் துளைகளை நிரப்புவ்தில் கவனம் செலுத்த வேண்டும்.. பெயிண்ட் அடிக்கும் செயல்முறையைத் தொடங்குவதற்கு முன் சுவர்களை சுத்தம் செய்ய பெயிண்டர்களிடம் கூற வேண்டும்..
ஏராளமான தூசி மற்றும் குப்பைகள் சுவர்களில் சிக்கிக் கொள்கின்றன. நீங்கள் அதை ஈரமான துணியால் சுத்தம் செய்யலாம் அல்லது வேக்யூம் செய்யலாம். அடர் நிற பெயிண்டின் மேல் வெளிர் நிறத்தை அடித்தால், எப்போதும் ப்ரைமரை உபயோகிக்க வேண்டும்.. பெயிண்டிங் வேலை தொடங்கும் முன், மரச் சாமான்களை அகற்றவும் அல்லது ஒரு பெரிய படுதாவை கொண்டு மூடி வைக்க வேண்டும்” என்றார்..
மேலும், “ முதலில் விளிம்புகள் மற்றும் மூலைகளை அடிப்பதற்கு தூரிகையைப் பயன்படுத்தவும். இது "கட்டிங் இன்" என்று அழைக்கப்படுகிறது மற்றும் ரோலரைப் பயன்படுத்துவதற்கு முன்பு சுத்தமான கோடுகளை உருவாக்க இது உதவுகிறது. பெரிய பகுதிகளுக்கு ரோலரைப் பயன்படுத்தவும். முதல் கோட் காய்ந்த பிறகு, தவறவிட்ட பகுதிகளை ஆய்வு செய்து, இரண்டாவது கோட் போடுவதற்கு முன் அவற்றையும் அடித்து முடிக்க வேண்டும்...
பெயிண்ட் வேகமாக உலரவும், புகையைக் குறைக்கவும் நல்ல காற்றோட்டத்தை உறுதி செய்ய வேண்டும்.. பயன்பாட்டிற்குப் பிறகு உடனடியாக சோப்பு மற்றும் தண்ணீர் கொண்டு தூரிகைகள் மற்றும் உருளைகளை சுத்தம் செய்யவும். க்ளீனர் கோடுகளுக்கு பெயிண்ட் லேசாக ஈரமாக இருக்கும்போது பெயிண்டரின் டேப்பை அகற்றவும். மரச்சமான்களையும் மற்ற பொருட்களையும் பின்னோக்கி நகர்த்துவதற்கு முன் அல்லது அலங்காரத்தை தொங்கவிடுவதற்கு முன், உற்பத்தியாளரின் எல்லா இடங்களிலும் பெயிண்டிங் வேலைகள் முடிந்ததா? என்பதை உறுதிசெய்துக் கொள்ள வேண்டும்..
வீட்டில் பெயிண்டிங் செலவை எவ்வாறு குறைப்பது? என்பது குறித்த கேள்விக்கு, முதலில் பெயிண்ட் அடிக்க வேண்டிய மொத்த இடம், பெயிண்ட் வகை, வீட்டின் உட்பரப்பு பகுதி, கதவுகள் மற்றும் ஜன்னல்களின் எண்ணிக்கை ஆகியவற்றைக் கணக்கிடுங்கள். அதன்படி, நீங்கள் எந்த வகையான பெயிண்டைத் தேர்ந்தெடுக்கப் போகிறீர்கள் என்பதைக் கவனியுங்கள். இது வீண் விரயத்தைத் தவிர்க்கும் மற்றும் நீங்கள் பணத்தை சேமிக்க முடியும். நீங்கள் அடர் நிற வண்ணத்திலிருந்து வெளிர் நிற வண்ணத்திற்கு மாற்றும் போது பொதுவாக ப்ரைமர் தேவைப்படுகிறது. நீங்கள் அதே வண்ணத்தை அல்லது அடர் நிற வண்ணங்களைத் தேர்வுசெய்தால், ப்ரைமர் செலவைத் தவிர்க்கலாம்” என்றார்..
அதனைத் தொடர்ந்து பேசியவர், “அனைத்து வகையான தேவைகளையும் கருத்தில் கொள்ளுங்கள். பெரும்பாலான மக்கள் நீர்ப்புகா செயல்முறையைத் தவிர்த்துவிட்டு, கசிவு காரணமாக ஏற்படும் சேதத்தை சரிசெய்து, கூடுதலாக செலவழிக்கின்றனர். அதனால் பழைய வீடாக இருந்தாலும் புதிய வீடாக இருந்தாலும் சுவர் நிலைமைகளை மதிப்பிட்டு அதற்கு ஏற்றவாறு பெயிண்ட்டை அடிப்பது நல்லதாக இருக்கும்” என்று மேலாளர் மகேந்திரன் கூறினார்..



Click it and Unblock the Notifications

