Latest Updates
-
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்...
நாம் தினமும் பயன்படுத்தும் பொருட்களை எத்தனை நாட்களுக்கு ஒருமுறை மாற்ற வேண்டும் தெரியுமா?
தினமும் நாம் உபயோகப்படுத்தும் சில பொருட்களை குறிப்பிட்ட நாட்களுக்குள் மாற்ற வேண்டும். மாத்திரை, ஆயின்மெண்ட், சமையல் பொருட்களுக்கு அவற்றின் கவர்களில் காலாவதி தேதி குறிப்பிடப்பட்டிருக்கும்.
ஆனால், பல் துலக்கும் பிரஷ், காலணிகள் போன்றவற்றில் காலாவதி தேதி இருக்காது. அதுபோன்ற பொருட்களை எத்தனை நாட்களுக்கு ஒரு முறை மாற்ற வேண்டும் என்பதை பற்றிதான் இந்தப் பதிவில் தெரிந்துக் கொள்ள போகிறோம்..

1. பல் தேய்க்கும் பிரஷ்
தினமும் நாம் பயன்படுத்தும் பல் தேய்க்கும் பிரஷ்ஷை மூன்று மாதங்களுக்கு ஒரு முறை மாற்றுவது நல்லது என்கிறார்கள் பல் மருத்துவர்கள். ஆனால், அது வளைந்து தேய்ந்து இருந்தால் உடனடியாக மாற்றிவிட வேண்டும். மூன்று மாதங்கள் வரை காத்திருக்க் தேவையில்லை.
2. செருப்பு
சிலர் ஒரே செருப்பை அடிப்பகுதி தேய்ந்துபோனாலும் இரண்டு மூன்று வருடங்களுக்குப் பயன்படுத்துவர். ஆனால், அது மிக மிக தவறு. நல்ல தரமான செருப்புகள் ஒரு வருடம் வரும். வேலைக்கு செல்பவர் அல்லது தினமும் செருப்பு அணிந்து நடப்பவராக இருந்தால் ஒரு வருடம் வரை உழைக்கும். அதிகமாக வெளியில் செல்லாதவர் எனில் இரண்டு வருடங்கள் வரலாம். செருப்பின் அடிப்பகுதி தேய ஆரம்பித்தால் அவற்றை மாற்றி விட வேண்டும். இல்லையென்றால் பாத வலி, மூட்டு வலி எல்லாம் வரக்கூடும்.
3. தலையணை உறை, மெத்தை விரிப்பு, போர்வை, துண்டு
தலையணை உறைகளை நான்கு நாட்களுக்கு ஒரு முறையும், மெத்தை விரிப்பு, போர்வையை வாரம் ஒரு முறையும் அவசியம் மாற்றி விட வேண்டும். துண்டுகளை மூன்று நாட்களுக்கு ஒரு முறை துவைத்துப் பயன்படுத்துவது நல்லது. படுக்கைகள் மற்றும் படுக்கைகளில் உள்ள அலங்காரங்கள் உட்பட தலையணைகள், காலப்போக்கில் இறந்த சரும செல்கள் மற்றும் பாக்டீரியாக்களை சேகரிக்கின்றன, அவை ஒவ்வாமையை ஏற்படுத்தலாம் அல்லது மோசமாக்கலாம் மற்றும் பிரேக் அவுட்களை ஊக்குவிக்கலாம். தலையணைகள் தூசிப் பூச்சிகளைக் கொண்டிருக்கலாம் , இது ஆண்டு முழுவதும் ஒவ்வாமை அறிகுறிகளை ஏற்படுத்தும். ஒவ்வொரு 1 முதல் 2 வருடங்களுக்கும் தலையணைகளை மாற்றுமாறு நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.
4. உள்ளாடைகள்
நல்ல தரமான உள்ளாடைகளாக இருந்தாலும், தினந்தோறும் உபயோகப்படுத்துவதால் அவற்றை எட்டு முதல் ஒன்பது மாதங்களுக்குள் மாற்றி விட வேண்டியது நல்லது. அவை அணிவதற்கு மென்மையானதாக இருப்பது அவசியம்.
5. பிளாஸ்டிக் பாட்டில்கள்
பஸ், ரயில் பிரயாணங்களின்போதும் விருந்து விசேஷங்களின் போதும் கொடுக்கப்படும் பாட்டில்களை ஒரு முறை உபயோகித்த உடனே அவற்றை நசுக்கி குப்பையில் போட வேண்டும். மற்ற பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்களை வருடத்திற்கு ஒருமுறை கட்டாயம் மாற்ற வேண்டும். சில சமயங்களில் ஒரு வருடம் முடிவதற்கு முன்பாகவே அதனுடைய கலர் மங்கத்தொடங்கி விடும். அப்போது அந்த பாட்டில்களை உபயோகிப்பதை நிறுத்த வேண்டும்.
6.பாத்திரம் தேய்க்கும் பிரஷ்
பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை பாத்திரம் தேய்க்கும் பிரஷ்களை கட்டாயம் மாற்ற வேண்டும். ஒவ்வொரு முறை உபயோகித்ததும் நீரில் நன்கு கழுவி பிழிந்து வைக்க வேண்டும். இல்லையெனில் பூஞ்சைத் தொற்று தாக்கும்.
7. இட்லி மாவு
பெரும்பான்மையான பெண்கள் இட்லி மாவு அரைத்து, ஒரு வாரம், பத்து நாளுக்கு பிரிட்ஜில் வைத்து உபயோகப்படுத்துகிறார்கள். ஆனால், அது மிகத் தவறு. இதனால் அசிடிட்டி பிரச்னை வரும். மூன்று நாட்களுக்கு மேல் அதை உபயோகிக்கக் கூடாது.
8. காய்கறிகள், பழங்கள்
பிரிட்ஜில் ஸ்டோர் பண்ணி வைத்த காய்கறி, பழங்களை இரண்டு மூன்று நாட்களில் உபயோகித்து முடித்துவிட வேண்டும். கீரைகளை வாங்கி வந்த அன்றே சமைத்து முடிக்க வேண்டும். இல்லையெனில் அதில் உள்ள சத்துக்களை இழக்க நேரிடும்.
9.நான்ஸ்டிக் பான்கள்
நான்ஸ்டிக் பான்கள் என்றென்றும் நிலைக்காது. பூச்சு சில்லு செய்யப்பட்டிருப்பதை நீங்கள் கவனித்தால், பான்னை வெளியே எறிந்துவிட்டு புதிதாகத் தொடங்குவதற்கான நேரம் இது என்று அர்த்தம்.
10.வெட்டு பலகைகள்
ஆழமான பள்ளங்களைக் கொண்ட கட்டிங் போர்டுகளை சரியாக சுத்தம் செய்வது கடினமாக இருக்கும், அதாவது பாக்டீரியா, அச்சு மற்றும் வைரஸ்கள் அங்கு வளரக்கூடும் இது உணவில் மாசுபடுவதற்கு வழிவகுக்கும் அல்லது தொற்றுநோய்க்கு கூட வழிவகுக்கும். நன்கு பராமரிக்கப்பட்ட ஒரு கட்டிங் போர்டு குறைந்தது ஒரு வருடமாவது நீடிக்கும், மற்றவை மரத்தாலானவை ஐந்து வரை நீடிக்கும். இருப்பினும், உங்கள் கட்டிங் போர்டில் ஆழமான தோப்புகள் இருந்தால், அவற்றை மாற்றுவதற்கான நேரம் இது.
கட்டிங் போர்டுகளை வெதுவெதுப்பான, சோப்பு நீரில் கழுவி, இறைச்சி மற்றும் காய்கறிகளை ஒரே பலகையில் வெட்டுவதைத் தவிர்த்து, ப்ளீச் கரைசலில் சுத்தம் செய்வதன் மூலம் மாசுபடுவதைத் தவிர்க்கலாம்..



Click it and Unblock the Notifications











