Latest Updates
-
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க..
வறுமை உங்கள வாட்டி எடுக்குதா? அப்ப அதுக்கு உங்க வீட்டுல இருக்குற இந்த பொருட்கள் தான் காரணம்...
வீடு வாஸ்துப்படி கட்டியிருந்தும் வீட்டில் பிரச்சனைகள் அதிகம் இருந்தால், உங்கள் வீட்டில் இருக்கக்கூடாத சில பொருட்கள் உள்ளது என்று அர்த்தம். உடனே அந்த பொருட்கள் என்னவென்பதை அறிந்து, அவற்றை உடனே தூக்கி எறிந்துவிட வேண்டும்.
ஒரு வீட்டில் வாழ்வோர் மகிழ்ச்சியோடும், செழிப்போடும் இருக்க வேண்டுமானால், அந்த வீட்டில் வாஸ்து சரியாக இருக்க வேண்டும். அதோடு வீட்டில் உள்ள பொருட்கள் வாஸ்துப்படி வைத்திருக்க வேண்டும். அப்படியானால் தான் குடும்பம் முன்னேறும். குடும்பத்தில் அன்பும் ஒற்றுமையும் நிலவும். ஆனால் எப்போது ஒருவரது வீட்டில் பிரச்சனைகளும், குழப்பங்களும் நிறைந்து, நிம்மதியான தூக்கத்தைப் பெற முடியாமல் இருக்கிறதோ, அந்த வீட்டில் வாஸ்து தோஷம் உள்ளது என்று அர்த்தம்.

ஒருவேளை வீடு வாஸ்துப்படி கட்டியிருந்தும் வீட்டில் பிரச்சனைகள் அதிகம் இருந்தால், உங்கள் வீட்டில் இருக்கக்கூடாத சில பொருட்கள் உள்ளது என்று அர்த்தம். இந்நிலையில் உடனே அந்த பொருட்கள் என்னவென்பதை அறிந்து, அவற்றை உடனே தூக்கி எறிந்துவிட வேண்டும். இல்லையெனில், வீட்டில் பிரச்சனைகளுடன் வறுமையும் வாட்டி எடுத்துவிடும். இப்போது வாஸ்துப்படி வீட்டில் இருக்கக்கூடாத சில பொருட்களைக் காண்போம்.

நடராஜர் சிலை
வாஸ்து சாஸ்திரப்படி, வீட்டில் நடராஜர் சிலையை வைத்திருக்கக்கூடாது. இல்லாவிட்டால், அது வீட்டில் குழப்பத்தை உண்டாக்கும். அதோடு வீட்டில் சண்டைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. ஆகவே தான் வீட்டில் நடராஜர் சிலையை வைத்திருக்கக்கூடாது. உங்கள் வீட்டில் நடராஜர் சிலை இருந்தால், உடனடியாக அதை வீட்டில் இருந்து அகற்றுங்கள்.

போர் படங்கள்
வாஸ்து சாஸ்திரத்தின் படி, வீட்டில் போர் புரிவது போன்ற புடங்களை வைத்திருக்கக்கூடாது. ஏனெனில் இம்மாதிரியான படங்கள் குடும்ப உறுப்பினர்களை மோசமாக பாதிக்குமாம். எனவே போர் படங்களை வீட்டில் வைத்திருப்பதைத் தவிர்த்திடுங்கள்.

முட்கள் நிறைந்த செடி
இன்று பலருக்கும் வீட்டில் செடிகளை வளர்க்கும் பழக்கம் அதிகரித்துள்ளது. ஆனால் அப்படி வீட்டில் வளர்க்கும் போது வாஸ்துப்படி எந்த மாதிரியான செடிகளை வளர்க்கலாம், எதை வளர்க்கக்கூடாது என்பதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள். வாஸ்துப்படி, ரோஜா செடிகளைத் தவிர, வீட்டில் முட்கள் நிறைந்த செடிகளை வளர்க்கக்கூடாது. இம்மாதிரியான செடிகள் வீட்டில் எதிர்மறை உருவாக்குகிறது.

எதிர்மறையான படங்கள்
வாஸ்து சாஸ்திரத்தில், கப்பல் மூழ்குவது, வேட்டையாடுவது, கத்திச் சண்டை, பிடிபட்ட யானைகள் அல்லது அழுவது போன்ற படங்களை வைத்திருப்பது தவறு என்று கருதப்படுகிறது. ஏனென்றால் இம்மாதிரியான படங்கள் வீட்டில் எதிர்மறை ஆற்றலை தங்க வைத்து, குடும்பத்தின் முன்னேற்றத்தில் தடைகளை உருவாக்கும். ஆகவே வீட்டில் எப்போதும் நேர்மறையான படங்களை வைத்திருக்க முயலுங்கள்.

சூரிய அஸ்தமனம்
வாஸ்து சாஸ்திரத்தின் படி, ஒருவரது வீட்டில் சூரியன் உதிக்கும் படியான படத்தை வைத்திருக்கலாம். ஆனால் சூரியன் மறையும் படியான போட்டோவை வீட்டில் வைத்திருக்கக்கூடாது. இது குடும்ப முன்னேற்றத்தை தடுக்கும்.



Click it and Unblock the Notifications











