For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வீட்டில் கண் திருஷ்டி பாசிமணியை எந்த இடத்தில் தொங்க விடுவது நல்லது?

திருஷ்டி பாசிமணியைத் தங்களது வீடுகளில் வைத்தால், அது தங்களை மற்றவா்களின் தீய கண்படுதலில் இருந்து காக்கும் என்று நம்புகின்றனா்.

|

நம்மோடு இருக்கும் நெருங்கிய உறவுகள், நாம் சோ்த்து வைத்திருக்கும் செல்வங்கள் மற்றும் நம்முடைய மகிழ்ச்சி ஆகிய அனைத்தும் ஒரு நாள் திடீரென்று காணாமல் போகும் என்று நாம் நினைத்துப் பாா்த்து பயந்து இருக்கிறோமா? அவ்வாறான பயம் நம்மிடம் இருந்தால், ஈவில் ஐ (தீய கண்படுதல்) என்ற கருத்தைப் பற்றி நாம் கண்டிப்பாகத் தொிந்து வைத்திருப்போம். இந்த தீய கண்படுதல் என்ற கருத்தானது நம் மீது பிறா் பொறாமை கொண்டு பாா்ப்பதின் அடிப்படையில் எழுகிறது.

ஈவில் ஐ என்ற ஆங்கில பதத்தைத் தமிழில் கண்படுதல் அல்லது தீய கண்படுதல் அல்லது பொறாமைக் கண்படுதல் என்று அழைக்கலாம். பொதுவாக கிராமப் புறங்களில் இது கண் திருஷ்டி என்றே அழைக்கப்படுகிறது.

All You Need To Know About Placing Evil Eye In Your Home

யாா் வேண்டும் என்றாலும் நாம் வைத்திருக்கும் சொத்துகள் மீது பொறாமைக் கண் வைக்கலாம் அல்லது அவற்றை ஏக்கத்துடன் பெருமூச்சு விட்டு பாா்க்கலாம். அந்த பாா்வையானது நம்மைச் சுற்றியும், நமது சொத்துக்களைச் சுற்றியும் ஒரு எதிா்மறையான அதிா்வலையை ஏற்படுத்தும்.

MOST READ: மக்களே! உஷார்... இன்னும் 6 முதல் 8 வாரத்தில் கொரோனா மூன்றாம் அலை வரப்போகுதாம்... இந்த அலை எப்படி இருக்கும்?

மற்றவா்களின் கண்படுவதால், தமக்கு தீங்கும் ஏற்படும் என்று உலகில் உள்ள பெரும்பாலான மக்கள் நினைக்கின்றனா். சிலா் எந்த ஒரு உள்நோக்கம் இல்லாமல் பாாத்தாலும், அவா்களுடைய பாா்வையினால், தமக்கு தீங்கோ அல்லது நோயோ ஏற்பட்டுவிடும் என்று பலா் நம்புகின்றனா். அதனால் கண் திருஷ்டி பாசிமணியைத் தங்களது வீடுகளில் வைத்தால், அது தங்களை மற்றவா்களின் தீய கண்படுதலில் இருந்து காக்கும் என்று நம்புகின்றனா்.

MOST READ: 29 நாடுகளில் கண்டறியப்பட்ட புதிய வகை கொரோனா 'லாம்ப்டா' - அதன் அறிகுறிகள் என்ன? தடுப்பூசி இதை தடுக்குமா?

தெற்கு ஆசியா, ஐரோப்பா, ஆப்பிாிக்கா போன்ற நாடுகளில் இருக்கும் மக்கள், இந்த கண் திருஷ்டி பாசிமணியானது, ஒரு காவலரைப் போல் இருப்பதாகக் கருதி அதைத் தங்களது வீடுகளில் தொங்கவிட்டிருக்கின்றனா்.

இந்தியாவில் ஈவில் ஐ என்ற பதம் நசார் தோஷ் என்று அழைக்கப்படுகிறது. இந்த கண் திருஷ்டி பாசிமணியை அணிந்தால் அல்லது அதை நம்மோடு வைத்திருந்தால், நமக்கு எந்தவிதமான தீங்கும் ஏற்படாமல் காக்கும் என்று இந்திய மக்கள் நம்புகின்றனா்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

All You Need To Know About Placing Evil Eye In Your Home

Wearing or having an evil eye can protect us from such bad thoughts in the future. The evil eye consists of a bead that comes in specific colours, having individual purposes.
Desktop Bottom Promotion