Latest Updates
-
இந்த 5 உணவுகள் உங்கள் உடலில் துர்நாற்றத்தை ஏற்படுத்தி சங்கடமாக உணர வைக்குமாம் - பார்த்து சாப்பிடுங்க -
வாஸ்து செடிகள்: கோடை வெயிலில் வீட்டை குளிர்ச்சியாக வைத்து அதிர்ஷ்டத்தை அள்ளுவது எப்படி? -
சிக்கன் பிரியாணியை விட சூப்பரா இருக்கும் ஆம்பூர் ஸ்டைல் சோயா பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க -
சனிபகவானின் வக்ர பெயர்ச்சியால் 138 நாட்களுக்கு ஜெயிக்கிற குதிரையா மாறப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
சீதா நவமி: உங்கள் வீட்டில் இந்த மாற்றங்களைச் செய்தா பணமழை கொட்டுமா? அதிர்ஷ்டம் தரும் வாஸ்து ரகசியம்! -
கோடையில் இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க.. உடல் எடையும் குறையும், உடல் சூடும் தணியும்.. -
இன்றைய ராசிபலன் 25 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ராஜயோகம் கூடிவரப்போகுதாம் -
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்!
வீட்டுல கெட்ட நாற்றம் வருதா? இதோ சூப்பர் டிப்ஸ்...

அதிலும் எங்கேனும் ஊருக்கு சென்று விட்டு, வீட்டிற்கு வந்தால், அப்போது வரும் துர்நாற்றத்தைத் தாங்க முடியாது. ஆகவே அத்தகைய எந்த ஒரு நாற்றமும் வீட்டிலிருந்து வராமல் இருக்க ஒரு சில சூப்பர் டிப்ஸ் இருக்கிறது. இது என்னவென்று படித்து தெரிந்து வீட்டை நறுமணத்துடன், சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள்.
* தினமும் வீட்டில் சேரும் குப்பைகளை அவ்வப்போது தூக்கிப் போட்டு விட வேண்டும். ஒரு நாள் அவற்றை மறந்தாலும், பின் வீடே நாற்றத்தில் மூழ்கிவிடும்.
* வீட்டில் பயன்படுத்தும் குப்பைத் தொட்டிகள் எப்போது மூடியிருக்க வேண்டும். அதிலும் அந்த தொட்டிகள் கிச்சன், பாத் ரூம் அல்லது ஹால் என்று எங்கு இருக்கிறது என்பது முக்கியமில்லை, அது மூடியிருக்கிறதா என்பது தான் முக்கியம். இல்லையெனில் அதிலிருந்து நாற்றம் வரும்.
* அணியும் உடைகளை எப்போதும் அழுக்குப் பை அல்லது கூடையில் போட வேண்டும். அதிலும் மூடி போட்டதாகவோ அல்லது ஜிப் உள்ளதாகவோ இருக்க வேண்டும். இல்லையெனில் துணியில் இருந்து வரும் வியர்வை வாசனை, வீட்டிலேயே சுற்றிக் கொண்டிருக்கும்.
* வீட்டில் சமைக்கும் உணவுகளை திறந்த படியே வைக்க கூடாது. எப்போது சமைத்தாலும், அந்த உணவுகளை மறக்காமல் மூடி வைக்க வேண்டும். இல்லையெனில் சமைக்கும் போது, வீட்டில் சுற்றிக் கொண்டிருக்கும் காற்றை வெளியேற்றும் எக்ஸாஸ்ட் ஃபேன் போட்டு விட வேண்டும்.
* பாத்ரூம் எப்போதும் அதிக ஈரத்துடனோ அல்லது நீர் தேக்கத்துடனோ இருந்தால், அது நாற்றத்தை ஏற்படுத்தும். ஆகவே அப்போது அதனை மாப் வைத்து துடைத்து விட்டு, பின் ஏதேனும் ஏர் ஃப்ரஸ்னரை அடித்துவிட வேண்டும்.
* சமைத்து முடித்ததும் மறக்காமல் சமயலறையை துடைத்துவிட வேண்டும். இல்லாவிட்டால், அந்த பொருட்களின் வாசனைக்கு பூச்சிகள் வந்துவிடும். பின் அந்த பூச்சிகள் வீட்டிலேயே தங்கிவிடும். பின் அதனால் நாற்றம் அதிகம் வரும்.
* வீட்டை துடைக்கும் போது, நீரில் பினாயில் அல்லது மற்ற நீர்மத்தை கலந்து துடைப்பதைவிட, ஏதேனும் வாசனை மிகுந்த எலுமிச்சை வாசனை உள்ளதை வாங்கி, ஊற்றி பயன்படுத்தினால், சூப்பராக இருக்கும்.
* எப்போதும் வீட்டில் இருக்கும் பாத்ரூமை பயன்படுத்தியதும், மூடி விட வேண்டும். இதனால் கழிவறையிலிருந்து வரும் நாற்றம் வீட்டில் பரவுவதைத் தடுக்கலாம்.
* வீட்டில் உள்ள நாற்றத்தை போக்க சிறந்த வழி என்னவென்றால், வீட்டில் சூரிய வெளிச்சம் படுவது தான். ஏனெனில் அந்த வெளிச்சம் வீட்டில் படுவதால், எந்த ஒரு நாற்றமும் வீட்டில் இருக்காது. மேலும் வீட்டில் உள்ள ஜன்னல்களை காலை வேளையில் திறந்து வைப்பது நல்லது.
இவற்றையெல்லாம் பின்பற்றி வந்தால், வீட்டிலிருந்து வரும் துர்நாற்றத்தை தடுக்கலாம். வேறு என்னவெல்லாம் செய்யலாம் என்று உங்களுக்கு தெரிந்தால், எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.



Click it and Unblock the Notifications