Latest Updates
-
சுக்கிரன் ரிஷப ராசிக்கு சென்றதால் தோல்வியையும், துரதிர்ஷ்டத்தையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் -
ஏப்ரல் மாத இறுதியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்.. -
உங்கள் கால் விரலின் நீளம் எவ்வளவு இருக்குனு சொல்லுங்க? உங்களை பற்றிய ரகசியத்தை நாங்க சொல்றோம் -
Vastu Tips: வாஸ்துப்படி, ஆந்தை சிலையை வீட்டின் இந்த இடத்துல வையுங்க.. வீட்டில் பண வரவு அதிகரிக்கும்.. -
தித்திக்கும் கேரளாவின் மாம்பழ பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, அட்டகாசமாக இருக்கும் -
திருமண வாழ்க்கையில் சிக்கலா? AI சாட்பாட்களிடம் ஆலோசனை கேட்கும் இந்திய தம்பதிகள் - இது ஆபத்தா? -
3 முட்டை, 2 வெங்காயம், 1/2 மூடி தேங்காய் இருந்தா.. சப்பாத்திக்கு இந்த சைடு டிஷ் பண்ணுங்க.. தாறுமாறா இருக்கும். -
டேட்டிங் ஆப் பயன்படுத்துறீங்களா? டெல்லி-NCR-ல் உங்களை குறிவைக்கும் 'ஹனி ட்ராப்' கும்பல் - உஷார்! -
வாஸ்து படி இந்த தவறுகள் உங்கள் வீட்டில் இருந்தால் ராகுவின் சாபம் உங்களை பாடாய்படுத்துமாம் - ஜாக்கிரதை -
உங்க கழுத்து கருப்பா இருக்கா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க...
உங்க வீட்டுல மணி பிளான்ட் இருக்கா? இந்த தவறை செய்யாதீங்க.. இல்லன்னா பண பிரச்சனை வரும்...
இன்று பலருக்கும் வீட்டின் அழகை மேம்படுத்துவதில் ஆர்வம் அதிகரித்துள்ளது. மணி பிளான்ட் செடி வீட்டிற்கு ஒருவித அழகைக் கொடுப்பதோடு, வீட்டில் மகிழ்ச்சி மற்றும் செழிப்பை மேம்படுத்த உதவுவதாக வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது.
இன்று பலருக்கும் வீட்டின் அழகை மேம்படுத்துவதில் ஆர்வம் அதிகரித்துள்ளது. அதற்காக வீட்டில் பல பொருட்களை வாங்கி வைக்கிறார்கள். அதில் ஒன்று தான் மணி பிளான்ட். இந்த செடி வீட்டிற்கு ஒருவித அழகைக் கொடுப்பதோடு, வீட்டில் மகிழ்ச்சி மற்றும் செழிப்பை மேம்படுத்த உதவுவதாக வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது. ஒருவர் வீட்டில் மணி பிளான்ட்டை வைத்தால், சில விதிகளை பின்பற்ற வேண்டியது அவசியம். இல்லாவிட்டால், வீட்டில் பணம் சேர்வதற்கு பதிலாக, அதிகம் செலவை ஏற்படுத்தும்.

குறிப்பாக வீட்டில் மணி பிளான்ட்டை தவறான இடத்தில் வைத்தால், அது ஒருவரை ஏழ்மையில் தள்ளிவிடுவதோடு, வீட்டில் எதிர்மறை ஆற்றலை அதிகரிக்கும். இதனால் வீட்டில் உள்ளோர் பண பிரச்சனை, கடன் சுமையால் கஷ்டப்பட நேரிடும். இப்போது வீட்டில் மணி பிளான்ட் வைத்திருப்பவர்கள் எந்த மாதிரியான தவறுகளை செய்யக்கூடாது என்பதைக் காண்போம்.

தவறு #1
வாஸ்துப்படி, மணி பிளான்ட் செடியை வீட்டின் வடகிழக்கு திசையில் வைக்கக்கூடாது. நற்பலன்கள் கிடைக்க வேண்டுமானால், மணி பிளான்ட் செடியை வீட்டின் தென்கிழக்கு திசையில் வைக்க வேண்டும். இதனால் வீட்டில் பணம் பெருகும்.

தவறு #2
வீட்டில் வைக்கும் மணி பிளான்ட் செடியை காய்ந்த இலையுடன் வைக்கக்கூடாது. காய்ந்த இலையுடன் மணி பிளான்ட் செடியை வைப்பது வீட்டிற்கு துரதிர்ஷ்டத்தை வரவழைக்கும். எனவே வீட்டில் வைக்கும் மணி பிளான்ட் செடியில் காய்ந்த இலை இருந்தால் அந்த இலையை உடனே அப்புறப்படுத்துங்கள் அல்லது செடியை மாற்றுங்கள்.

தவறு #3
மணி பிளான்ட் செடியை வீட்டினுள் மேலிருந்து கீழாக தொங்கவிடக்கூடாது. மாறாக அந்த கொடியை ஒரு குச்சி அல்லது நூலின் உதவியால் மேல் நோக்கி செல்லுமாறு உயர்த்த வேண்டும். இதனால் வீட்டில் உள்ளவர்கள் வாழ்வில் வேகமாக முன்னேறுவார்கள். இல்லாவிட்டால், வாழ்வில் தடைகளை சந்திக்கக்கூடும்.

தவறு #4
மணி பிளான்ட் செடியை வீட்டிற்கு வெளியே எப்போதும் வைத்து வளர்க்கக்கூடாது. அலங்காரத்திற்காக கூட வீட்டிற்கு வெளியே மணி பிளான்ட் செடியை வைக்காதீர்கள். வாஸ்துப்படி, மணி பிளான்ட் செடியை வீட்டினுள் தான் வைத்து வளர்க்க வேண்டும். அப்படியென்றால் தான் அதன் பலனைப் பெற முடியும்.

தவறு #5
எக்காரணம் கொண்டும் மணி பிளான்ட் செடியை பிளாஸ்டிக் பாட்டிலில் வைத்து வளர்க்கக்கூடாது. வாஸ்து சாஸ்திரத்தின் படி, மணி பிளான்ட் செடியை கண்ணாடி பாட்டில் அல்லது மண் பாத்திரத்தில் தான் வைத்து வளர்க்க வேண்டும்.



Click it and Unblock the Notifications