Latest Updates
-
சப்பாத்திக்கு அட்டகாசமாக இருக்கும் வேர்க்கடலை குடைமிளகாய் குருமா - இந்த ஸ்டைலில் செஞ்சு பாருங்க -
செஃப் தீனா ஸ்டைல் இட்லி பொடியின் ஸ்பெஷலே கடைசியாக சேர்க்கும் இந்த ஒரு பொருள் தாங்க.. அது என்னன்னு பாருங்களேன். -
இந்த 3 மாதத்தில் பிறந்தவர்களுக்கு கெட்டவர்களை பார்த்தவுடனேயே கண்டறியும் அதிசய சக்தி இருக்குமாம் -
முகம் கருப்பா இருக்கா? பலாப்பழம் வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. வெள்ளையாவீங்க.. -
இந்தியாவில் ஆண் நதி என்று அழைக்கப்படும் ஒரே நதி எது தெரியுமா? இந்தியாவின் மிகப்பெரிய நதியும் இதுதானாம் -
12 ஆண்டுகள் கழித்து கடகத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: இந்த 5 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது..! -
கோயம்பத்தூர் ஸ்டைல் சாம்பார் ரெசிபி - இந்த மாதிரி சாம்பார் வைச்சு பாருங்க - டேஸ்ட் வேற லெவலில் இருக்கும் -
உருளைக்கிழங்கை ஒருவாட்டி இந்த பக்குவத்துல வறுவல் செய்யுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்.. -
செவ்வாய் ரிஷப ராசிக்கு செல்வதால் கோடிகளில் புரளப்போகும் 3 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி இதுல இருக்கா? -
உணவில் உள்ள முழு சத்துக்களை பெற வேண்டுமா? அப்ப இப்படி சாப்பிடுங்க.. கூறும் ஹெல்த் கோச்!
உங்க வீட்டுல மணி பிளான்ட் இருக்கா? இந்த தவறை செய்யாதீங்க.. இல்லன்னா பண பிரச்சனை வரும்...
இன்று பலருக்கும் வீட்டின் அழகை மேம்படுத்துவதில் ஆர்வம் அதிகரித்துள்ளது. மணி பிளான்ட் செடி வீட்டிற்கு ஒருவித அழகைக் கொடுப்பதோடு, வீட்டில் மகிழ்ச்சி மற்றும் செழிப்பை மேம்படுத்த உதவுவதாக வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது.
இன்று பலருக்கும் வீட்டின் அழகை மேம்படுத்துவதில் ஆர்வம் அதிகரித்துள்ளது. அதற்காக வீட்டில் பல பொருட்களை வாங்கி வைக்கிறார்கள். அதில் ஒன்று தான் மணி பிளான்ட். இந்த செடி வீட்டிற்கு ஒருவித அழகைக் கொடுப்பதோடு, வீட்டில் மகிழ்ச்சி மற்றும் செழிப்பை மேம்படுத்த உதவுவதாக வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது. ஒருவர் வீட்டில் மணி பிளான்ட்டை வைத்தால், சில விதிகளை பின்பற்ற வேண்டியது அவசியம். இல்லாவிட்டால், வீட்டில் பணம் சேர்வதற்கு பதிலாக, அதிகம் செலவை ஏற்படுத்தும்.

குறிப்பாக வீட்டில் மணி பிளான்ட்டை தவறான இடத்தில் வைத்தால், அது ஒருவரை ஏழ்மையில் தள்ளிவிடுவதோடு, வீட்டில் எதிர்மறை ஆற்றலை அதிகரிக்கும். இதனால் வீட்டில் உள்ளோர் பண பிரச்சனை, கடன் சுமையால் கஷ்டப்பட நேரிடும். இப்போது வீட்டில் மணி பிளான்ட் வைத்திருப்பவர்கள் எந்த மாதிரியான தவறுகளை செய்யக்கூடாது என்பதைக் காண்போம்.

தவறு #1
வாஸ்துப்படி, மணி பிளான்ட் செடியை வீட்டின் வடகிழக்கு திசையில் வைக்கக்கூடாது. நற்பலன்கள் கிடைக்க வேண்டுமானால், மணி பிளான்ட் செடியை வீட்டின் தென்கிழக்கு திசையில் வைக்க வேண்டும். இதனால் வீட்டில் பணம் பெருகும்.

தவறு #2
வீட்டில் வைக்கும் மணி பிளான்ட் செடியை காய்ந்த இலையுடன் வைக்கக்கூடாது. காய்ந்த இலையுடன் மணி பிளான்ட் செடியை வைப்பது வீட்டிற்கு துரதிர்ஷ்டத்தை வரவழைக்கும். எனவே வீட்டில் வைக்கும் மணி பிளான்ட் செடியில் காய்ந்த இலை இருந்தால் அந்த இலையை உடனே அப்புறப்படுத்துங்கள் அல்லது செடியை மாற்றுங்கள்.

தவறு #3
மணி பிளான்ட் செடியை வீட்டினுள் மேலிருந்து கீழாக தொங்கவிடக்கூடாது. மாறாக அந்த கொடியை ஒரு குச்சி அல்லது நூலின் உதவியால் மேல் நோக்கி செல்லுமாறு உயர்த்த வேண்டும். இதனால் வீட்டில் உள்ளவர்கள் வாழ்வில் வேகமாக முன்னேறுவார்கள். இல்லாவிட்டால், வாழ்வில் தடைகளை சந்திக்கக்கூடும்.

தவறு #4
மணி பிளான்ட் செடியை வீட்டிற்கு வெளியே எப்போதும் வைத்து வளர்க்கக்கூடாது. அலங்காரத்திற்காக கூட வீட்டிற்கு வெளியே மணி பிளான்ட் செடியை வைக்காதீர்கள். வாஸ்துப்படி, மணி பிளான்ட் செடியை வீட்டினுள் தான் வைத்து வளர்க்க வேண்டும். அப்படியென்றால் தான் அதன் பலனைப் பெற முடியும்.

தவறு #5
எக்காரணம் கொண்டும் மணி பிளான்ட் செடியை பிளாஸ்டிக் பாட்டிலில் வைத்து வளர்க்கக்கூடாது. வாஸ்து சாஸ்திரத்தின் படி, மணி பிளான்ட் செடியை கண்ணாடி பாட்டில் அல்லது மண் பாத்திரத்தில் தான் வைத்து வளர்க்க வேண்டும்.



Click it and Unblock the Notifications