Latest Updates
-
புதன் பெயர்ச்சியால் ஜூன் 22 முதல் இந்த 4 ராசிக்காரங்க பண மழையில் நனையப்போறாங்க.. உங்க ராசியும் இதுல இருக்கா? -
1 கப் ஜவ்வரிசி இருந்தா.. காலையில் 5 நிமிடத்தில் இந்த டிபனை செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 20 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு பெரிய நஷ்டம் ஏற்பட வாய்ப்பிருக்காம் - ஜாக்கிரதை -
ஜூன் 23-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், யாருக்கு மோசமாகவும் இருக்கும்? -
சனிபகவான்-புதன் உருவாக்கும் அரிய கிரக சேர்க்கையால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் இவங்கதான் -
தக்காளி சட்னி அரைக்கும் போது இந்த ஒரு பொருளை சேர்த்து அரைச்சு பாருங்க - ஆரோக்கியமாவும், சுவையாவும் இருக்கும் -
முகத்தில் உள்ள கருமையைப் போக்கணுமா? அப்ப கடலை மாவு வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
இன்டர்நெட் வசதியே இல்லாத உலகின் மிகவும் மோசமான நாடு எது தெரியுமா? இங்க தங்கத்தை விட இன்டர்நெட் காஸ்ட்லி -
1 கப் கோதுமை மாவு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செஞ்சு குடுங்க... -
இந்த 4 மாதத்தில் பிறந்தவர்கள் பணத்தை அலட்சியமாக தண்ணீர் போல செலவழிப்பார்களாம் - உங்க பிறந்த மாதம் என்ன?
மழைநீரை செடிகளுக்குப் பயன்படுத்த சில டிப்ஸ்...

மேலும் இந்த உலகில் அதிக அளவு உப்புத் தண்ணீரும், மிகவும் குறைந்த அளவு நல்ல தண்ணீரும் இருக்கிறது. அத்தகைய நல்ல தண்ணீரும் மழை வந்தால் மட்டுமே பெற முடியும். அந்த மழையும் ஒரு சில மாதங்களே வரும். ஆகவே அப்போது வரும் போது அந்த மழையை சரியாக முறையாக சேகரித்து, செடிகளுக்கு வேண்டிய நேரம் பயன்படுத்தினால், செடியும் நன்கு வளரும். அதற்கு மழை வரும் போது மாடிகளில் தேங்கும் மழை நீரை ஒரு பைப் மூலம் டேங்க் அமைத்து சேகரித்து வைத்து பயன்படுத்தலாம்.
செடிகளுக்குத் தண்ணீரை ஊற்றாமல், தெளித்து வந்தால் செடிகளின் அனைத்து இடங்களுக்கும் சரியான அளவு தண்ணீரானது பரவும். ஆகவே மழையும் செடிகளுக்கு ஒரு சிறந்த தண்ணீர் தெளிப்பான்.
அதுமட்டுமல்லாமல் மழை வரும்போது தோட்டத்தில் ஒரு சிறிய கூடாரம் போன்று அமைக்க வேண்டும். ஏனெனில் அளவுக்கு அதிகமான நீரானது செடிகளுக்கு அழிவைத் தரும். ஆகவே அப்போது மழையின் சாரலானது படும்படி கூடாரம் போன்று அமைக்கலாம். இல்லையென்றால் ஒரு சிறு கால்வாய் அமைத்து அதில் மழை நீரை செடிகளை நோக்கிப் பாய்ச்சலாம். இதனால் செடிகளானது பாதிப்படையாமல் இருக்கும்.
செய்யக்கூடாதவை...
1. வீட்டின் உள்ளே தொட்டிகளில் வளர்க்கும் செடியை முதன்முறையாக மழை வரும் போது வைக்க வேண்டாம். ஏனெனில் அந்த மழையில் டாக்சிக் பொருளானது இருக்கும். மேலும் அந்த மழையானது வளிமண்டலத்தில் உள்ள மாசுக்களை அப்போது தான் வெளியேற்றுகிறது. ஆகவே அந்த மழைநீர் செடிகளில் பட்டால் செடிகள் பாதிக்கப்படும்.
2. மழை நீரானது செடிகளுக்கு நல்லதாக இருக்கலாம், ஆனால் காற்று மற்றும் புயல் நல்லதல்ல. மேலும் மழையானது வரும் போது காற்றானது பலமாக வரலாம். ஆகவே அப்போது செடிகளை காற்று தானே என்று சாதாரணமாக விட்டால், செடியானது வேரோடு பறந்துவிடும்.



Click it and Unblock the Notifications