Latest Updates
-
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...!
மனதைக் கொள்ளை கொள்ளும் வீட்டுத் தோட்டங்கள்

சரியான பருவம்
தோட்டம் போட சரியான பருவம் கோடைகாலமோ, குளிர்காலமோ ஏற்றதல்ல, வசந்த காலத்தில் அதாவது பிப்ரவரி மாதத்தின் மத்தியில் தொடங்கி மார்ச் இறுதிக்குள் தோட்டம் அமைக்க ஏற்ற பருவமாகும்.
மண்ணின் தன்மை
தோட்டம் அமைப்பதற்கு முன்பு, அப்பகுதிக்குள் கால்நடைகளோ, கோழி போன்றவையோ வந்து விடாமல் தடுக்கும் வேலி அமைப்பது மிகவும் முக்கியம். மண்ணின் தன்மையை அறிந்து அதற்கேற்ப செடிகளை தேர்வு செய்து அமைக்கவேண்டும். களிமண் என்றால் தோட்டம் அமைக்க ஏற்றது. செடிகளுக்கு ஊற்றும் தண்ணீர் வேர் வரை ஊடுருவும். செடிகளை நடுவதற்கு முன்பு மக்கிய தொழு உரம் போட்டு மண்ணைக் கொத்திவிட்டு மண்ணை இளகச் செய்து வைத்திருங்கள்.
சூரிய ஒளி அவசியம்
தோட்டம் அமைக்கப்பட வேண்டிய இடம் சூரிய ஒளி படும் இடமாக இருக்க வேண்டியது மிகவும் அவசியம். தோட்டத்தில் நேரடியாக சூரிய ஒளி படும் இடமாக பார்த்து, நிழல் எந்த அளவிற்கு விழும் என்பதை அறிந்தும் தாவரங்களை நடவு செய்யவேண்டும். அருகில் உள்ள நர்சரிகளுக்கு சென்று அங்குள்ள தரமான தாவரங்களை கண்டறிந்து அவர்கள் செடிகளை பராமரிக்கும் விதம் பற்றி தெரிந்து கொண்டு வரலாம். இது வீட்டுத் தோட்டம் அமைக்க உதவிகரமாக இருக்கும்.
கொடிகளுக்குப் பந்தல்
கொடி வகைகளை அதற்கான பந்தல் அமைத்து அதன் கீழே நடவு செய்யலாம். அல்லது முள் வேலி இருந்தால் அதன் மீது படரும் வகையில் கொடி வகைகளை நடவு செய்யலாம்.
தோட்டத்தின் எல்லாப் பகுதிகளுக்கும் சென்று வர போதுமான இடவெளி விட்டு செடிகளை நடுவது மிகவும் முக்கியம்.
செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சும் போது அதிக சிரத்தை எடுத்துக் கொள்ளவேண்டும். தண்ணீர் தேங்காமல் எளிதாக வடிந்து செல்லும் அளவிற்கு வடிகால் வசதியுள்ள தொட்டிகளை தேர்வு செய்யலாம்.
அழகை அதிகரிக்கும்
சீசன் செடிகளை சரியாக பராமரிக்க வேண்டும். வருடத்திற்கு ஒருமுறை அதற்கேற்ப கவனித்து உரமிடுவது அவசியம். இறந்துபோன தாவரங்களை அவ்வப்போது அகற்றிவிடவேண்டும்.
செடிகளுக்கு இயற்கையான மட்கிய இலை, தழைகளால் தயாரிக்கப்பட்ட உரங்களை போடலாம். தோட்டத்தின் ஒரு பகுதியிலேயே ஒரு பள்ளத்தைத் தோண்டி அந்த மண்ணைக் கொண்டு பாத்திகள் செய்து கொள்ளவும். பள்ளத்தில் வீட்டின் மக்கும் குப்பைகளைக் கொட்டி மக்கச் செய்து அதையே தோட்டத்திற்குப் பயன்படுத்தவும் வேலை தோட்டத்தின் ஒரு பகுதியிலேயே குப்பையை மக்கச் செய்வது மண்ணை வளப்படுத்தவும் உதவும்.
மரங்கள் அழகூட்டும்
வீட்டின் காம்பவுண்டு சுவருக்கு அருகில் செம்பருத்தி, போகன்வில்லா செடிகளை வளர்ப்பது வீட்டின் அழகை அதிகரிக்கும். தோட்டத்தின் ஓரத்தில் மா மரம், நெல்லிக்காய் மரம் போன்றவை நட்டு வைத்தால் மற்றச் செடிகளுக்கு பாதிப்பு ஏற்படுவதைத் தடுக்கலாம்.



Click it and Unblock the Notifications











