Latest Updates
-
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்! -
மட்டன் சுவையை மிஞ்சும் சோயா உருளைக்கிழங்கு குருமா ரெசிபி - செஞ்சு பாருங்க, செமையா இருக்கும் -
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்! -
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டகாத்து வீசும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க -
வீட்டிலேயே மாம்பழ ஐஸ்க்ரீம்மை ஈஸியாக செய்வது எப்படி-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இந்த உணவுகளில் ஒன்றை தினமும் சாப்பிடணுமாம் - அதான் நல்லது
மனதைக் கொள்ளை கொள்ளும் வீட்டுத் தோட்டங்கள்

சரியான பருவம்
தோட்டம் போட சரியான பருவம் கோடைகாலமோ, குளிர்காலமோ ஏற்றதல்ல, வசந்த காலத்தில் அதாவது பிப்ரவரி மாதத்தின் மத்தியில் தொடங்கி மார்ச் இறுதிக்குள் தோட்டம் அமைக்க ஏற்ற பருவமாகும்.
மண்ணின் தன்மை
தோட்டம் அமைப்பதற்கு முன்பு, அப்பகுதிக்குள் கால்நடைகளோ, கோழி போன்றவையோ வந்து விடாமல் தடுக்கும் வேலி அமைப்பது மிகவும் முக்கியம். மண்ணின் தன்மையை அறிந்து அதற்கேற்ப செடிகளை தேர்வு செய்து அமைக்கவேண்டும். களிமண் என்றால் தோட்டம் அமைக்க ஏற்றது. செடிகளுக்கு ஊற்றும் தண்ணீர் வேர் வரை ஊடுருவும். செடிகளை நடுவதற்கு முன்பு மக்கிய தொழு உரம் போட்டு மண்ணைக் கொத்திவிட்டு மண்ணை இளகச் செய்து வைத்திருங்கள்.
சூரிய ஒளி அவசியம்
தோட்டம் அமைக்கப்பட வேண்டிய இடம் சூரிய ஒளி படும் இடமாக இருக்க வேண்டியது மிகவும் அவசியம். தோட்டத்தில் நேரடியாக சூரிய ஒளி படும் இடமாக பார்த்து, நிழல் எந்த அளவிற்கு விழும் என்பதை அறிந்தும் தாவரங்களை நடவு செய்யவேண்டும். அருகில் உள்ள நர்சரிகளுக்கு சென்று அங்குள்ள தரமான தாவரங்களை கண்டறிந்து அவர்கள் செடிகளை பராமரிக்கும் விதம் பற்றி தெரிந்து கொண்டு வரலாம். இது வீட்டுத் தோட்டம் அமைக்க உதவிகரமாக இருக்கும்.
கொடிகளுக்குப் பந்தல்
கொடி வகைகளை அதற்கான பந்தல் அமைத்து அதன் கீழே நடவு செய்யலாம். அல்லது முள் வேலி இருந்தால் அதன் மீது படரும் வகையில் கொடி வகைகளை நடவு செய்யலாம்.
தோட்டத்தின் எல்லாப் பகுதிகளுக்கும் சென்று வர போதுமான இடவெளி விட்டு செடிகளை நடுவது மிகவும் முக்கியம்.
செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சும் போது அதிக சிரத்தை எடுத்துக் கொள்ளவேண்டும். தண்ணீர் தேங்காமல் எளிதாக வடிந்து செல்லும் அளவிற்கு வடிகால் வசதியுள்ள தொட்டிகளை தேர்வு செய்யலாம்.
அழகை அதிகரிக்கும்
சீசன் செடிகளை சரியாக பராமரிக்க வேண்டும். வருடத்திற்கு ஒருமுறை அதற்கேற்ப கவனித்து உரமிடுவது அவசியம். இறந்துபோன தாவரங்களை அவ்வப்போது அகற்றிவிடவேண்டும்.
செடிகளுக்கு இயற்கையான மட்கிய இலை, தழைகளால் தயாரிக்கப்பட்ட உரங்களை போடலாம். தோட்டத்தின் ஒரு பகுதியிலேயே ஒரு பள்ளத்தைத் தோண்டி அந்த மண்ணைக் கொண்டு பாத்திகள் செய்து கொள்ளவும். பள்ளத்தில் வீட்டின் மக்கும் குப்பைகளைக் கொட்டி மக்கச் செய்து அதையே தோட்டத்திற்குப் பயன்படுத்தவும் வேலை தோட்டத்தின் ஒரு பகுதியிலேயே குப்பையை மக்கச் செய்வது மண்ணை வளப்படுத்தவும் உதவும்.
மரங்கள் அழகூட்டும்
வீட்டின் காம்பவுண்டு சுவருக்கு அருகில் செம்பருத்தி, போகன்வில்லா செடிகளை வளர்ப்பது வீட்டின் அழகை அதிகரிக்கும். தோட்டத்தின் ஓரத்தில் மா மரம், நெல்லிக்காய் மரம் போன்றவை நட்டு வைத்தால் மற்றச் செடிகளுக்கு பாதிப்பு ஏற்படுவதைத் தடுக்கலாம்.



Click it and Unblock the Notifications