Latest Updates
-
வெயிலால் நீர்ச்சத்து குறைபாடு வரக்கூடாதா? அப்ப இந்த டாக்டர் சொல்ற 3 விதைகளை நீரில் ஊற வெச்சு சாப்பிடுங்க.. -
பாபா வங்கா கணிப்பு படி 2026 முதல் 2030 வரை உலகில் என்னென்ன மோசமான சம்பவங்கள் நடக்கப்போகுது தெரியுமா? -
செவ்வாயால் உருவாகும் சக்திவாய்ந்த ருச்சக யோகம்: மே மாதம் இந்த 3 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டபோகுது -
2 வெள்ளரிக்காயும், 1 கப் ரவையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை செய்யுங்க.. வேற லெவல்-ல இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 21 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க வாழ்க்கையில் உச்சத்தை தொடப்போறாங்களாம் -
கேதுவின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் அடுத்த 8 மாதம் இந்த 4 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்.. -
வாஸ்துப்படி, ஃப்ரிட்ஜ்ஜின் மேல் இந்த பொருட்களை ஒருபோதும் வெக்காதீங்க.. இல்ல பிரச்சனை அதிகரிக்கும்.. -
Malai Ice Cream: கொளுத்துற வெயிலுக்கு வெறும் 4 பொருளை வெச்சு குளுகுளு-ன்னு இப்படி ஐஸ்க்ரீம் செய்யுங்க.. -
வெயிலால் உங்க கை கருப்பா மாறுதா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
குரு பகவானின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 5 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட காத்து வீசும்!
செடியை ஆரோக்கியமாக வளர்க்க வேண்டுமா!!!

* முதலில் செடியை வைக்கும் முன், அந்த செடியைப் பற்றி நன்கு தெரிந்துகொள்ள வேண்டும். ஏனெனில் அனைத்து செடிகளும் வெவ்வேறு இனம் மற்றும் குடும்பத்தை சேர்ந்தது. உதாரணமாக, காக்டஸ் செடியை எடுத்துக் கொண்டால், அதனை மண்ணில் வளர்க்க முடியாது. நீரில் தான் வளரும் என்பதை நன்கு தெரிந்து கொண்டு வளர்க்க வேண்டும். அதுமட்டுமல்லாமல், எந்த செடி எப்படி வைத்தால் நன்கு வளரும் என்பதையும் தெரிந்து கொள்வது மிகவும் அவசியம்.
* அனைத்து செடிகளும் ஒரே மண்ணில் வளராது. அதற்கு என்று ஒரு சிறப்பான மண் இருக்கும். சில செடிகள் களிமண்ணில் வளரும். சில செடிகள் சாதாரண மண்ணில் வளரும். ஆகவே சரியான மண்ணை தேர்ந்தெடுத்து வளர்த்தால், அந்த செடி நீண்ட நாட்கள் ஆரோக்கியமாக வளரும்.
* சில செடிகள் விதைகள் மூலம் வளரும், சில செடிகள் அதன் கன்றுகள் மூலம் வளரும். ஆகவே இதனை தெரிந்து கொண்டு, எதை நம் வீட்டுத் தோட்டத்தில் வைத்தால் நன்கு வளரும் என்று யோசித்து, வைத்தால் நல்லது. அதிலும் புதிதாக தோட்டம் வைப்பவர்கள், கன்றுகளை வைத்து வளரும் செடிகளை வளர்ப்பது நல்லது. ஏனெனில் விதைகளை வைத்து வளர்ப்பதில் சற்று கடினமானது, மேலும் அதனை அப்போது புதிதாக தோட்டம் வைப்பவர்களால் சரியாக பராமரிக்க முடியாது.
* செடிகளில் இரு வகைகள் உண்டு. வற்றாத செடி மற்றும் பருவக்கால செடி. வற்றாத செடிகளின் விதைகளை விதைத்தால், எந்த நேரத்திலும் செடி வளரும். ஆனால் பருவக்கால செடிகளை அந்தந்த பருவத்திற்கு ஏற்பவே வைக்க வேண்டும்.
* ஒவ்வொரு செடிகளுக்கும் ஒவ்வொரு மாதிரி தண்ணீரானது தேவைப்படும். சில செடிகளுக்கு இரண்டு வாரத்திற்கு ஒரு முறை தண்ணீர் ஊற்றினாலே போதுமானது, ஒருசிலவற்றிற்கு வாரத்திற்கு ஒரு முறை ஊற்றினால் போதும். ஆகவே தோட்டத்தில் வைக்கும் செடிக்கு எவ்வளவு தண்ணீர் வேண்டும் என்பதைப் பற்றியும் நன்கு தெரிந்து கொள்ள வேண்டும்.
* ஒரு சில தாவரங்களுக்கு வெயில் தேவைப்படும், ஒரு சிலவற்றிற்கு நிழலே போதுமானது. ஏனெனில் தாவரங்கள் உயிர் வாழ்வதற்குத் தேவையான ஒளிச்சேர்க்கையை சூரிய வெப்பத்திலிருந்து தான் பெறுகிறது. மேலும் சூரிய வெளிச்சம் அளவுக்கு அதிகமாக பட்டால், செடிகள் வாடிவிடும். ஆகவே எந்த தாவரங்களை எங்கு வைத்தால் நன்கு வளரும் என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும்.
* மேலே சொன்னவற்றை மட்டும் தெரிந்துகொண்டால் போதாது. முக்கியமாக எந்த கிளைமேட்டில் வைத்தால் நன்கு தாவரங்கள் வளரும் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். உதாரணமாக, வெப்ப மண்டலத்தில் வளரும் செடிகளை, பனிப்பொழிவு காலத்திலும் வளரும் என்று நினைத்தால், அது தவறு. ஆகவே இதனையும் நன்கு தெரிந்து கொள்ள வேண்டும்.



Click it and Unblock the Notifications











