டீ குடிக்கும் போது பிஸ்கட் சாப்பிடுபவரா நீங்க? உங்களுக்கான முக்கிய செய்திதான் இது...!

உலகில் தண்ணீருக்குப் அடுத்ததாக அதிகளவு மக்களால் குடிக்கப்படும் பானம் எதுவென்றால் அது தேநீர்தான். தினமும் தேநீர் குடிப்பது கோடிக்கணக்கான மக்களின் தவிர்க்க முடியாத ஒரு பழக்கமாக உள்ளது. தேநீர் குடிப்பதில் குறிப்பிடத்தக்க நன்மைகள் இருந்தாலும் அதில் சில பக்க விளைவுகளும் உள்ளது.

தேநீர் குடிக்கும் போது அதனுடன் சில நொறுக்குத்தீனிகளை சேர்த்து சாப்பிடுவது பலரின் வழக்கமாக உள்ளது, குறிப்பாக இந்த பழக்கம் இந்தியர்களிடையே மிகவும் பிரபலமானது. இந்த நொறுக்குத்தீனிகளில் பெரும்பாலும் முதலிடத்தில் இருப்பது பிஸ்கட்தான்.

Why You Shouldn t Eat Biscuits With Tea in Tamil

பெரும்பாலான மக்கள் தேநீருடன் பிஸ்கட் சேர்த்து சாப்பிட முக்கியக் காரணம் அதன் விலையும், அதன் சுவையும்தான், மற்றொரு முக்கிய காரணம் இவற்றை சேர்த்து சாப்பிடுவதால் பெரும்பாலும் எந்த பாதிப்புகளும் ஏற்படுவதில்லை. ஆனால் பலரும் அறியாத விஷயம் என்னவெனில் இதனால் சில பாதிப்புகள் ஏற்படலாம். இதனால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படலாம் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

பிஸ்கட்டின் ஆரோக்கியமற்ற சர்க்கரைகள்

கடைகளில் விற்கப்படும் பெரும்பாலான பிஸ்கட்களில் சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரைகள் நிறைந்துள்ளன. நீங்கள் தேநீருடன் அதனை சாப்பிடும் போது, ​​இரத்தத்தில் சர்க்கரை அளவு கணிசமாக அதிகரிக்கிறது. இது டைப் 2 நீரிழிவு நோய் வருவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கிறது மற்றும் எடை அதிகரிப்பைத் தூண்டுகிறது மற்றும் உடனடி ஆற்றல் இழப்பை ஏற்படுத்துகிறதும், இதனால் நீங்கள் சோர்வாக உணரலாம்.

வெற்று கலோரிகள்

பிஸ்கட் பொதுவாக வெள்ளை மாவு மற்றும் சர்க்கரை சேர்க்கப்பட்டு தயாரிக்கப்படுகிறது, அதில் எந்தவித ஊட்டச்சத்துக்களும் இல்லை. அவற்றில் உள்ள வெற்றுக் கலோரிகள் எடை அதிகரிப்புக்கு வழிவகுக்கும். இந்த பிஸ்கட்கள் தேநீருடன் சேர்த்து எடுத்துக் கொள்ளப்படும் போது, அவை முழுமையாக உணர வைக்கவோ அல்லது பசியைத் தீர்க்கவோ இயலாமையால் அதிகமாக சாப்பிடுவதை ஊக்குவிக்கும். இது வழக்கம் தொடரும்போது, இது எடை அதிகரிப்பு மற்றும் அதனுடன் தொடர்புடைய பிற உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்.

ட்ரான்ஸ் கொழுப்புகள் மற்றும் கெட்ட எண்ணெய்கள்

பெரும்பாலான பிஸ்கட்களில் டிரான்ஸ் கொழுப்புகள் மற்றும் ஹைட்ரஜனேற்றப்பட்ட எண்ணெய்கள் உள்ளன, இது உங்கள் இதய ஆரோக்கியத்தைப் பாதிக்கிறது. இத்தகைய கொழுப்புகள் உடலில் நல்ல கொழுப்பின் அளவைக் குறைத்து, கெட்ட கொழுப்பின் அளவை உயர்த்துகின்றன, இதனால் பல இதய நோய்கள் மற்றும் பக்கவாதம் கூட ஏற்பட வாய்ப்புள்ளது.

அமிலத்தன்மை மற்றும் செரிமான பிரச்சினைகள்

தேநீரில் உள்ள டானின்கள் வயிற்றின் அமிலத்தன்மையை அதிகரிக்கும். அதிக சர்க்கரை மற்றும் சுத்திகரிக்கப்பட்ட மாவு உள்ள கார்போஹைட்ரேட் நிறைந்த பிஸ்கட்களுடன் தேநீர் இணையும் போது, அமிலத்தன்மை, வீக்கம் மற்றும் அஜீரணம் போன்ற செரிமான பிரச்சனைகளை மோசமாக்கலாம்.

அதிக கார்போஹைட்ரேட்ஸ், சர்க்கரை கலந்த பிஸ்கட்களை தங்கள் தேநீருடன் இணைக்க வழக்கமாக உட்கொள்பவர்கள் வயிற்றில் உள்ள அமிலங்களில் ஏற்றத்தாழ்வை ஏற்படுத்துவதால், அது செரிமானத்தை மிகவும் கடினமாக்குவதுடன் வலிகளையும் ஏற்படுத்தும்.

ஊட்டச்சத்து குறைபாட்டை ஏற்படுத்துகிறது

தேநீர் அதிகமாக குடிப்பது இரும்பு மற்றும் கால்சியம் போன்ற தாதுக்களை உறிஞ்சுவதில் சிக்கலை ஏற்படுத்தலாம். தேநீரில் இந்த தாதுக்களை பிணைக்கக்கூடிய டானின்கள் உள்ளன, இதன் விளைவாக, உடலால் அவற்றை போதுமான அளவு உறிஞ்ச முடியாது, இது காலப்போக்கில் ஊட்டச்சத்து குறைபாட்டிற்கு வழிவகுக்கிறது. இதனுடன் ஆரோக்கியமற்ற பிஸ்கட் இணையும் போது அது பாதிப்பை இரட்டிப்பாக்குகிறது.

பல் பிரச்சினைகள்

பிஸ்கட் இயற்கையாகவே பற்களில் ஒட்டிக்கொள்ளும் தன்மை உடையது, மேலும் தேநீரில் உள்ள சர்க்கரையுடன் இது இணையும் போது, அது பல் சிதைவு மற்றும் பிற பல் பிரச்சினைகளின் வளர்ச்சிக்குக் காரணமாகிறது. தேநீர் மற்றும் பிஸ்கட் இரண்டிலும் உள்ள சர்க்கரைகள் வாயில் பதுங்கியிருக்கும் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களுக்கு உணவளிக்கின்றன, இது பற்சிதைவு மற்றும் ஈறு தொடர்பான நோய்களுக்கு வழிவகுக்கிறது.

Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.

Story first published: Thursday, October 3, 2024, 20:35 [IST]
Desktop Bottom Promotion