Just In
- 22 min ago 300 ஆண்டுகள் இந்தியாவை ஆண்ட முகலாயர்கள் அவங்க ஆட்சியில் இந்தியாவின் எந்தெந்த விஷயங்களை மாற்றினார்கள் தெரியுமா?
- 1 hr ago சுக்கிர பெயர்ச்சியால் இன்று முதல் மே 19 வரை இந்த ராசிக்காரர்களுக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- 2 hrs ago இந்த 4 ராசிக்காரங்களோட முதல் எதிரியே அவங்க ஈகோதானாம்... ஈகோவாலேயே நிறைய விஷயங்களை இழந்துருவாங்களாம்!
- 3 hrs ago ஒருடைம் உருளைக்கிழங்கு குருமாவை இந்த ஸ்டைலில் செய்யுங்க.. அப்புறம் பாருங்க இப்படிதான் எப்பவும் செய்வீங்க..
Don't Miss
- Finance மியூச்சுவல் ஃபண்ட்களில் முதலீடு செய்ய சரியான நேரம் எது? இதை நோட் பண்ணிக்கோங்க!
- Automobiles இந்த காரை எத்தன பேரு தங்களுக்கு பிடிச்சவங்களுக்கு பரிசா கொடுக்க போறாங்களோ! அஸ்டன் மார்ட்டின் வேன்டேஜ் அறிமுகம்
- News பாதி உங்களுக்கு..மீதி எங்களுக்கு? டபுள் சிக்ஸ் அடித்த பாஜக! சாப்பிட்ரோ விஷயத்தை கை கழுவிய காங்கிரஸ்
- Technology ரூ.56,999 க்கு அறிமுகமான OnePlus போனை ரூ.19,149 க்கு விற்கும் Amazon.. ஆல் ஏரியாவிலும் ஆர்டர் பறக்குது!
- Movies ரஜினிகாந்த்தின் கூலி.. லோகேஷ் கனகராஜுக்கு இவ்வளவு சம்பளமா?.. அய்யோ எங்கேயோ போய்ட்டாரே
- Sports "இந்தியாவின் ஒரே பாட்ஷா" சச்சினின் 51வது பிறந்தநாள்.. கொண்டாடும் தோனி, விராட் கோலி, ரோகித் சர்மா!
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
மன அழுத்தத்தை குறைக்கணுமா? இதை செஞ்சா போதும்
மன அழுத்தம் என்பது இன்றைய சூழ்நிலையில் அனைவரும் சந்திக்கும் ஒரு மிகப்பெரிய பிரச்சினையாகும், அதை குறைப்பதற்கான எளிய வழிகள்.
மன அழுத்தம் என்பது இன்றைய சூழ்நிலையில் அனைவரும் சந்திக்கும் ஒரு மிகப்பெரிய பிரச்சினையாகும். குறுகிய கால மன அழுத்தத்திலிருந்து நீண்ட கால மன அழுத்தம் வரை அனைத்துமே நமக்கு மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியதுதான்
இந்த மன அழுத்தம் தற்காலிக சோர்வு முதல் நிரந்தர மூளைக்கோளாறுகளை ஏற்படுத்தக்கூடிய அளவிற்கு ஆபத்தானவை. இந்த மன அழுத்தத்தை சரி செய்கிறோம் என பல தனியார் அமைப்புகள் மக்களை ஏமாற்ற தொடங்கிவிட்டார்கள். ஆனால் நம் மனதும், மூளையும் நம் கட்டுப்பாட்டில்தான் இருக்கவேண்டுமென்பதை மறந்துவிடாதீர்கள். உங்களுடைய மன அழுத்தத்தை நீங்களே குறைக்க பல எளிய வழிகள் உள்ளன. அவற்றில் சிலவற்றை இங்கே பார்க்கலாம்.
1. தியானம்
இது மிகவும் பயன்தர கூடிய ஒரு வழி. தினமும் இதற்கென சிறிது நேரம் ஒதுக்கி தியானம் செய்வது உங்கள் மன அழுத்தத்தை குறைக்கும். அதற்காக பயிற்சி வகுப்புகளுக்குத்தான் செல்ல வேண்டுமென அவசியமில்லை. உங்கள் வீட்டிலேயே அமைதியான இடத்தில் அமர்ந்து கண்களை மூடி " நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன்" என மனப்பூர்வமாக உணர்ந்து சொல்லுங்கள். இது உங்களின் அன்றைய நாளின் போக்கையே மாற்றிவிடும். நாம் மகிழ்ச்சியாக இருக்கிறோமா இல்லையா என நம்முடைய எண்ணங்கள்தான் முடிவு செய்யும்.
2. ஆழமாக மூச்சு விடுதல்
ஒரு அழுத்தமான சூழ்நிலையை எதிர்கொள்ள போகிறோம் என நீங்கள் உணர்ந்தால் சிறிது நேரம் எடுத்துக்கொண்டு உங்கள் சுவாசித்தலில் கவனம் செலுத்துங்கள். நேராக உட்கார்ந்து, கண்களை மூடி ஆழமாக மூச்சை இழுத்து மெதுவாக வெளியே விடுங்கள். ஆழமாக மூச்சு விடுவது இதய துடிப்பை சீராக்கி, இரத்த அழுத்தத்தை குறைக்கிறது என மருத்துவரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே தெளிந்த மனநிலையுடன் இருக்கும்போது எந்த சூழ்நிலையையும் எளிதாக எதிர்கொள்ளலாம்.
3. வெளியே செல்லுங்கள்
மன அழுத்தம் அதிகரிக்கும் போது சோர்வடையாமல் சிறிது நேரம் வெளியே செல்லுங்கள். நொடிக்கு நொடி மாறும் காட்சிகளும், சுத்தமான காற்றும் உங்கள் மனநிலையை மாற்றி புத்துணர்ச்சியாய் உணரச்செய்யும்.
4. உரையாடல்
மன அழுத்தம் அதிகரிக்கும் போது உங்களுக்கு தேவை அதனை குறைக்க ஒரு வடிகால் மட்டும்தான். அது உங்களுக்கு பிடித்தவரை தவிர வேறு யாராக இருக்க முடியும். எனவே அவர் உங்கள் அருகில் இருப்பவராய் இருந்தால் நேரில் சென்று பேசுங்கள் அது முடியவில்லை எனில் தொலைபேசியிலாவது பேசுங்கள். இதை விட சிறந்த வழி எதுவும் இருக்க முடியாது.
5. சிரித்தல்
நீங்கள் படங்களில் பார்த்திருப்பீர்கள் மன அழுத்தத்தை குறைக்க சிலர் சிரிப்பார்கள். ஆனால் உண்மையில் அது பலன் தரக்கூடிய ஒன்றுதான். சிரிக்கும்போது அது மன அழுத்தத்தை தரும் கார்டிசோல் எனும் ஹார்மோன் உற்பத்தியை குறைக்கிறது மேலும் நம் மனநிலையை மாற்றக்கூடிய எண்டோர்பின்ஸ் எனப்படும் மூளை இரசாயன உற்பத்தியை ஊக்குவிக்கிறது. எனவே முடிந்த வரை சிரிக்க முயலுங்கள். மன அழுத்தத்தை புன்னகையால் தோற்கடியுங்கள்.
6. உணவு
இது சற்று வேடிக்கையாக இருக்கலாம். " மன அழுத்தத்தில் இருக்கும்போது எப்படி சாப்பிடுவது?" என்று உங்களுக்குள் கேள்வி எழலாம். ஆனால் மன அழுத்தம் உங்களின் உடல் தேவைகளை உங்களை கவனித்துக்கொள்ள விடாது. உங்கள் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறையும் போது அதுவே உங்கள் மனநிலையை மோசமாக்கும். எனவே சாப்பிடுவதன் மூலம் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரித்து உங்கள் மனநிலையை சீராக்கும். அதிலும் உங்களுக்கு பிடித்த உணவாக இருந்தால் கூடுதல் பலனை தரும்.