Latest Updates
-
உன்னாவ் வழக்கு: அதிகாரத்தின் பிடியில் சிக்கிய நீதி! குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை உறுதி - பாதிக்கப்பட்டவர்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி! -
உலகிலேயே எந்த நாட்டில் பெட்ரோல் அதிக விலையில் விற்கப்படுகிறது? பாகிஸ்தானில் பெட்ரோல் விலை எவ்வளவு தெரியுமா? -
தலைமுடி அடர்த்தியா நீளமா வளரணுமா? அப்ப சித்த மருத்துவர் கூறும் இந்த 3 கீரைகளை சாப்பிடுங்க..! -
இந்த 3 மாதங்களில் பிறந்தவர்கள் எல்லோரையும் விட அதிபுத்திசாலிகளாக இருப்பார்களாம் - நீங்க பிறந்த மாதம் என்ன? -
குரு பகவானின் நட்சத்திர பெயர்ச்சியால் இந்த 4 ராசிக்காரங்க ஜூன் வரை ராஜவாழ்க்கை வாழப்போறாங்க.. -
காரைக்குடி வெண்டைக்காய் புளி பச்சடி ரெசிபி - ஒருதடவை ட்ரை பண்ணுங்க, சாதத்துக்கு சூப்பரா இருக்கும் -
கடும் வெயிலிலும் வீடு ஜில்லுனு இருக்கணுமா? இந்த 5 வாஸ்து செடிகள் இருந்தா ஏசி செலவு மிச்சம்! -
செஃப் அருணா விஜய்யின் போண்டா மோர் குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. -
புதன் சுக்கிரன் ஆளும் ராசிக்கு செல்வதால் கோடிகளை குவிக்கப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி இதுல இருக்கா? -
மாத்திரையின்றி பிபி கண்ட்ரோலா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்லும் இந்த 5 உணவுகளை தினமும் சாப்பிடுங்க போதும்..
35 வயதை நெருங்கும் பெண்கள் கட்டாயம் செய்துக் கொள்ள வேண்டிய 7 பரிசோதனைகள்!
நடுவயதை எட்டும் பெண்கள் கட்டாயம் இந்த 7 பரிசோதனைகள் செய்துக் கொள்ள வேண்டியது அவசியம்.
வீட்டில் இருக்கும் மனைவி, மகள், அம்மா என அனைவரும் ஆண்களின் உடல் நலத்தின் மீது அதீத அக்கறை எடுத்துக் கொள்வார்கள். ஆனால், ஆண்களோ, அவர் தம்மீது என பெண்களின் உடல் நலத்தின் மீது எவ்வளவு அக்கறை எடுத்துக் கொள்கிறார்கள் என்பது பெரிய கேள்விக் குறி தான்.

முக்கியமாக நடுவயதை நெருங்கும் பெண்கள் ஒருசில உடல்நல பரிசோதனைகளை செய்துக் கொள்ள வேண்டியது அவசியம் என மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்...

இடுப்பு மற்றும் பேப் ஸ்மியர்!
முப்பது வயதை கடக்கும் ஒவ்வொரு பெண்ணும் இடுப்பு மற்றும் பேப் ஸ்மியர் (PAP SMEAR) பரிசோதனை செய்துக் கொள்ள வேண்டும். இது ஒரு முழுமையான இடுப்பு பகுதி பரிசோதனை ஆகும்.
கருப்பை புற்றுநோய் இப்போது இந்திய பெண்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. சமீபத்தில் இதற்கான மருத்துவம் அறிமுகமாகியுள்ளது. குறைந்தபட்சம் மூன்று வருட சிகிச்சை எடுத்துக் கொண்டால் தான் தீர்வு காண முடியும்.

மார்பக பரிசோதனை!
புற்றுநோய் மரணங்கள் அதிகரிக்க காரணமாக இருக்கும் இரண்டாவது பெரிய புற்றுநோய் வகை மார்பக புற்றுநோய். நாற்பது வயதை கடக்கும் ஒவ்வொரு பெண்ணும் மார்பக பரிசோதனை செய்துக் கொள்ள வேண்டியது அவசியம். இரண்டு வருடத்திற்கு ஒருமுறை மார்பக பரிசோதனை அவசியம் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

எலும்பு தாது அடர்த்தி பரிசோதனை!
எலும்பு தாது அடர்த்தி பரிசோதனை (BONE MINERAL DENSITY TEST), 35 வயதில் இருந்து பெண்களுக்கு கால்சியம் சத்து குறைபாடு ஏற்படலாம். ஏறத்தாழ 80% பெண்கள் இதனால் பாதிக்கப்படுகின்றனர்.
மாதவிடாய் நிற்கும் காலங்களில் பெருமளவில் பெண்கள் இதனால் பாதிக்கப்படுகின்றனர் என நிபுணர்கள் கூறுகின்றனர். எனவே, பெண்கள் எலும்புகளின் வலிமை குறித்து பரிசோதனை செய்துக்கொள்ள வேண்டியது அவசியம்.

தைராய்டு பரிசோதனை!
பெரும்பாலான பெண்கள் திடீர் உடல் எடை அதிகரிப்பு, முடி உதிர்தல், நகங்கள் வலுவிழந்து போவது போன்றவை குறித்து தங்கள் கேள்விகளை முன் வைக்கின்றனர். இதற்கு தைராய்டு பிரச்சனை கூட காரணமாக இருக்கலாம்.

நீரிழிவு பரிசோதனை!
இரத்த சர்க்கரை அளவு குறித்து பரிசோதனை செய்துக் கொள்வது கட்டாயம். இன்று யாருக்கு நீரிழவு நோய் பாதிப்பு வரும் என யாருக்கும் தெரியாது. இன்று பெண்கள் ஆரோக்கியத்தை பாதிக்கும் மிகப்பெரிய கருவியாக வளர்ந்து நிற்கிறது நீரிழிவு.

லிப்பிட் பரிசோதனை!
லிப்பிட் பரிசோதனை (LIPID PROFILE TEST) என்பது உடலில் இருக்கும் கெட்ட கொலஸ்ட்ரால், நல்ல கொலஸ்ட்ரால் கண்டறியும் பரிசோதனை ஆகும். கொலஸ்ட்ரால் காரணத்தால் இதயம், இரத்த நாளங்கள் மற்றும் மூளை பெருமளவு பாதிக்கப்படுகிறது.

வைட்டமின் டி பரிசோதனை!
அன்றாட வாழ்வில் நமக்கு தேவையான முக்கியமான ஊட்டச்சத்து வைட்டமின் டி. இது தான் எலும்புகளின் ஆரோக்கியத்தை உறுதி செய்கிறது. மேலும், நீரிழிவு, இதய நோய், சில வகை புற்றுநோய் ஏற்படாமல் இருக்கவும் வைட்டமின் டி துணை புரிகிறது. மேலும், நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுவாக்குகிறது வைட்டமின் டி.



Click it and Unblock the Notifications