Latest Updates
-
30 ஆண்டுக்கு பின் சனியும்-செவ்வாயும் மீனத்தில் இணைவதால் இந்த 3 ராசிக்காரங்க டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
No Oil Noi Boil Recipe: அடுப்பே தேவைப்படாத ஆரோக்கியமான, சுவையான இட்லி மற்றும் சட்னி ரெசிபி...ட்ரை பண்ணுங்க...! -
1 வருடத்துக்கு பின் மேஷம் செல்லும் சுக்கிரன்: இந்த 3 ராசிக்காரங்க ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம்...! -
336 ஆண்டுகளுக்கு முன் சத்ரபதி சாம்பாஜி மகாராஜாக்கு 11 மார்ச் 'இதே' நாளில் என்ன நடந்தது தெரியுமா? -
4 பிரெட், 1 கப் தயிர் இருந்தா 10 நிமிஷத்துல இந்த மாதிரி வடை சுடுங்க... மொறுமொறுனு டேஸ்ட் பிரமாதமா இருக்கும்... -
இந்த 4 ராசி ஆண்கள் ரொம்ப பொஸசிவான கணவர்களாக இருப்பார்களாம்...இவங்க மனைவிகள்தான் பாவம்..உங்க ராசி இதுல இருக்கா? -
LPG Gas: தலைவிரித்தாடும் சிலிண்டர் தட்டுப்பாடு... சிலிண்டர் சீக்கிரம் தீராம இருக்க இப்படி சமையல் பண்ணுங்க...! -
கோதுமை ரவா தோசையும்.. புதினா சட்னியும்..- 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஉளைச்சலான நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது...
வெங்காயத்தை நசுக்கி ஒத்தடம் தருவதால் பெறும் ஆரோக்கிய நன்மைகள்!
வெங்காயத்தில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம். அதனால் தான் நாம் அன்றாட உணவில் அனைத்திலும் வெங்காயத்தை சேர்க்கிறோம். வெங்காயத்தை உணவில் தவிர்ப்பது, நமது உடல் ஆரோக்கியத்திற்கு நாம் செய்யும் மிகப்பெரிய தீங்கு ஆகும்.
உணவில் சேர்ப்பதால் மட்டுமின்றி, வேறுசில வழிகளிலும் கூட வெங்காயம் நல்ல மருத்துவ பலன்களை அளிக்கிறது. அடிக்கடி அழும் குழந்தைகளின் அழுகையில் இருந்து, காது வலி, நெஞ்சு வலி, வெட்டுக் காயம், காய்ச்சல், முடி வளர என வெங்காயத்தின் மூலம் நாம் நிறைய பலன்களை பெற முடியும்.

அடிக்கடி அழும் குழந்தை:
பிறந்த குழந்தைகள் அடிக்கடி அழுதுக் கொண்டே இருப்பார்கள். வயிறு வலி, பெருங்குடல் வலி காரணமாக இந்த அழுகை ஏற்படும் என்றும் சிலர் கூறுவதுண்டு. இது, போன்ற நேரத்தில், வெங்காயத்தை நீரில் வேக வைத்து. பிறகு அது ஆரிய பிறகு அதை ஒரு டீஸ்பூன் குழந்தைக்கு கொடுத்து வந்தால் குழந்தைகளின் அழுகை நிற்கும்.

நெஞ்சு சளி:
நெஞ்சு சளி, அல்லது நெஞ்சில் ஏதேனும் அடைத்தது போன்ற உணர்வு இருந்தால், வெங்காயத்தை நசுக்கி அதனுடன் தேங்காய் எண்ணெய்யை சேர்த்து பேஸ்ட் போல செய்து, மார்பில் அப்ளை செய்து மேலே ஒரு துண்டு பரப்பி வைத்தால், சீக்கிரமாக குணமாகும்.

காது வலி, தொற்று:
சிறிய வெங்காயத்தை எடுத்துக் கொண்டு அதை சாக்ஸ் அல்லது துணியில் கட்டி, காதில் வைத்துக் கொள்ளுங்கள். அது விழாதபடி துணி அல்லது கேப் அணிந்துக் கொள்ளவும். இவ்வாறு செய்வதால் காது வலி குறையும்.

வெட்டுக் காயம்:
வெட்டுக் காயம் ஏற்பட்டு இரதம் வழியும் இடத்தில், வெங்காயத்தை வைத்து கட்டலாம். இது இரதம் வழிதலை நிறுத்தவும், சிறந்த ஆண்டிசெப்டிக்காகவும் பயன்படுகிறது.

காய்ச்சல்:
முதலில் உங்கள் பாதத்தில் தேங்காய் எண்ணெய் தேய்க்கவும். பிறகு உங்கள் அடி பாதத்தின் வளைவு பகுதியில் வெங்காயத்தை வைத்து அதன் மேல் சாக்ஸ் அணிந்துக் கொள்ளுங்கள். ஓர் இரவு முழுக்க இதை விட்டுவிடுங்கள். இது நச்சுக்கள் குறைய பெருமளவு உதவும்.

காற்றை சுத்தமாக்க:
வீட்டின் பல இடங்களில் வெங்காயத்தை வைப்பதால் காற்று சுத்தகரிக்கப்படுகிறது.

வெங்காயத்தில் வேறு சில பயன்கள்:
*தலை முடி வேகமாக வளர
*சருமத்தில் பூச்சி கடிக்காமல் இருக்க
*தாவரங்களில் பூச்சிகள் தாக்கம் ஏற்படாமல் இருக்க
*இரும்பில் துருப்பிடிக்காமல் இருக்க
*கண்ணாடி மற்றும் செப்பு பாத்திரங்களை கழுவ



Click it and Unblock the Notifications











