Latest Updates
-
தேர்தல் பிரச்சாரத்திற்கு முன்பு பல தலைவர்கள் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு செல்வது ஏன்? -
18 ஆண்டுக்கு பின் மகம் நட்சத்திரம் செல்லும் கேதுபகவான்: இந்த 3 ராசிக்காரங்க பணத்தை மூட்டைக்கட்ட போறாங்களாம்... -
பெங்காலி தக்காளி சட்னி ரெசிபி... ஒரு தடவை அரைச்சு பாருங்க... இனிப்பா, காரமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் மீல் மேக்கர் இருந்தா.. இந்த பக்குவத்துல கிரேவி செய்யுங்க.. 2 சப்பாத்தி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க... -
குருபகவானின் நேரடி இயக்கத்தால் இந்த 4 ராசிகாரர்களுக்கு கோடீஸ்வர யோகம் கூடிவரப்போகுதாம்...! -
இளநீர் Vs நெல்லிக்காய் ஜூஸ் - இவற்றில் கோடையில் குடிக்க சிறந்தது எது? -
Tamil Nadu Election 2026: தமிழ்நாடு அரசிலுடன் தொடர்புடைய புகழ்பெற்ற தமிழ்நாட்டு கோவில்கள் என்னென்ன தெரியுமா? -
12 ஆண்டுகள் கழித்து உச்ச வீட்டில் நுழையும் குரு பகவான்: இந்த 4 ராசிக்கு ராஜயோகம் அடிக்கப்போகுது.. -
சுரைக்காய் வாங்குனா வேர்க்கடலையுடன் சேர்த்து இந்த மாதிரி பொரியல் பண்ணுங்க... செம சைடிஷா இருக்கும்...! -
1 கப் தயிரும், 2 கத்திரிக்காயும் இருந்தா.. இப்படி கிரேவி செய்யுங்க.. செம டேஸ்ட்டா இருக்கும்..
மலேரியா பற்றி பலருக்கும் தெரியாத தகவல்கள்!
ஏப்ரல் 25, இன்று உலக மலேரியா தினம். உலகம் முழுவதும் 106 நாடுகளில் வாழும் 330 கோடி மக்களுக்கு மலேரியா தாக்கம் ஏற்படும் அபாயத்துடன் தான் வாழ்ந்து வருகிறார்கள். பெரும்பாலும் ஆப்ரிக்கா, ஆசியா, மத்திய கிழக்கு நாடுகளில் மலேரியா தாக்கம் அதிகமாக ஏற்பட்டுள்ளது.
டெங்கு, மலேரியாவை தவிர கொசுவால் பரவும் தீவிரமான நோய்கள்!
இதில் வருத்தத்திற்குரிய தகவல் என்னவெனில், மலேரியா தாக்கத்தால் உயிரிழப்பவர்களில் பெரும்பாலானோர் குழந்தைகள். ஏறத்தாழ உலக மக்கள் தொகையில் 40% மக்களை அச்சுறுத்தும் நோயாக இருந்து வரும் மலேரியா குறித்த விழிப்புணர்வு உண்டாக வேண்டும் என்பதற்காக தான் இந்த உலக மலேரியா தினம் அனுசரிக்கப்படுகிறது.

தகவல் #1
சில புள்ளிவிவரங்கள் மூலம் தெரியவரும் தகவல் என்னவெனில், மலேரியாவில் தாக்கத்தால் மட்டுமே ஏறத்தாழ வருடத்திற்கு 5 லட்சம் பேர் இறக்கிறார்கள். இதில் பெரும்பாலானவர்கள் குழந்தைகள் என்பது வருத்தத்திற்குரியது.

தகவல் #2
மலேரியா தாக்கம் உண்டாகியிருக்கிறது என்பதை வெளிப்படுத்தும் முதல் அறிகுறி காய்ச்சல். மேலும், தலைவலி, உடல் அதிகமாக சில்லென இருப்பது போன்றவையும் கூட மலேரியாவிற்கான அறிகுறிகள் தான்.

தகவல் #3
பெரும்பாலும் மலேரியா திடீர் காலநிலை மாற்றத்தின் போது தான் அதிகமாக பரவுகிறது.

தகவல் #4
சில சமயங்களில் மலேரியா தாக்கம் உண்டானே ஓரிரு நாட்களில் இறந்தவர்களும் உண்டு. எனவே, கால நிலை மாற்றங்கள் மற்றும் ஊரில் மலேரியா தாக்கம் அதிகரிக்கும் போது உடனே பரிசோதனை செய்துக் கொள்ள வேண்டியது அவசியம்.

தகவல் #5
கர்ப்பிணி பெண்களுக்கு மலேரியா தாக்கம் உண்டாவது, கருவில் வளரும் சிசுவையும் தாக்க வாய்ப்புகள் உண்டு. இந்த தாகத்தால் குழந்தை குறைந்த உடல் எடையுடன் பிறக்கலாம்.

தகவல் #6
மலேரியா தொற்றுநோய் அல்ல. பாதித்த நபரை தொட்டு பேசுவதால் மலேரியா பரவுவதில்லை.

தகவல் #7
கொசு வலை, வீட்டில் தண்ணீர் தேங்காமல் பாதுகாப்பது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மூலம் மலேரியா பரவாமல் பாதுகாக்க முடியும்.



Click it and Unblock the Notifications











