Latest Updates
-
செவ்வாய்-சந்திர சேர்க்கையால் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: மார்ச் 16 முதல் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்.. -
18 மாதங்களுக்கு பின் உருவாகும் மங்களாதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிகளின் நீண்டகால ஆசைகள் நிறைவேறப்போகுதாம்...! -
1500 கிலோ தங்கத்தால் கட்டப்பட்ட தங்க கோயில் தமிழ்நாட்டில் எங்கு உள்ளது தெரியுமா? நீங்க இங்க போயிருக்கீங்களா? -
வெயிலால் உங்க முகம் கருமையாகாமல் இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க... -
1 முறுக்கு பாக்கெட் இருந்தா இந்த மாதிரி காரைக்குடி ஸ்டைலில் குழம்பு வையுங்க... வித்தியாசமா சூப்பரா இருக்கும்.. -
வெயில் காலத்தில் மாலை வேளையில் இத செஞ்சு சாப்பிடுங்க.. உடம்பு குளுகுளு-ன்னு இருக்கும்.. -
அழகான பெண்கள் இந்த 4 ராசி ஆண்களை தேடிப்போய் காதலிப்பார்களாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
மார்ச் இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டப்போகுது... -
கேஸ் அதிகம் தேவைப்படாத அட்டகாசமான சாம்பார் சாதம் ரெசிபி..இந்த மாறி செஞ்சு பாருங்க... டேஸ்ட் செமயா இருக்கும்... -
அடுப்பில்லாமல் செய்யக்கூடிய பச்சப்புளி ரசம் - செஃப் மாதம்பட்டி ரங்கராஜ் ஸ்டைலில் எப்படி செய்றதுன்னு பாருங்க..
இடுப்பு வலியை குறைக்கும் தண்டாசனா!!
இந்த கால கட்டங்களில், ஒவ்வொரு பாகத்திற்கும் புதிது புதிதாக நோய்கள் வருகிறது. இதனால் ஒவ்வொரு பாகத்திற்கும் ஒரு சிறப்பு மருத்துவர் தோன்றுகிறார்.
எல்லாவற்றிற்கும் அடிப்படை காரணம் போதிய சத்து கொண்ட காய்களை சாப்பிடாததே. ஆனால் வந்த வலியை போக்க, உடனடியாக வலி மாத்திரைகள், ஆன்டிபயாடிக் என சாப்பிடுவது நல்லது அல்ல.

சிறு சிறு பிரச்சனைகளுக்கு இயற்கை முறையில் தீர்வு கண்டால் பல பெரிய நோய்களை தடுக்கலாம் என்பது சரிதானே.
அன்றாட வேலைகளாலும்,. தசைகளில் உண்டாகும் பிடிப்புகளாலும், முதுவலி, கால்வலி கை வலி என வருவது சகஜம்தான்.
அதே போன்று கீழ் முதுகு, கீழ் இடுப்பு, அடிபாகம், தொடை ,கால் ஆகியவற்றிலும் காரணம் தெரியாமல் வலி வரும். அதனை இடுப்பு கீல் வாயு என்று அழைப்பார்கள். இதற்கு என்ன செய்யலாம் . செய்வதற்கு மிக எளிதான இந்த யோகாவை செய்யலாம்.
தண்டாசனா :
தண்டாசனா செய்வது எளிது. தண்ட" என்றால் சமஸ்கிருதத்தில் குச்சி என்று பெயர். குச்சி போன்று மார்பு, முதுகை விறைப்பாக வைத்துக் கொள்வதால் இந்த யோகாவின் பெயர் பெற்றுள்ளது. இந்த ஆசனத்தை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
செய்முறை :
தரையில் கால் நீட்டி அமருங்கள். முதுகை நேராக வைத்துக் கொள்ள வேண்டும். மார்பை நிமிர்த்துங்கள்.பாத விரல்கள் மேலே நோக்கி இருக்கும்படி செய்யுங்கள்.
குதிகால்களுக்கு தரையில் அழுத்தம் தரவேண்டும். உள்ளங்கைகளை தரையில் ஊன்றி அழுத்தம் தர வேண்டும். இதனால் உடல் விறைப்பாக உயரும்.
கால்களை வளைக்காமல் நீட்ட வேண்டும். இப்போது மூச்சை இழுத்துவிடுங்கள். பின்னர் சாதரண மூச்சில் அரை நிமிடம் இருங்கள். பின்னர் இயல்பு நிலைக்கு வாருங்கள்.
பலன்கள் :
முதுகுத் தசைகள் பலம் பெறும். அடிவயிற்றிற்கு சக்தி கிடைக்கும். ஒருமுகப்படுத்துதல் அதிகரிக்கும். மன அழுத்தம் குறையும். ஆஸ்த்மா கட்டுக்குள் வரும்.
குறிப்பு : கீழ் இடுப்பில் அடிபட்டவர்கள் இந்த யோகாவை தவிர்க்கவும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications













