Latest Updates
-
நாக பஞ்சமி 2026: இந்த வருட நாக பஞ்சமி எந்த நாளில் வருகிறது? இந்த நாளில் என்ன செய்ய வேண்டும் தெரியுமா? -
வெஜ் கோலாப்பூரி மசாலா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - சப்பாத்தி, பூரிக்கு சூப்பரா இருக்கும் -
சனி-குரு உருவாக்கும் நவபஞ்சம யோகத்தால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சுதந்திர தின ஸ்பெஷல் மூவர்ண பூரியும், தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 15 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டத்தின் சாவி கைக்கு வரப்போகுதாம் -
ஆகஸ்ட் 25-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சியால் இந்த 4 ராசிக்கு வருமானம் அதிகரிக்கப்போகுது! -
புதன் ஆயில்ய நட்சத்திரத்திற்கு செல்வதால் புது சொத்துக்களை வாங்கும் யோகமுள்ள 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா -
Independence Day 2026 Wishes: சுதந்திர தினத்தன்று இந்த ஸ்டைலில் வாழ்த்துக்களை சொல்லுங்க.. -
தேசியக்கொடியின் நடுவில் அசோக சக்கரம் ஏன் நீல நிறத்தில் உள்ளது? அதில் ஏன் 24 ஆரங்கள் உள்ளது தெரியுமா? -
ரோட்டுக்கடை இட்லி தக்காளி சாம்பார் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. அள்ளும்..
இவை வெறும் வலியென நினைத்து வீட்டு சிகிச்சை மேற்கொள்ள வேண்டாம் - அபாயமாக மாறலாம்!!
சிலர் மிகவும் பெருமையாக கூறுவார்கள், "என் வாழ்க்கையில நான் எல்லா ஹாஸ்ப்பிட்டல் பக்கமே போனதில்ல தெரியுமா.." என்று. இவர்களுக்கும் உடல்நல பிரச்சனைகள் வரும் ஆனால், மருத்துவமனை அல்லது மருத்துவரை அணுகாமல் இவர்களே மருத்துவம் பார்த்துக் கொள்வார்கள். இது அனைத்து நேரங்களிலும் தீர்வளிக்காது என்பது தான் உண்மை.
சில சமயங்களில் நாம் சாதாரணமான கோளாறாக நினைப்பவை அபாயத்தின் அறிகுறியாக இருக்கலாம். கை, கால், தோள்ப்பட்டை வலி எலும்பு சார்ந்த பெரும் பிரச்சனையின் ஆரம்பமாக இருக்கலாம். எனவே, எதுவாக இருந்தாலும் நீங்களாக முடிவெடுக்காமல் மருத்துவரை அணுகுவது சிறந்தது...

காய்ச்சலின் போது
காய்ச்சல், மயக்கம் ஏற்படும் போது மூட்டு பகுதிகளில் சிவந்து வீக்கம் காணப்படுவது முடக்கு வாதமாக இருக்கலாம். இது மிகுந்த வலியை ஏற்படுத்துகிறது எனில் செயலிழப்பு ஏற்பட கூட வாய்ப்புகள் இருக்கிறது. எனவே, வீட்டில் இருந்து வீட்டு சிகிச்சை மேற்கொள்ளாமல், மருத்துவரை கண்டு சிகிச்சை மேற்கொள்வது தான் சரியான தீர்வளிக்கும்.

தோள்பட்டை பகுதியில்
தோள்பட்டை பகுதியில் இறுக்கமாக பிடித்தது போல அசௌகரியமான வலி ஏற்படுவது மார்பு முடக்குவலியாக (Angina Pectoris) இருக்கக் கூடும். இதயத்தில் சரியான முறையில் இரத்த சுழற்சி ஏற்படவில்லை எனில் இவ்வாறு நடக்கும்.

தசை வலி
தசையில் வலி அல்லது மிகுதியான தசைப்பிடிப்போடு சேர்த்து அவ்விடத்தில் நிறமிழப்பு ஏற்படுவது உறுப்புகளுக்கு செல்லும் வழியில் இரத்த கட்டிகள் எற்பட்டுள்ளதற்கான அறிகுறியாக கூட இருக்கலாம்.

நாள்பட்ட முதுகு வலி
நாள்பட்ட முதுகுவலி அல்லது மரத்துப்போனது போன்ற உணர்வு, கை கால் மூட்டுகளில் வலுவின்மை போன்றவை அபாயமான பிரச்சனையாக மாறுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. எனவே, உடனே நீங்கள் மருத்துவரிடம் பரிசோதித்து தகுந்த சிகிச்சை மேற்கொள்வது நல்லது.

இரவு வலி ஏற்படுவது
இரவு நேரத்தில் மிகவும் கடிமையாக உடலில் ஆங்காங்கே வலி ஏற்படுவது. உறங்க முடியாத அளவு அசௌகரியங்களை ஏற்படுத்துவது போன்ற வலி எலும்பு சார்ந்த பிரச்சனை அல்லது எலும்பு புற்றுநோயின் அறிகுறியாக கூட இருக்கலாம். உடனே மருத்துவரை அணுகி பரிசோதனை செய்துக் கொள்ளுங்கள்.



Click it and Unblock the Notifications