Latest Updates
-
காலசர்ப்ப யோகத்தால் இன்று முதல் ஜூன் 23 வரை இந்த 3 ராசிக்கு கஷ்ட காலமா இருக்கும்.. உஷார்.. -
வெயில் மற்றும் மழையால் வீட்டில் புழுக்கமா? இந்த 4 வாஸ்து செடிகள் இருந்தால் குளிர்ச்சியும் பணவரவும் நிச்சயம்! -
கீரை வாங்குனா இந்த மாதிரி வித்தியாசமா மிளகூட்டல் செஞ்சு பாருங்க - ஆரோக்கியமாவும், சுவையாவும் இருக்கும் -
1/2 கிலோ மட்டன் வாங்குனா.. இப்படி ஒருடைம் செய்யுங்க.. ருசி அல்டிமேட்டா இருக்கும்.. -
சூரியன் மிதுன ராசிக்கு செல்வதால் ஜெயிக்கிற குதிரையாக ஜொலிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
மழைக்காலத்தில் வீட்டில் பணமும் ஆரோக்கியமும் குறையாமல் இருக்கணுமா? இந்த 5 வாஸ்து ரகசியங்களை உடனே பின்பற்றுங்க! -
முக்கியமான 5 ஊட்டச்சத்து குறைபாடுகளின் ஆரம்ப அறிகுறிகளும்.. அவற்றை தடுக்கும் உணவுகளும்.. -
சாணக்கியர் கூறும் வெற்றிக்கான 5 அடிப்படை ரகசியங்கள் - இதை பாலோ பண்றவங்க பெரிய ஆளா வருவார்களாம் -
சனி-சுக்கிரனால் உருவாகும் நவபஞ்சம ராஜயோகம்: ஜூன் கடைசி இந்த 4 ராசிக்கு பொற்காலமா இருக்கும்.. -
செட்டிநாடு கார குழிப்பணியாரமும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
உடலில் நீர்ச்சத்தின் அளவை அதிகரிக்க சில அருமையான வழிகள்!!!
எப்போதும் வீட்டில் உள்ளோர் தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டுமென்று சொல்வார்கள். ஏனெனில் உடலில் போதிய நீர்ச்சத்து இல்லாவிட்டால், அது உடலில் பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்திவிடும். உதாரணமாக, நீர்ச்சத்து குறைவாக இருந்தால், சிறுநீர் வெளியேற்றும் போது மஞ்சள் நிறத்தில் சிறுநீர் வெளியேறுவதோடு, எரிச்சல் ஏற்படும்.
அதுமட்டுமல்லாமல், சிறுநீரக கற்கள் ஏற்படக்கூடும். மேலும் சருமம் மற்றும் கூந்தலில் பல பிரச்சனைகள் ஏற்படும். எனவே தண்ணீர் குடிப்பது மிகவும் இன்றியமையாததாகும். ஆனால் நிறைய பேருக்கு தண்ணீர் குடிக்கவே பிடிக்காது. சிலருக்கு எப்படி உடலில் அதிக அளவில் நீர்ச்சத்தை சேர்ப்பது என்று தெரியாது.
அப்படி தண்ணீர் குடிக்க பிடிக்காதவர்கள், உடலில் நீர்ச்சத்தை அதிகரிக்கும் வண்ணம், நீர்ச்சத்து அதிகம் உள்ள உணவுப் பொருட்களை உட்கொள்ளலாம். இதனால் உடலில் எந்த பிரச்சனையும் வராமல் இருக்கும்.
இப்போது உடலில் எந்த பிரச்சனையும் வராமல், நல்ல அழகான சருமம், வலுவான கூந்தல் போன்றவற்றைப் பெற எப்படியெல்லாம் உடலில் நீர்ச்சத்தின் அளவை அதிகரிக்கலாம் என்று பார்ப்போம்.

வாட்டர் பாட்டில் வைத்துக் கொள்ளுங்கள்
சிலருக்கு வெளியே செல்லும் போது தாகம் அதிகம் இருக்கும். அப்போது கடைகளில் தண்ணீர் வாங்கி குடிப்பதற்கு சோம்பேறித்தனப்பட்டு, பலர் தாகத்துடனேயே இருப்பார்கள். ஆகவே எப்போதும் வெளியே செல்லும் போது ஒரு பாட்டில் நீரை கொண்டு செல்லுங்கள். இதனால் தாகத்தின் போது உடனே தண்ணீர் குடிக்கலாம்.

ஜூஸ்
நிச்சயம் அனைவருக்கும் ஜூஸ் பிடிக்கும். எனவே தண்ணீர் குடிக்க பிடிக்காதவர்கள், உடலில் நீர் வறட்சி ஏற்படாமல் இருக்க ஜூஸ்களை அதிகம் குடிக்கலாம்.

இளநீர்
இளநீரும் அனைவருக்கும் பிடித்த ஒரு ஆரோக்கியமான பானம். இதனை குடிப்பதால் உடலில் நீர்ச்சத்து அதிகரிப்பதுடன், சிறுநீர் பிரச்சனை மற்றும் சிறுநீரக பாதையில் ஏற்படும் நோய்த்தொற்றுகளை தடுக்கலாம்.

காய்கறிகள் மற்றும் பழங்கள்
எண்ணற்ற பழங்கள் மற்றும் காய்கறிகளில் நீர்ச்சத்தானது அதிக அளவில் உள்ளது. எனவே அத்தகைய காய்கறிகள் மற்றும் பழங்களை அவ்வப்போது சாப்பிடலாம். அதிலும் தர்பூசணி, ஆரஞ்சு, தக்காளி மற்றும் ஸ்ட்ராபெர்ரிகளை சாப்பிட்டால் நல்லது.

காப்ஃபைனை தவிர்க்கவும்
முக்கியமாக உடலில் நீர்வறட்சி ஏற்படாமல் இருக்க வேண்டுமானால், காப்ஃபைன் உள்ள உணவுப் பொருட்கள் உட்கொள்வதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் அவை உடலில் வறட்சியை ஏற்படுத்தக்கூடியவை.



Click it and Unblock the Notifications