Latest Updates
-
12 மாநிலங்கள் வழியாக செல்லும் இந்தியாவின் உயிர்நாடி என்று அழைக்கப்படும் நெடுஞ்சாலை எது தெரியுமா? -
செவ்வாய்-ராகு உருவாக்கும் நவபஞ்சம யோகத்தால் செப்டம்பர் மாதம் வரை கொடிகட்டி பறக்கப்போகும் 3 ராசிகள் -
ஆடி கிருத்திகை ஸ்பெஷல் கோதுமை நெய் அப்பம் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - டேஸ்ட் பிரமாதமா இருக்கும் -
இன்றைய ராசிபலன் 06 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க குடும்பத்துல பெரிய பிரச்சினை வரப்போகுதாம் -
ஆகஸ்ட் 13-ல் உருவாகும் லாப திருஷ்டி யோகத்தால் இந்த 3 ராசிக்காரர்கள் ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம் -
ஆமை வடை ரெசிபி - இந்த மாதிரி வடை சுட்டு பாருங்க - மொறுமொறுனு சூப்பராக இருக்கும் -
இந்தியாவில் இயற்கையாக வைரம் கிடைக்கும் ஒரே மாநிலம் எது தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
திருநெல்வேலி ஸ்டைல் அரைச்சுவிட்ட சாம்பார் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
அடுத்தவர் மனைவியை திருடுவது இந்த நாட்டில் வேடிக்கையான விளையாட்டாம் - ஆனா இதுல ஒரு விவகாரமான கண்டிஷன் இருக்கு -
சில்லி கார்லிக் ப்ரைடு ரைஸ் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும்
இசையை ரசியுங்கள் பதற்றம் குறையும்!
பொதுவாக அதீத பயம் அல்லது அமைதி இன்மையால் பதற்றம் ஏற்படும். பதற்றம் சில நிமிடங்கள் மட்டுமே இருக்கும், ஆனால் இத்தகைய நிமிடங்கள் நரக வேதனையாகும், இதனை விளக்க வார்த்தைகளை இல்லை.
கீழ்கண்ட அறிகுறிகளால் இதனை கண்டறியலாம்:
1. அதிகமான இதயத் துடிப்பு
2. வியர்த்து கொட்டுதல்
3. நடுக்கம்
4. மூச்சு விட சிரமம்
5. மாரடைப்பு
6. நெஞ்சு வலி
7. குமட்டல்
8. மயக்கம் அல்லது தலை சுற்றுதல்
இவையாவும் அதீத பயம் மற்றும் அமைதியின்மையால் ஏற்படுவது. இவை சொல்லாமல் கொள்ளாமால் வருவதாகும். ஆனால் பாதி நேரங்களில் ஏதாவது சில நிகழ்வுகளால் ஏற்படும் முன் பதற்றம் ஏற்படும். அதனால் இதனை சமாளிக்க எந்நேரமும் நாம் தயாராக இருக்க வேண்டும். இந்த பதற்றத்தை குறைக்க சில யோசனைகள், இதோ உங்களுக்காக:

சிறிது நேரம்
வேலை நேரங்களில் இருந்து சில மணி நேரம் சுற்றியுள்ள எதிர்மறைகளை பற்றி யோசிக்க பயன்படுத்தவும். ஏனென்றால் எதிர்மறைகளை எடுத்துக் கொள்ள ஆரம்பித்தால் நாம் அதனுடன் ஒத்துப் போவது போல் ஆகிவிடும். அதனால் அவைகளை தவிர்க்க வேண்டும்.

எதுவும் நடக்கலாம்
தன்னம்பிக்கையுள்ளவராக நேர்மறை சிந்தனையுடன் இருப்பது நல்லது தான். தவறாக ஏதுனும் நடந்தால் அதை எதிர்கொள்ள ஒருவர் எப்போதும் தயார் நிலையில் இருக்க வேண்டும். அதற்காக அதை பற்றி 24 மணி நேரமும் கவலை பட்டு கொண்டிருக்க வேண்டும் என்றில்லை. எடுத்த முடிவின் விளைவு நல்ல படியாக அமையாததால் இந்த கவனம் தேவைப்படுகிறது.

பொருமை
பதற்றத்தை குறைக்கும் மற்றொரு வழி அனைத்தையும் குறித்து வைப்பது. ஒரு டைரி, பென்சில் அல்லது பேனாவை எப்போதும் உடன் வைத்திருங்கள். அதில் பதற்றத்தினால் ஏற்படும் விளைவுகளை தேதி மற்றும் நேரத்துடன் குறிப்பிடுங்கள். எழுதுவதற்கு மன ஒருமித்தல் அவசியம். இது மன அழுத்தத்தின் அளவை குறைக்கும்.

உணவு பழக்கம்
காலை உணவு வளமாகவும் அதிகமாகவும் இருக்க வேண்டும் என்பது ஒத்துக்கொள்ளப்பட்ட விதி. மதிய உணவிற்கு முன் சிறிதளவு உணவுகளை கொறிக்கவும் செய்யலாம். இது இரத்தத்தில் உள்ள குளுகோஸ் அளவை கட்டுப்பாட்டில் வைக்க உதவும். அதனால் மனதும் அமைதி பெரும்.

தூக்கம்
தினசரி 8-9 மணி நேரம் தூக்கம் அவசியமான ஒன்றாகும். அதில் குறைபாடு ஏற்பட்டால் பதற்றம் வரும் வாய்ப்புகள் அதிகம்.

பழக்கம்
ஏதேனும் பழக்கத்துக்கு அடிமையாக உள்ளீர்களா?அப்படியானால் அது பதற்றத்தை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. அதனால் மதுபானம், புகையிலை, சிகரெட், கஞ்சா போன்ற பழக்கங்களுக்கு அடிமையாவதை நிறுத்தவும்.

யோகா
பதற்றத்தால் அதிகமாக பாதிக்கப்படுபவர்கள் கண்டிப்பாக உடற்பயிற்சியில் ஈடுபட வேண்டும். யோகாசனம் ஒரு சிறந்த உடற்பயிற்சி ஆகும். எந்த ஒரு சாதனமும் இன்றி பயிற்சி பெரும் எளிய வகை உடற்பயிற்சியாகும். மிதமான அளவு தசையை ஓய்வு பெறச் செய்யும் வழிமுறைகள் அல்லது ஆழமான மூச்சுப் பயிற்சி உங்கள் மனதுக்கு அமைதியை தரும்.
இவைகளை பின்பற்றினால் மன அழுத்தத்தில் இருந்து பாதிக்கப்படாமல் தப்பிக்கலாம். இவை அன்றைய சூழலில் ஏற்படும் பதற்றத்தை தணிக்க உதவி புரிந்தாலும், பயிற்சிகளை தினசரி செய்தால் இந்த பிரச்சனைக்கு நல்ல தீர்வு கிடைக்கும்.

பொழுதுபோக்கு
பொழுதுபோக்கில் ஈடுபட்டால் பதற்றத்தால் ஏற்படும் விளைவுகளை தவிர்க்கலாம். அந்த பொழுபோக்கு இசையை கேட்டு ரசிப்பதாகட்டும், அல்லது புத்தகம் படிப்பதாகட்டும் அல்லது பயணத்தில் ஈடுபடுவதாகட்டும், எதுவாக இருந்தாலும் அதில் முழுமையாக ஈடுபடவும்.



Click it and Unblock the Notifications