Latest Updates
-
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்! -
மட்டன் சுவையை மிஞ்சும் சோயா உருளைக்கிழங்கு குருமா ரெசிபி - செஞ்சு பாருங்க, செமையா இருக்கும் -
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்! -
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டகாத்து வீசும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க -
வீட்டிலேயே மாம்பழ ஐஸ்க்ரீம்மை ஈஸியாக செய்வது எப்படி-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இந்த உணவுகளில் ஒன்றை தினமும் சாப்பிடணுமாம் - அதான் நல்லது
இசையை ரசியுங்கள் பதற்றம் குறையும்!
பொதுவாக அதீத பயம் அல்லது அமைதி இன்மையால் பதற்றம் ஏற்படும். பதற்றம் சில நிமிடங்கள் மட்டுமே இருக்கும், ஆனால் இத்தகைய நிமிடங்கள் நரக வேதனையாகும், இதனை விளக்க வார்த்தைகளை இல்லை.
கீழ்கண்ட அறிகுறிகளால் இதனை கண்டறியலாம்:
1. அதிகமான இதயத் துடிப்பு
2. வியர்த்து கொட்டுதல்
3. நடுக்கம்
4. மூச்சு விட சிரமம்
5. மாரடைப்பு
6. நெஞ்சு வலி
7. குமட்டல்
8. மயக்கம் அல்லது தலை சுற்றுதல்
இவையாவும் அதீத பயம் மற்றும் அமைதியின்மையால் ஏற்படுவது. இவை சொல்லாமல் கொள்ளாமால் வருவதாகும். ஆனால் பாதி நேரங்களில் ஏதாவது சில நிகழ்வுகளால் ஏற்படும் முன் பதற்றம் ஏற்படும். அதனால் இதனை சமாளிக்க எந்நேரமும் நாம் தயாராக இருக்க வேண்டும். இந்த பதற்றத்தை குறைக்க சில யோசனைகள், இதோ உங்களுக்காக:

சிறிது நேரம்
வேலை நேரங்களில் இருந்து சில மணி நேரம் சுற்றியுள்ள எதிர்மறைகளை பற்றி யோசிக்க பயன்படுத்தவும். ஏனென்றால் எதிர்மறைகளை எடுத்துக் கொள்ள ஆரம்பித்தால் நாம் அதனுடன் ஒத்துப் போவது போல் ஆகிவிடும். அதனால் அவைகளை தவிர்க்க வேண்டும்.

எதுவும் நடக்கலாம்
தன்னம்பிக்கையுள்ளவராக நேர்மறை சிந்தனையுடன் இருப்பது நல்லது தான். தவறாக ஏதுனும் நடந்தால் அதை எதிர்கொள்ள ஒருவர் எப்போதும் தயார் நிலையில் இருக்க வேண்டும். அதற்காக அதை பற்றி 24 மணி நேரமும் கவலை பட்டு கொண்டிருக்க வேண்டும் என்றில்லை. எடுத்த முடிவின் விளைவு நல்ல படியாக அமையாததால் இந்த கவனம் தேவைப்படுகிறது.

பொருமை
பதற்றத்தை குறைக்கும் மற்றொரு வழி அனைத்தையும் குறித்து வைப்பது. ஒரு டைரி, பென்சில் அல்லது பேனாவை எப்போதும் உடன் வைத்திருங்கள். அதில் பதற்றத்தினால் ஏற்படும் விளைவுகளை தேதி மற்றும் நேரத்துடன் குறிப்பிடுங்கள். எழுதுவதற்கு மன ஒருமித்தல் அவசியம். இது மன அழுத்தத்தின் அளவை குறைக்கும்.

உணவு பழக்கம்
காலை உணவு வளமாகவும் அதிகமாகவும் இருக்க வேண்டும் என்பது ஒத்துக்கொள்ளப்பட்ட விதி. மதிய உணவிற்கு முன் சிறிதளவு உணவுகளை கொறிக்கவும் செய்யலாம். இது இரத்தத்தில் உள்ள குளுகோஸ் அளவை கட்டுப்பாட்டில் வைக்க உதவும். அதனால் மனதும் அமைதி பெரும்.

தூக்கம்
தினசரி 8-9 மணி நேரம் தூக்கம் அவசியமான ஒன்றாகும். அதில் குறைபாடு ஏற்பட்டால் பதற்றம் வரும் வாய்ப்புகள் அதிகம்.

பழக்கம்
ஏதேனும் பழக்கத்துக்கு அடிமையாக உள்ளீர்களா?அப்படியானால் அது பதற்றத்தை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. அதனால் மதுபானம், புகையிலை, சிகரெட், கஞ்சா போன்ற பழக்கங்களுக்கு அடிமையாவதை நிறுத்தவும்.

யோகா
பதற்றத்தால் அதிகமாக பாதிக்கப்படுபவர்கள் கண்டிப்பாக உடற்பயிற்சியில் ஈடுபட வேண்டும். யோகாசனம் ஒரு சிறந்த உடற்பயிற்சி ஆகும். எந்த ஒரு சாதனமும் இன்றி பயிற்சி பெரும் எளிய வகை உடற்பயிற்சியாகும். மிதமான அளவு தசையை ஓய்வு பெறச் செய்யும் வழிமுறைகள் அல்லது ஆழமான மூச்சுப் பயிற்சி உங்கள் மனதுக்கு அமைதியை தரும்.
இவைகளை பின்பற்றினால் மன அழுத்தத்தில் இருந்து பாதிக்கப்படாமல் தப்பிக்கலாம். இவை அன்றைய சூழலில் ஏற்படும் பதற்றத்தை தணிக்க உதவி புரிந்தாலும், பயிற்சிகளை தினசரி செய்தால் இந்த பிரச்சனைக்கு நல்ல தீர்வு கிடைக்கும்.

பொழுதுபோக்கு
பொழுதுபோக்கில் ஈடுபட்டால் பதற்றத்தால் ஏற்படும் விளைவுகளை தவிர்க்கலாம். அந்த பொழுபோக்கு இசையை கேட்டு ரசிப்பதாகட்டும், அல்லது புத்தகம் படிப்பதாகட்டும் அல்லது பயணத்தில் ஈடுபடுவதாகட்டும், எதுவாக இருந்தாலும் அதில் முழுமையாக ஈடுபடவும்.



Click it and Unblock the Notifications