Latest Updates
-
வாரம் ஒருமுறை இந்த கம்பு அடை தோசையை செஞ்சு சாப்பிடுங்க.. எலும்பு பிரச்சனையே வராது... -
இன்றைய ராசிபலன் 13 மே 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு மனஅழுத்தம் நிறைந்த நாளாக இருக்குமாம் -
சனிபகவான் ரேவதி நட்சத்திரத்திற்கு செல்வதால் துரதிர்ஷ்டத்தையும், ஆபத்துகளையும் சந்திக்கப்போகும் 3 ராசிகள் -
சௌ சௌ வாங்குனா இந்த மாதிரி வித்தியாசமா சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும் -
ஹன்டா வைரஸ் Vs. கொரோனா வைரஸ்: இந்த இரண்டில் எது மிகவும் ஆபத்தானது? அவற்றின் அறிகுறிகள் என்னென்ன தெரியுமா? -
விஜய் சிஎம் ஆனதும் த்ரிஷா போட்ட அந்த ஒரு பதிவு... பின்னணியில் இருக்கும் மர்மம் என்ன? -
கல்யாண மேடையில் ரத்தக் களரி! வரதட்சணை கேட்டு மணமகன் வீட்டார் செய்த அராஜகம் - அதிர்ச்சியில் உறைந்த விருந்தினர்கள்! -
கிராமத்து ஸ்டைல் சிக்கன் பிரட்டல் ரெசிபி - ஒருதடவை செஞ்சு பாருங்க, செம சைடிஷா இருக்கும் -
இந்த 4 மாதங்களில் பிறந்தவர்கள் உலகை ஆட்டிப்படைக்கும் சக்திவாய்ந்தவர்களாக இருப்பார்களாம் -
கிலோ 12000 ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான அரிசி இதுதான் - இதுல அப்படி என்ன ஸ்பெஷல் தெரியுமா?
மயக்கம் வருவது போல இருக்கா? இதெல்லாம் பண்ணுங்க...

* முக்கியமாக மயக்கம் வருவதற்கு உடலில் சர்க்கரையின் அளவு குறைவாக இருப்பதே காரணமாக இருக்கும். அதிலும் சிலர் விரதம் இருக்க நீண்ட நேரம் சாப்பிடாமல் இருப்பார்கள். அந்த நேரத்தில் உடலில் எவ்வளவு நேரம் தான் சர்க்கரையில்லாமல் இருக்கும். ஆகவே இந்த நிலையில் வரும் மயக்கத்தை தடுப்பதற்கான ஈஸியான வழி வாயில் சிறிது சர்க்கரையை போட்டுக் கொள்வது. இவ்வாறு சர்க்கரை சாப்பிட்டால் மயக்கம் வருவதை தவிர்க்கலாம்.
* இரத்த அழுத்தம் குறைவாக இருப்பதும் மயக்கம் வருவதற்கான காரணமாக இருக்கும். இது எப்போது நீண்ட நேரம் சாப்பிடாமல் இருக்கிறோமோ, அப்போது இரத்த அழுத்தம் குறைவினால் மயக்கம் வரும். ஆகவே அப்போது உப்பை அல்லது உப்பு அதிகம் இருக்கும் உணவுப் பொருட்களை சாப்பிட்டால், உடலில் இரத்த அழுத்தம் அதிகரிக்கும். ஏனெனில் உப்பு உடலில் இரத்த அழுத்தத்தை அதிகரிக்கும் ஒரு பொருள்.
* வெளியே நீண்ட நேரம் வெயிலில் செல்லும் போது, சூரியன் உடலில் இருக்கும் எனர்ஜியை உறிஞ்சிவிடும். அதாவது உடலில் இருக்கும் நீர்ச்சத்துக்களை சூரியன் உறிஞ்சிவிடுவதால், உடலில் அப்போது ஒருவித பதட்டம் ஏற்படுவது போல் ஏற்படும். ஆகவே அப்போது எலுமிச்சை சாற்றுடன் சர்க்கரை மற்றும் உப்பை கலந்து குடிக்க வேண்டும். இதனால் மயக்கம் ஏற்படாமல் இருக்கும்.
* பெண்கள் அழகாக உடை அணிகிறேன் என்று உடலை இறுக்கும் வகையில் இருக்கும் ஆடையை அணிகின்றனர். அதனால் உடலில் சரியான இரத்த ஓட்டம் ஏற்படாமல், மூளைக்கு செல்லும் ஆக்ஸிஜனின் அளவு குறைந்து மயக்க நிலை உண்டாகிறது. அதுமட்டுமல்லாமல் நரம்புகள் வலுவிழக்கின்றன. ஆகவே அந்த நேரத்தில் மயக்கம் வருவது போல் இருந்தால், அப்போது மூச்சை இழுத்து விடவும், பின் இறுக்கமாக அணிந்திருக்கும் உடையை மாற்றிவிடவும். இதனால் மயக்க உணர்வு நீங்கும்.
எனவே மேற்கூறியவாறெல்லாம் செய்தால், மயக்கம் வராமல் தடுக்கும் வழிகள் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications