Latest Updates
-
சனிபகவானின் வக்ர பெயர்ச்சியால் 138 நாட்களுக்கு ஜெயிக்கிற குதிரையா மாறப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
சீதா நவமி: உங்கள் வீட்டில் இந்த மாற்றங்களைச் செய்தா பணமழை கொட்டுமா? அதிர்ஷ்டம் தரும் வாஸ்து ரகசியம்! -
கோடையில் இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க.. உடல் எடையும் குறையும், உடல் சூடும் தணியும்.. -
இன்றைய ராசிபலன் 25 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ராஜயோகம் கூடிவரப்போகுதாம் -
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்! -
மட்டன் சுவையை மிஞ்சும் சோயா உருளைக்கிழங்கு குருமா ரெசிபி - செஞ்சு பாருங்க, செமையா இருக்கும் -
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்!
குடிப்பது தொடர்பாக நிலவி வரும் தவறான கருத்துக்கள்!! உங்களுக்கு தெரியுமா?
மது அருந்துவதன் தொடர்பாக நிலவி வரும் பொய்யான தகவல்களை இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.
ஆல்கஹால் குடித்தவுடன் விரைவிலேயே ரத்த ஓட்டத்தில் கலந்துவிடுவதால் மூளைக்கும் செல்கிறது. இதன் விளைவே போதை எனப்படும் இயல்பான நடவடிக்கைகளிலிருந்து ஏற்படும் மாற்றங்கள், ஆல்கஹால் ஊக்கத்தை அழித்து சோர்வை ஏற்படுத்தும் போதை மருந்தாகும்.
ஆனால் நாம் நிறைய கேள்விப்படுகிறோம். குடித்தான் கொழுப்பு கரையும். சிறிதளவு குடிக்கலாம் தவறில்லை. என இன்னும் பலவிஷயங்களை பார்க்கிறோம். ஆனால் அவை எந்தளவிற்கு உண்மை என தெரியுமா? படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

தவறு - 1
தினசரி சிறிதளவு மது அருந்துவது நல்லதும் பாதுகாப்பானதும் ஆகும். இதனால் உடலில் கொழுப்பு கரைக்கப்படுகிறது. சிறிய அளவு என்றாலும் ஆல்கஹால் குடலின் மென்சுவர்களை புண்ணக்குகின்றன.
தினமும் தொடர்ந்து குடிக்கும்போது அவை கல்லீரலை பாதிக்கும். ஆகவே அளவென்பது கிடையாது. கெடுதல் கெடுதல்தான்.

தவறு - 2
ஆல்கஹாலை அருந்தியவர் மாமிச உணவை உட்கொண்டு விட்டால் எந்த வித உடல் பாதிப்பும் ஏற்படாது என்பது முற்றிலும் தவறான நம்பிக்கையாகும்.

தவறு - 3
பீர் மற்றும் ஒயின் உடலுக்குத் தீங்கு விளைவிக்காது. - இதுவும் தவறுதான் இவை உடல் பருமனை உண்டுபண்ணிவிடும். ஒயின் மற்றும் பியர் இரண்டுமே கெடுதல்தான்.

தவறு - 4
குடிப்பதால் ஒருவர் தனது மனச்சோர்விலிருந்து விடுபட முடியும்.- தவறு. தற்காலிகமாக மறக்கபடிப்படுவதுபோல் செய்து உங்கள் உடல் மற்றும் மன நில பாதிப்பை இருமடங்கு அதிகப்படுத்திவிடும். இதனால்தான் குடிக்கு அடிமையானவர்கள் பாதிபேர்.

தவறு - 5
குடித்தால் இரவில் நன்கு உறக்கம் வரும்.- இதுவும் தவறு. குடிப்பதால் உங்கள் மூளையில் மயக்க நிலை உண்டாகிறது. நரம்பு மண்டலங்கள் பலவீனப்படுகிறது. இதனால் நீங்கள் தூங்குகிறீர்கள். ஆனால் அது உங்களுக்கு ஆழ்ந்த தூக்கத்தை தராது. மேலோட்டமான 6 மணி நேர தூக்கம் வெறும் 3 மணி நேர தூக்கத்திற்கே சமம்.

தவறு - 6
ஜலதோஷம் மற்றும் இருமலை குணப்படுத்தும். இது தவறு. ஜலதோஷம், இருமலை போக்கும் அளவிற்கு மதுவில் எந்த மருத்துவ பலனும் இல்லை.



Click it and Unblock the Notifications