Latest Updates
-
வரகரிசி மசாலா தோசை - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க... -
இன்றைய ராசிபலன் 25 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு குழப்பமான நாளாக இருக்குமாம் -
கஜலட்சுமி யோகம் கடக ராசியில் இருப்பதால் கோடீஸ்வர யோகாக்கத்தால் பெறப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் வேர்க்கடலையும், கொத்தமல்லியும் இருந்தா இந்த மாதிரி சுருக்குனு சட்னி அரைங்க - டேஸ்ட் தாறுமாறா இருக்கும் -
July 2026: ஜூலை மாதத்தின் முக்கியமான நாட்கள் மற்றும் விரத தினங்கள் என்னென்ன தெரியுமா? -
2 பிரட்டும், அரை கப் கடலை மாவும் இருந்தா டக்குனு இந்த டிபனை பண்ணுங்க - டேஸ்ட்டா, ஆரோக்கியமா இருக்கும் -
சனிபகவான் வக்ர பெயர்ச்சியை தொடங்கப் போவதால் பணத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 3 ராசிகள் -
ட்ராபிக் சிக்னலில் ஏன் உலகம் முழுக்க சிவப்பு, மஞ்சள், பச்சை நிறம் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது தெரியுமா? -
முட்டைக்கோஸ் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் பிரியாணி செஞ்சு பாருங்க - கமகமனு சூப்பரா இருக்கும் -
July 2026 Horoscope: இந்த 4 ராசிக்காரங்க ஜூலை மாதத்தில் கொடிகட்டி பறக்கப்போறாங்களாம் - உங்க ராசி இதுல இருக்கா?
மழைக் காலத்தில் நாம் மறந்தும் செய்துவிடக் கூடாத 5 தவறுகள்!
மழைக் காலத்தில் நோய் தொற்று எளிதாக அண்டும். முக்கியமாக உடை விஷயத்தில் நீங்கள் ஆரோக்கிய முறைகளை பின்பற்ற வேண்டியது அவசியம்.
நோய் தொற்றுகள் அதிகமாக ஏற்படும் காலம் இது. மழைக் காலத்தில் உணவு மூலமாக நோய் தொற்று ஏற்படுவதை விட, உடை பயன்பாட்டு விஷயங்கள் மூலமாக தான் எளிதாக, வேகமாக நோய் தொற்றுகள் உண்டாகின்றன.
மழைக் காலத்தில் உறங்கும் போது பயன்படுத்தும் போர்வை, நாள்தோறும் உடுத்தும் உடைகளில் நாம் அதிக கவனம் எடுத்துக் கொள்ள வேண்டும். இதை சரியாக செய்வதனால் நாம் குளிர் / மழைக் காலத்தில் அதிகம் நோய் தொற்று உண்டாகாமல் பார்த்துக் கொள்ள முடியும்.
முக்கியமாக வீட்டில் இருக்கும் பெரியவர்க்க மற்றும் குழந்தைகள் இதை சரியாக பின்பற்ற வேண்டும்...

பெட்ஷீட்!
மழைக் காலம் முழுவதும் ஒரே பெட்ஷீட், போர்வையை பயன்படுத்த வேண்டாம். இரண்டு வாரத்திற்கு ஒருமுறை பெட்ஷீட், போர்வையை துவைக்க மறக்க வேண்டாம்.

ஆடைகள்!
அதே போல ஆடைகளை துவைத்த பிறகு வெயில் படும்படியான இடம் / வெயில் வெளிப்படும் நேரத்தில் உலர்த்த வேண்டும். இல்லையேல் ஆடையில் கிருமிகள் தொற்று அதிகரித்துவிடும்.

குளியல்!
மழைக் காலத்தில் குளிர் என அஞ்சி குளிப்பதற்கு லீவு விட வேண்டாம். ஒருநாளுக்கு இரண்டு முறை குளியுங்கள். குறைந்தபட்சம் சுடுதண்ணி வைத்தாவது இரண்டு முறை குளிக்க முயற்சி செய்யுங்கள்.

ஈரமான உடல்!
குளித்து முடித்தவுடன் நீண்ட நேரம் இருக்க வேண்டாம். மழை / குளிர் காலத்தில் இதனால் எளிதாக காய்ச்சல், சளி உண்டாக வாய்ப்பிருக்கிறது.

வீடு!
வீடு மற்றும் வீட்டை சுற்றி இருக்கும் இடங்களில் நீர் தேங்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். நீர் தேக்கங்கள் காரணமாக தான் கிருமிகள் மற்றும் நோய் தொற்றுகள் அதிகரிக்கின்றன.



Click it and Unblock the Notifications