டீயை மீண்டும் சூடுபண்ணி குடித்தால் உங்கள் உடலுக்குள் என்ன நடக்கும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க...!

இந்தியாவில் மட்டுமல்ல உலகம் முழுக்க தேநீரை விரும்பி குடிப்பவர்கள் கோடிக்கணக்கான மக்கள் உள்ளனர். தேநீரை மீண்டும் சூடு செய்து குடிப்பது என்பது பெரும்பாலான மக்கள் செய்யும் மோசமான தவறாகும். பொதுவாக தேநீரை சூடு பண்ணி குடிப்பது பாதிப்பில்லாததாகத் தோன்றலாம், ஆனால் உண்மையில் மீண்டும் சூடுபடுத்துவது பல ஆரோக்கிய பிரச்சினைகளை ஏற்படுத்தும்.

Journal of Food Science-ல் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், தேநீரை மீண்டும் சூடுபடுத்துவது அதிலுள்ள கேட்டசின்கள் போன்ற நன்மை பயக்கும் சேர்மங்களை சிதைத்து, சுவை மற்றும் ஆரோக்கியத்தை பாதிக்கும் பயோஜெனிக் அமின்கள் போன்ற தீங்கு விளைவிக்கும் பொருட்களை அதிகரிக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது.

Side Effects of Drinking Reheated Tea

தினமும் இலட்சக்கணக்கான மக்கள் தேநீரை பருகுகின்றனர், மேலும் அதை மீண்டும் சூடுபடுத்தி குடிக்கும் தவறான பழக்கம் செரிமானம், வாய்வழி ஆரோக்கியம் மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியம் என அனைத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தலாம். இந்த பதிவில் தேநீரை சூடுபடுத்தி குடிப்பதால் ஏற்படும் பிரச்சினைகள் என்னென்ன என்று தெரிந்து கொள்ளலாம்.

ஆக்சிஜனேற்றிகள் இழப்பு

தேநீரில் கேட்டசின்கள் மற்றும் பாலிபினால்கள் போன்ற சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்துள்ளன, அவை வீக்கத்தைக் குறைக்கவும், இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், செல்களை சேதத்திலிருந்து பாதுகாக்கவும் உதவுகின்றன. தேநீரை மீண்டும் மீண்டும் சூடுபடுத்துவது இந்த சேர்மங்களை உடைக்கிறது, அதாவது மீண்டும் சூடுபடுத்தப்பட்ட தேநீர் மிகவும் குறைவான ஆரோக்கிய நன்மைகளையே வழங்குகிறது. தொடர்ச்சியாக இதை உட்கொள்வது நீண்டகால பாதிப்பை ஏற்படுத்தும்.

டானின் அதிகரிப்பு மற்றும் கசப்புத்தன்மை

தேநீரை மீண்டும் சூடாக்குவது டானின் அளவை அதிகரிக்கிறது, இதனால் தேநீர் மேலும் கசப்பாகவும் அமிலத் தன்மை நிறைந்ததாகவும் மாறும். டானின்கள் இரும்புச்சத்து போன்ற சத்துக்களை உறிஞ்சும் உடலின் திறனைப் பாதிக்கும். மீண்டும் சூடாக்கப்பட்ட தேநீரைத் தொடர்ந்து குடிப்பது செரிமானப் பிரச்சினைகள், அஜீரணம் அல்லது ஒரு நாளைக்கு பல முறை உட்கொண்டால் ஊட்டச்சத்து குறைபாடுகளுக்கு காரணமாக இருக்கக்கூடும்.

பாக்டீரியாக்களின் வளர்ச்சி

காய்ச்சிய தேநீரை அறை வெப்பநிலையில் நீண்ட நேரம் வைத்திருந்தால் அதில் பாக்டீரியாக்கள் வளரக்கூடும். தேநீரை மீண்டும் சூடுபடுத்துவது ஒருபோதும் இந்த பாக்டீரியாக்களை அழிக்காது, குறிப்பாக பால் சேர்க்கப்பட்டிருந்தால் அது பாக்டீரியாக்களின் வளர்ச்சியை அதிகரிக்கும். பால் சேர்க்கப்பட்ட டீ அறை வெப்பநிலையில் நான்கு மணி நேரத்திற்குப் பிறகு பாக்டீரியா மாசுபாட்டிற்கு எளிதில் ஆளாகிறது. இந்த சூழ்நிலையில் மீண்டும் சூடேற்றப்பட்ட தேநீரைக் குடிப்பது வயிற்று வலி அல்லது உணவு மூலம் பரவும் நோய்களின் அபாயத்தை அதிகரிக்கும்.

செரிமான ஆரோக்கியத்தைப் பாதிக்கும்

தேநீரை மீண்டும் சூடுபடுத்துவது அதன் அமிலத்தன்மையை அதிகரிக்கும், இது நெஞ்செரிச்சல், இரைப்பை அழற்சி அல்லது அமில ரிஃப்ளக்ஸ் போன்ற நிலைமைகளை மோசமாக்கும். அமில பானங்களுக்கு உணர்திறன் உள்ளவர்கள் மீண்டும் சூடாக்கப்பட்ட தேநீரை தொடர்ந்து குடித்தால் வீக்கம் அல்லது வயிற்று எரிச்சலை அனுபவிக்கலாம். புதிதாக காய்ச்சப்பட்ட தேநீர் செரிமான அமைப்பை மென்மையாக்குகிறது மற்றும் செரிமானத்திற்கு உதவும் சேர்மங்களின் இயற்கையான சமநிலையைப் பாதுகாக்கிறது. ஆனால் மீண்டும் சூடுபடுத்தப்பட்ட தேநீர் இதற்கு முற்றிலும் நேர்மாறான பணிகளை செய்கிறது.

தேநீரின் சுவை மற்றும் வேதியியல் கலவையில் மாற்றம்

தேநீரை மீண்டும் மீண்டும் சூடாக்குவது அதன் சுவையையும், வேதியியல் கலவையையும் மாற்றும். சேர்மங்களில் ஏற்படும் மாற்றம் தேநீரின் சுவையை பாதிப்பது மட்டுமல்லாமல், ஆரோக்கியத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் நுட்பமான வேதியியல் மாற்றங்களுக்கும் வழிவகுக்கும்.

Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.

Story first published: Thursday, October 9, 2025, 20:25 [IST]
Desktop Bottom Promotion