Latest Updates
-
ஆகஸ்ட் 13-ல் உருவாகும் லாப திருஷ்டி யோகத்தால் இந்த 3 ராசிக்காரர்கள் ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம் -
ஆமை வடை ரெசிபி - இந்த மாதிரி வடை சுட்டு பாருங்க - மொறுமொறுனு சூப்பராக இருக்கும் -
இந்தியாவில் இயற்கையாக வைரம் கிடைக்கும் ஒரே மாநிலம் எது தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
திருநெல்வேலி ஸ்டைல் அரைச்சுவிட்ட சாம்பார் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
அடுத்தவர் மனைவியை திருடுவது இந்த நாட்டில் வேடிக்கையான விளையாட்டாம் - ஆனா இதுல ஒரு விவகாரமான கண்டிஷன் இருக்கு -
சில்லி கார்லிக் ப்ரைடு ரைஸ் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
காரைக்குடி கார சட்னி - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
சனிபகவான் ரேவதி நட்சத்திரம் செல்வதால் அக்டோபர் மாதம் வரை இந்த 3 ராசிக்காரங்க ராஜாதான் - உங்க ராசி இதுல இருக்கா -
இன்றைய ராசிபலன் 05 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு தங்க மழை கொட்டப்போகுதாம் -
புதன் பெயர்ச்சியால் நாளை முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படப்போகுது..
எச்சரிக்கை! உடலில் இங்கெல்லாம் வலி இருக்கா? அப்ப உங்க உடலில் இரத்த சர்க்கரை அளவு அபாயத்தை நோக்கி செல்லுதாம்!
High Blood Sugar In Tamil: இன்றைய நாளில் நீரிழிவு நோயாளிகள் இல்லாத குடும்பங்களே இல்லை எனலாம். அந்தளவிற்கு சர்க்கரை நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பெரும்பாலும் 35 வயதை தாண்டியதும் நீரிழிவு நோய் வந்துவிடுவோம் என்ற பயம் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கிறது.
நீரிழிவு நோய் ஏற்படுவதற்கு முக்கிய காரணம் வாழ்க்கை முறை மாற்றங்கள் மற்றும் அதிகரித்த உடல் பருமன். இன்னும் சில காரணங்களாலும் நீரிழிவு நோய் ஏற்படுகிறது. சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட நபர்கள், உட்கொள்ளும் உணவுகள் முதல் உடல் செயல்பாடுகள் வரை அனைத்திலும் மிக கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில், அவை உங்கள் இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கலாம்.

உங்கள் உடலில் இரத்த சர்க்கரை அளவு அதிகரிக்கும்போது, அவை இரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால், இதய நோய், பக்கவாதம் போன்ற உயிருக்கு ஆபத்தான பிரச்சனைகளையும் ஏற்படுத்தலாம். நீரிழிவு என்பது ஒரு பிரச்சனை மட்டுமல்ல, அது பல அறிகுறிகளைக் கொண்டுள்ளது. அவற்றில் ஒன்று நோயாளி அனுபவிக்கும் வலி உணர்வுகள்.
நீரிழிவு நோய், வளர்சிதை மாற்றக் கோளாறு, உடலின் நரம்பு மண்டலத்தை பாதிக்கிறது மற்றும் நரம்புகளின் செயல்பாட்டை பாதிக்கிறது. இதன் விளைவாக சில உடல் பாகங்களில் வலி உணர்வுகள் அதிகமாக உணரப்படுகின்றன. இந்த வலிகள் பெரும்பாலும் தானாகவே போய்விடும் அல்லது உடலில் சர்க்கரையின் அளவு அதிகமாக இருந்தால், இந்த வலிகள் ஏற்படலாம்.
மேலும் பலர் இந்த வலிகள் ஏற்படுவதை சாதாரணமாக நினைத்து புறக்கணிக்கிறார்கள். சர்க்கரை அளவு அதிகரிப்பதை நிறுத்துவதற்கும், விரைவாக சிகிச்சை பெறுவதற்கும், இந்த வலிகளைக் கவனிக்க வேண்டியது மிக அவசியம். இரத்த சர்க்கரை அளவு அதிகரிக்கும்போது, உங்கள் உடலில் எங்கெங்கு வலி உணர்வுகள் ஏற்படும் என்று இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளலாம்.
தொடைகளில் வலி
தொடைகளில் தாங்க முடியாத வலி உணர்வு ஏற்படுவதை சாதாரணமாக கருதாதீர்கள். இது உங்கள் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு அதன் இயல்பான அளவைத் தாண்டியிருப்பதை குறிக்கும் அறிகுறியாகும். இந்த வலிக்கும், காயம் அல்லது கீழே விழும்போது நாம் அனுபவிக்கும் வலிக்கும் வித்தியாசம் உள்ளது.
உடலில் சர்க்கரை அளவு அதிகரிப்பதினால் ஏற்படும் வலி, உள்ளிருந்து அசௌகரியம் மற்றும் குறுகிய வலியை உங்களை உணர வைக்கும். இந்த வலி உங்கள் அன்றாட நடவடிக்கைகளில் கூட தலையிடலாம்.
கீழ் முதுகில் வலி
சில நேரங்களில் முதுகு வலி ஏற்படுவது பொதுவானது. அதிக நேரம் வாகனங்கள் ஓட்டுவதாலும், நீண்ட நேரம் உட்கார்ந்து வேலை செய்வது போன்ற பல காரணங்களால் முதுகு வலி ஏற்படலாம். ஆனால், உங்கள் உடலில் சர்க்கரையின் அளவு அதிகமானால், இடுப்பு அல்லது கீழ் முதுகில் விவரிக்க முடியாத வலி ஏற்படலாம்.
இந்த வலி கடுமையானதாகவும் சில நேரங்களில் தாங்க முடியாததாகவும் இருக்கலாம். இது பெரும்பாலும் தசை வலிமை இழப்பதால் ஏற்படுகிறது. நீரிழிவு நோய் அபாயகரமான நிலையை நோக்கி செல்கிறது என்பதை குறிக்கும் ஒரு அறிகுறியாகவும் கீழ் முதுகு வலி கருத்தப்படுகிறது.
முன்னங்காலை தூக்க முடியாமல் இருப்பது
நீரிழிவு மோனோநியூரோபதி அல்லது ஃபோகல் நியூரோபதியின் அறிகுறியும் உடலில் சர்க்கரை அளவு அதிகமாக இருப்பதை குறிக்கிறது. இந்த நிலையில், ஒருவர் பாதத்தின் முன் பகுதியை உயர்த்துவது கடினம். இது தவிர, ஒருவர் கால் அல்லது தாடையில் வலியை அனுபவிக்கிறார்.
கால்களில் கடுமையான வலி மற்றும் பிடிப்புகள்
கால்களில் வலிமிகுந்த பிடிப்புகள் ஏற்படுவது பெரும்பாலான சர்க்கரை நோயாளிகள் சந்திக்கும் பொதுவான உடல்நல பிரச்சனை. மருத்துவ ரீதியாக நீரிழிவு நரம்பியல் என்று அழைக்கப்படும் இந்த நிலை, கால்களில் நரம்பு சேதம் காரணமாக நிகழ்கிறது. மேலும், இது உடலில் நீண்ட காலமாக உயர் இரத்த சர்க்கரை அளவால் ஏற்படும் ஒரு சிக்கலாகும்.
தொடுவதற்கு கூட அதிக உணர்திறன்
நீரிழிவு நரம்பியல் காரணமாக, சிலர் லேசான தொடுதலுக்கு கூட அதிகம் உணர்திறன் அடைபவர்களாக இருக்கலாம். இந்த நிலையில் ஒரு படுக்கை விரிப்பு கூட உங்களுக்கு வலியை ஏற்படுத்தலாம். இவை அனைத்தும் புற நரம்பு சேதத்தின் அறிகுறிகள்.
புற நரம்பு சேதம் உங்கள் கைகள் மற்றும் கால்களை பாதிக்கிறது. மேலும் இது நரம்பு சேதத்தின் மிகவும் பொதுவான வகையாகும். நீரிழிவு நோயாளிகள், இது பொதுவாக பாதங்களில் தொடங்குகிறது. பொதுவாக இரண்டு கால்களிலும் ஒரே நேரத்தில் இந்த அறிகுறிகள் ஏற்படலாம்.
பாதங்களில் கூச்ச உணர்வு
உங்கள் கால்களில் ஊசிகளால் குத்தப்படுவது போல் நீங்கள் எப்போதாவது உணர்ந்திருக்கிறீர்களா? இந்த உணர்வை வேறு பல லேசான விஷயங்களுடன் தொடர்புபடுத்தும்போது, இது நீரிழிவு நோயுடன் தொடர்புடைய ஒரு தீவிரமான சிக்கலாக மாறும்.
இந்த அறிகுறியின் தொடர்ச்சியான நிகழ்வுகளை புறக்கணிக்காதீர்கள். உங்கள் பாதங்களில் ஊசி குத்துவது போன்ற வலி உணர்வு அதிகமாக இருந்தால், உங்கள் இரத்த சர்க்கரை அளவை உடனடியாக சரிபார்க்க வேண்டியது மிக முக்கியம்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications

