Latest Updates
-
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்! -
மட்டன் சுவையை மிஞ்சும் சோயா உருளைக்கிழங்கு குருமா ரெசிபி - செஞ்சு பாருங்க, செமையா இருக்கும் -
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்! -
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டகாத்து வீசும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க -
வீட்டிலேயே மாம்பழ ஐஸ்க்ரீம்மை ஈஸியாக செய்வது எப்படி-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இந்த உணவுகளில் ஒன்றை தினமும் சாப்பிடணுமாம் - அதான் நல்லது
எச்சரிக்கை! உடலில் இங்கெல்லாம் வலி இருக்கா? அப்ப உங்க உடலில் இரத்த சர்க்கரை அளவு அபாயத்தை நோக்கி செல்லுதாம்!
High Blood Sugar In Tamil: இன்றைய நாளில் நீரிழிவு நோயாளிகள் இல்லாத குடும்பங்களே இல்லை எனலாம். அந்தளவிற்கு சர்க்கரை நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பெரும்பாலும் 35 வயதை தாண்டியதும் நீரிழிவு நோய் வந்துவிடுவோம் என்ற பயம் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கிறது.
நீரிழிவு நோய் ஏற்படுவதற்கு முக்கிய காரணம் வாழ்க்கை முறை மாற்றங்கள் மற்றும் அதிகரித்த உடல் பருமன். இன்னும் சில காரணங்களாலும் நீரிழிவு நோய் ஏற்படுகிறது. சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட நபர்கள், உட்கொள்ளும் உணவுகள் முதல் உடல் செயல்பாடுகள் வரை அனைத்திலும் மிக கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில், அவை உங்கள் இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கலாம்.

உங்கள் உடலில் இரத்த சர்க்கரை அளவு அதிகரிக்கும்போது, அவை இரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால், இதய நோய், பக்கவாதம் போன்ற உயிருக்கு ஆபத்தான பிரச்சனைகளையும் ஏற்படுத்தலாம். நீரிழிவு என்பது ஒரு பிரச்சனை மட்டுமல்ல, அது பல அறிகுறிகளைக் கொண்டுள்ளது. அவற்றில் ஒன்று நோயாளி அனுபவிக்கும் வலி உணர்வுகள்.
நீரிழிவு நோய், வளர்சிதை மாற்றக் கோளாறு, உடலின் நரம்பு மண்டலத்தை பாதிக்கிறது மற்றும் நரம்புகளின் செயல்பாட்டை பாதிக்கிறது. இதன் விளைவாக சில உடல் பாகங்களில் வலி உணர்வுகள் அதிகமாக உணரப்படுகின்றன. இந்த வலிகள் பெரும்பாலும் தானாகவே போய்விடும் அல்லது உடலில் சர்க்கரையின் அளவு அதிகமாக இருந்தால், இந்த வலிகள் ஏற்படலாம்.
மேலும் பலர் இந்த வலிகள் ஏற்படுவதை சாதாரணமாக நினைத்து புறக்கணிக்கிறார்கள். சர்க்கரை அளவு அதிகரிப்பதை நிறுத்துவதற்கும், விரைவாக சிகிச்சை பெறுவதற்கும், இந்த வலிகளைக் கவனிக்க வேண்டியது மிக அவசியம். இரத்த சர்க்கரை அளவு அதிகரிக்கும்போது, உங்கள் உடலில் எங்கெங்கு வலி உணர்வுகள் ஏற்படும் என்று இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளலாம்.
தொடைகளில் வலி
தொடைகளில் தாங்க முடியாத வலி உணர்வு ஏற்படுவதை சாதாரணமாக கருதாதீர்கள். இது உங்கள் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு அதன் இயல்பான அளவைத் தாண்டியிருப்பதை குறிக்கும் அறிகுறியாகும். இந்த வலிக்கும், காயம் அல்லது கீழே விழும்போது நாம் அனுபவிக்கும் வலிக்கும் வித்தியாசம் உள்ளது.
உடலில் சர்க்கரை அளவு அதிகரிப்பதினால் ஏற்படும் வலி, உள்ளிருந்து அசௌகரியம் மற்றும் குறுகிய வலியை உங்களை உணர வைக்கும். இந்த வலி உங்கள் அன்றாட நடவடிக்கைகளில் கூட தலையிடலாம்.
கீழ் முதுகில் வலி
சில நேரங்களில் முதுகு வலி ஏற்படுவது பொதுவானது. அதிக நேரம் வாகனங்கள் ஓட்டுவதாலும், நீண்ட நேரம் உட்கார்ந்து வேலை செய்வது போன்ற பல காரணங்களால் முதுகு வலி ஏற்படலாம். ஆனால், உங்கள் உடலில் சர்க்கரையின் அளவு அதிகமானால், இடுப்பு அல்லது கீழ் முதுகில் விவரிக்க முடியாத வலி ஏற்படலாம்.
இந்த வலி கடுமையானதாகவும் சில நேரங்களில் தாங்க முடியாததாகவும் இருக்கலாம். இது பெரும்பாலும் தசை வலிமை இழப்பதால் ஏற்படுகிறது. நீரிழிவு நோய் அபாயகரமான நிலையை நோக்கி செல்கிறது என்பதை குறிக்கும் ஒரு அறிகுறியாகவும் கீழ் முதுகு வலி கருத்தப்படுகிறது.
முன்னங்காலை தூக்க முடியாமல் இருப்பது
நீரிழிவு மோனோநியூரோபதி அல்லது ஃபோகல் நியூரோபதியின் அறிகுறியும் உடலில் சர்க்கரை அளவு அதிகமாக இருப்பதை குறிக்கிறது. இந்த நிலையில், ஒருவர் பாதத்தின் முன் பகுதியை உயர்த்துவது கடினம். இது தவிர, ஒருவர் கால் அல்லது தாடையில் வலியை அனுபவிக்கிறார்.
கால்களில் கடுமையான வலி மற்றும் பிடிப்புகள்
கால்களில் வலிமிகுந்த பிடிப்புகள் ஏற்படுவது பெரும்பாலான சர்க்கரை நோயாளிகள் சந்திக்கும் பொதுவான உடல்நல பிரச்சனை. மருத்துவ ரீதியாக நீரிழிவு நரம்பியல் என்று அழைக்கப்படும் இந்த நிலை, கால்களில் நரம்பு சேதம் காரணமாக நிகழ்கிறது. மேலும், இது உடலில் நீண்ட காலமாக உயர் இரத்த சர்க்கரை அளவால் ஏற்படும் ஒரு சிக்கலாகும்.
தொடுவதற்கு கூட அதிக உணர்திறன்
நீரிழிவு நரம்பியல் காரணமாக, சிலர் லேசான தொடுதலுக்கு கூட அதிகம் உணர்திறன் அடைபவர்களாக இருக்கலாம். இந்த நிலையில் ஒரு படுக்கை விரிப்பு கூட உங்களுக்கு வலியை ஏற்படுத்தலாம். இவை அனைத்தும் புற நரம்பு சேதத்தின் அறிகுறிகள்.
புற நரம்பு சேதம் உங்கள் கைகள் மற்றும் கால்களை பாதிக்கிறது. மேலும் இது நரம்பு சேதத்தின் மிகவும் பொதுவான வகையாகும். நீரிழிவு நோயாளிகள், இது பொதுவாக பாதங்களில் தொடங்குகிறது. பொதுவாக இரண்டு கால்களிலும் ஒரே நேரத்தில் இந்த அறிகுறிகள் ஏற்படலாம்.
பாதங்களில் கூச்ச உணர்வு
உங்கள் கால்களில் ஊசிகளால் குத்தப்படுவது போல் நீங்கள் எப்போதாவது உணர்ந்திருக்கிறீர்களா? இந்த உணர்வை வேறு பல லேசான விஷயங்களுடன் தொடர்புபடுத்தும்போது, இது நீரிழிவு நோயுடன் தொடர்புடைய ஒரு தீவிரமான சிக்கலாக மாறும்.
இந்த அறிகுறியின் தொடர்ச்சியான நிகழ்வுகளை புறக்கணிக்காதீர்கள். உங்கள் பாதங்களில் ஊசி குத்துவது போன்ற வலி உணர்வு அதிகமாக இருந்தால், உங்கள் இரத்த சர்க்கரை அளவை உடனடியாக சரிபார்க்க வேண்டியது மிக முக்கியம்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications

