Latest Updates
-
1 வருடம் கழித்து மேஷத்தில் உருவாகும் புதாதித்ய ராஜயோகம்: இந்த 3 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டி பறக்கபோறாங்க.! -
தேங்காய் சேர்க்காமலேயே சூப்பரா தேங்காய் சட்னி செய்யலாம் தெரியுமா? எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 20 ஏப்ரல் 2026: இன்று இந்த 3 ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம் நிறைந்த நாளாக இருக்குமாம் -
12 ஆண்டுக்கு பின் குருபகவான் கடக ராசிக்கு செல்வதால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் யார் தெரியுமா? -
வல்லாரை கீரையை இந்த மாதிரி சட்னி செஞ்சு பாருங்க - புத்தியும், ஆரோக்கியமும் அதிகமாகும் -
வாஸ்து படி இந்த 5 செடிகள் உங்கள் வீட்டில் இருந்தால் துரதிர்ஷ்டம் உங்கள் வீட்டை விட்டு எப்பவும் போகாதாம் -
முருங்கைக்காய் வாங்குனா இந்த வித்தியாசமான பொரிச்ச குழம்பு செஞ்சு பாருங்க - டேஸ்ட் தாறுமாறா இருக்கும் -
மாங்காய் Vs. மாம்பழம்: இந்த இரண்டில் எது உண்மையில் ஆரோக்கியமானது தெரியுமா? உங்களுக்கு பிடிச்சது எது? -
சுக்கிரன் சொந்த ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
சிக்கன் வாங்குனா இந்த தேங்காய் கொத்தமல்லி சிக்கன் வறுவலை செய்யுங்க - சூப்பரா இருக்கும்
கரும்புச்சாறு அதிகம் குடித்தால் நீர்ச்சத்து குறையும்..! ஐசிஎம்ஆர் எச்சரிக்கை..!
ஐசிஎம்ஆர்-ன் புதிய விதிமுறைகள் ஆரோக்கியம் குறித்து நம்மை எச்சரிக்கின்றன. இந்த கோடை சீசன் முடிந்து பருவமழை தொடங்கினாலும் அங்காங்கே வெளியில் எங்கு சென்றாலும் ஜூஸ் கடைகள் அதிகமாக செயல்படுகின்றன..
அதில் கரும்புச்சாறு, பலவிதமான ஜூஸ், இதர ரஸ்னா, ஃபலுடா விற்கும் கடைகள், மையங்கள் என ஜூஸ் கடைகள் அதிகம். இவை குறித்து விழிப்புணர்வுடன் இருக்க வேண்டிய அவசியம் உள்ளது என அறிவுறுத்தியுள்ளது..

1. அதற்கு முதலில் தாகம் எடுக்கும் போது தண்ணீருக்கு பதிலாக குளிர்பானங்களை குடிப்பதை நிறுத்துங்கள். குளிர் பானங்களுக்கு பதிலாக மோர், பால், எலுமிச்சை சாறு, பழச்சாறு மற்றும் தேங்காய் தண்ணீர் குடிக்க பரிந்துரைக்கப்படுகிறது.
2. கரும்புச் சாற்றில் உள்ள இயற்கையான சர்க்கரை பல நோய்களை உண்டாக்கும் வாய்ப்புள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
நீரிழப்பு
கரும்புச்சாறு மூலம் சர்க்கரையை உட்கொள்வதால் சர்க்கரையை குளுக்கோஸாக மாற்ற நிறைய தண்ணீர் தேவைப்படுகிறது. இதனால் உடலில் நீர்ச்சத்து குறையும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். கோடை காலத்தில் இந்தப் பிரச்னை அதிகமாகும் என்று கூறப்படுகிறது. இரத்த சர்க்கரை அளவு அதிகரிக்கிறது கரும்புச்சாறு மூலம் கரும்பை உடலுக்குள் எடுத்துக் கொள்ளும்போது, இரத்தத்தில் குளுக்கோஸின் அளவு அபரிமிதமாக அதிகரிக்கிறது. இதனால் இன்சுலின், சர்க்கரை நோய் பிரச்னை வர வாய்ப்பு உள்ளது.
கரும்புச் சாற்றில் கலோரிகள் அதிகம். இதனால் உடல் எடை அதிகரிப்பது மட்டுமின்றி சர்க்கரை நோய், இதய பிரச்சனைகளும் ஏற்படுகின்றன. தண்ணீருக்குப் பதிலாக கூல் ட்ரிங்க்ஸ் குடித்தால், அதில் கார்போஹைட்ரேட் அதிகம் என்றும், இதனால் கலோரிகள் அதிகரித்து எடை கூடும் என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர். நிறம் கொடுக்க வண்ணங்கள் சேர்க்கப்படுகின்றன, மேலும் நீண்ட காலம் நீடிக்க ரசாயனங்கள் சேர்க்கப்படுகின்றன. இதனால் உடல்நலக் கோளாறுகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். குளிர் பானங்களில் காஃபின் மற்றும் அமிலம் இருப்பதால் நீரிழப்புக்கு வழிவகுக்கும். டீ மற்றும் காபி குடிக்கும் போது நிறைய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க ஐசிஎம்ஆர் (ICMR) அறிவுறுத்துகிறது.
காபி மற்றும் டீகளை அதிகமாக உட்கொள்ளாமல் அளவாக உட்கொள்ள வேண்டும். காலையிலும் மாலையிலும் மட்டும் காபி குடிக்கவும். அடிக்கடி குடிக்க வேண்டாம். காபி மற்றும் டீக்கு பதிலாக மூலிகை டீ, கிரீன் டீ, கெமோமில் டீ, இலவங்கப்பட்டை டீ போன்ற மூலிகைகள் மற்றும் மசாலாப் பொருட்களால் செய்யப்பட்ட டீயை குடிக்க முயற்சிக்க வேண்டும்.
ஒரு நாளைக்கு குறைந்தது 8 முதல் 10 கிளாஸ் தண்ணீர் குடிக்கவும். ஒரேயடியாக குடித்துவிட்டு நாள் முழுவதும் பிரித்து சாப்பிட வேண்டாம். காலையில் இரண்டு முதல் மூன்று கண்ணாடி டம்ளரில் , மதிய உணவுக்கு முன் 1 கண்ணாடி டம்ளர், சாப்பிட்ட நான்கு மணி நேரம் கழித்து 2 கண்ணாடி டம்ளர், மாலை 2 கண்ணாடி டம்பளர் மற்றும் இரவில் மீண்டும் இரண்டு கண்ணாடி டம்ளர். இதை நாள் முழுவதும் குடிக்க திட்டமிடுங்கள். தர்பூசணி, பீட்ரூட் போன்ற பழங்களை அதிகம் சாப்பிடுவது உடலுக்கு ஈரப்பதம் அளிக்கிறது. மது அருந்த வேண்டாம், அது உடலை நீரிழக்க செய்கிறது. அதனால் ஐசிஎம்ஆர்-ன் இந்த வழிகாட்டுதல்களை கடைப்பிடிக்குமாறு மக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்..
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications











