Latest Updates
-
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..! -
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்.. -
செவ்வாயின் நட்சத்திரம் மாற்றம் இந்த 4 ராசிகளுக்கு சகல நன்மைகளையும் அளிக்கப்போகுதாம்... உங்க ராசி இதுல இருக்கா?
நாய் கடிச்சிடுச்சா?... உடனே இந்த 7 விஷயத்த மறந்திடாம செய்ங்க...
நாய் கடித்துவிட்டால், உடனடியாக என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து, விளக்கமாக இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
தொற்றுக்கள் எப்பொழுதுமே மிகவும் ஆபத்தானவை. வீட்டில் அழகான செல்லப் பிராணிக்ள வளர்ப்பது யாருக்குத் தான் பிடிக்காது. அதிலும் குறிப்பாக நாய் வளர்ப்பது மனதுக்கு மகிழ்ச்சி மட்டுமல்ல, வீட்டுக்கும் பாதுகாப்பு. அப்படி ஆசை ஆசையாக வளர்க்கும் நாயுடன் நாமும் வீட்டி்ல உள்ள குழந்தைகளும் விளையாடுவது வழக்கம் தான். அப்படி விளையாடுகிற பொழுது, நாயைத் தடவிக் கொடுப்பது, முடியைக் கோதிவிடுவது, வாலை பிடித்து இழுப்பது, மிதிப்பது போன்றவற்றைச் செய்வோம். அது உங்களுக்கு வேண்டுமானால் மகிழ்ச்சியாக இருக்கலாம். ஆனால் உங்கள் செல்லப் பிராணிக்கு?

அந்த சமயத்தில் நம்மை துன்புறுத்துகிறார்கள் என்று நினைத்து, தன்னுடைய கூர்மையான பற்களால் கீறவோ கடித்து விடவோ செய்யும். நம் வீட்டு நாய் மட்டுமல்ல, ரோட்டில் நாம் நடந்து சென்று கொண்டிருக்கும்போது, ரோட்டில் போகும் ஏதாவது ஒரு நாய் கடித்தோ, பற்களால் கீறவோ செய்துவிடும்.

நாய்க்கடி
அப்படி ஏதாவது நாய் கீறலோ அல்லது கடிக்கவோ செய்துவிட்டால், உடனே அதற்கு சரியான முதலுதவி செய்ய வேண்டும். அதை சாதாரணமாக நினைத்து விட்டுவிடவோ, சாவகாசமாக மருத்துவமனைக்குச் செல்வதோ கூடாது. உடனடியாக சில விஷயங்களைச் செய்து முடிக்க வேண்டும். நாய் கடிக்கு உடனடியாக சில மருத்துவ சிகிச்சைகள் செய்வது மிக அவசியம்.
நாயினுடைய பற்கள் உங்களுடைய தோல் திசுக்களைக் கவ்வியிருக்கும். மிகச்சிறியதாக பல் பட்டிருந்தாலும் அது ஆபத்து தான். ஒருவேளை காயம் ஏதாவது உங்கள் கண்ணில் பட்டால், அந்த தொற்று பரவாமல், பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம். முதலில் உடனடியாக மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும்.
மருத்துவமனைக்குச் செல்லும் முன் நீங்கள் உடனடியாகச் செய்ய வேண்டிய விஷயங்கள் என்னென்ன என்று பார்க்கலாம்.

மெதுவாக அழுத்துங்கள்
நாய் கடித்த காயமோ அதன் தடமோ உள்ள இடத்தில், விரல்களால் வைத்து மெல்ல அழுத்துங்கள். பாக்டீரியாக்கள் உள்ள ரத்தம் (விஷ ரத்தம்) உள்ளே சென்றாலும் அதை நீங்கள் அழுத்தும்போது வெளியே வந்து விடும். மேலும் தொற்றுக்கள் பரவாமல் தடுக்கும்.

கழுவுங்கள்
நாய் கடித்த இடத்தை மென்மையான சோப்பும் வெதுவெதுப்பான அல்லது குளிர்ந்த நீர் கொண்டோ கழுவுங்கள்.

சுத்தமான துணி
நாய் கடித்த இடத்திலிருந்து கட்டாயம் ரத்தம் நிண நீருடன் சேர்ந்து வடியும். சுத்தமான துணியைக் கொண்டு வடியும் ரத்தத்தைத் துடைத்து எடுங்கள்.

ஆன்டி-பயாடிக் க்ரீம்
காயமுள்ள இடத்தை டெட்டால் கொண்டு, சுத்தமான துணியால் துடைத்துவிட்டு, அந்த இடத்தில் ஆன்டி- பயாடிக் க்ரீம் போட்டு விடுங்கள்.

கட்டு போடுங்கள்
ஆன்டி பயாடிக் க்ரீம் அப்ளை செய்தவுடன் அதன்மேல் சிறிது காட்டனை வைத்து, மேலே மெல்லியதாக ஒரு கட்டு போடுங்கள்.

திரும்ப திரும்ப மாற்றுங்கள்
குறைந்தது இரண்டு மணி நேரத்து ஒருமுறையாவது,அந்த கட்டை பிரித்து, மீண்டும் துடைத்துவிட்டு வேறு கட்டு போடுங்கள்.

தொற்றுகள்
நாய் கடித்த இடத்தில் ஏதேனும் தொற்றுக்கள் ஏற்பட்டிருக்கிறதா என்று கண்டுபிடியுங்கள். கடித்த இடத்தில் வீக்கம், சிவந்து இருப்பது, வலி, அதனால் ஏற்படும் காய்ச்சல் போன்ற அறிகுறிகள் இருந்தால், உடனடியாக மருத்துவரை அணுகுங்கள்.



Click it and Unblock the Notifications











