Just In
- 5 hrs ago 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- 7 hrs ago தளர்ந்து போன சருமத்தை இறுக்கமாக்கி ஜொலிக்கிற மாதிரி மாத்த ஆசைப்படுறீங்களா? இந்த இயற்கை பொருட்களை யூஸ் பண்ணுங்க
- 7 hrs ago திருமணம் ஆக இருக்கும் இளம்பெண்கள் இந்த ஜூஸை குடியுங்கள்.. முகம் பொலிவுறும்..!
- 8 hrs ago சப்பாத்திக்கு ஒருடைம் உருளைக்கிழங்கு வெச்சு இப்படி கிரேவி செஞ்சு பாருங்க.. டேஸ்ட் சும்மா அள்ளும்...
Don't Miss
- News தென் சென்னையில் கள்ள ஓட்டு? பாஜக திமுக மாறி மாறி புகார்.. பெரும் பதற்றம்! என்ன நடக்கிறது
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Movies Actor Vijay Sethupathi: மூதாட்டியுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்த விஜய் சேதுபதி.. க்யூட்!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
டான்சிலை அடியோடு விரட்டும் அற்புத சூப்... செய்வது எப்படி?
தொண்டையின் அருகே உள்ள இரண்டு சிறிய திசு பகுதியானது வைரஸ் தொற்று அல்லது பாக்டீரியா தொற்றினால் பாதிக்கப்படுவதே டான்சில் ஆகும்.
தொண்டை அழற்ச்சி (டான்சிலிட்டிஸ்) நோய் என்பது நமது அடி நாக்கில் அதாவது தொண்டையின் அருகே உள்ள இரண்டு சிறிய திசு பகுதியானது வைரஸ் தொற்று அல்லது பாக்டீரியா தொற்றினால் பாதிக்கப்படுவதே ஆகும்.
நீங்கள் தொண்டை அழற்ச்சியால் பாதிக்கப்பட்டிருந்தால் அதற்கு காரணம் ஃக்ரூப் எ ஸ்ட்ரெப்டோகாகஸ் பாக்டீரியா தொற்றாக இருக்கலாம் இல்லையெனில் வைரஸ் தொற்றாக இருக்கலாம்.
டான்சில்
டான்சிலிட்டிஸினால் பாதிக்கப்படுவதற்கு பொதுவாக இரு முக்கிய காரணங்களானது மேலே கூறிய படி ஓன்று வைரஸ் மற்றொன்று பாக்டீரியா. ஆனால் இவற்றில் பல வகைகள் உள்ளன அவற்றில் சாதாரண சளியின் வைரஸ் கூட காரணமாக இருக்கலாம் .
சில சமயங்களில் பூஞ்சை மற்றும் ஒட்டுண்ணிகள் கூட தொண்டை அழற்சி ஏற்பட காரணமாக இருக்கலாம். ஆனால் இதனால் அரியதாகவே பாதிக்கப்படுவார்கள். ஏனெனில் இது சிறந்த ஆரோக்கியமான நோய் எதிர்ப்பு அமைப்பு கொண்டவர்களை மட்டுமே பாதிக்கும்.
தொற்று நோய்
டான்சிலிட்டிஸினால் பாதிக்கபட்டவரின் அருகில் இருக்கும் போது எளிதாக நீங்களும் அதனால் பாதிக்கப்படலாம் ஏனெனில் டான்சிலிட்டிஸ் ஒரு தோற்று நோய். டான்சிலிட்டிஸினால் பாதிக்கபட்டவர் சுவாசிக்கும் பொழுது, இருமும் பொழுது அல்லது தும்மும் பொழுது நோய் கிருமிகள் காற்றில் பரவி எளிதாக உங்களை தொற்றிக்கொள்ளும்.
தொற்றுநோயினால் பாதிக்கப்பட்ட பிறகு 2-5 நாட்களில் அதற்கான அறிகுறிகள் தெரிய ஆரம்பிக்கும். நோய் தொற்றுக்கான அறிகுறிகள் தெரிய ஆரம்பித்தவுடன் நீங்கள் ஆன்டிபயாட்டிக் மருந்துகள் எடுத்து கொண்டால் 24 முதல் 48 மணி நேரத்தில் குணமடையலாம். ஒருவேளை எந்த சிகிச்சையும் மேற்கொள்ளாவிட்டால் 2 வாரங்களில் தொற்றுநோய் தீவிரமாகி அதிக பாதிப்பை ஏற்படுத்தும்.
அறிகுறிகள்:
தொண்டையில் ஏற்படும் வலி முதலில் தோன்றும் அறிகுறியாகும். இதை தவிர்த்து இன்னும் பல உள்ளன.
தொண்டையில் புண்
உணவை விழுங்கும்போது வலி
டான்சில்ஸில் (உள் நாக்கு) வீக்கம்
காய்ச்சல்
தலைவலி
காதுகளில் வலி
களைப்பு
தூக்கமின்மை
இருமல்
குளிர்
நிணநீர் சுரப்பிகளில் (ஃலிம்ப் கிளாண்ட்ஸ்) வீக்கம்
அது மட்டுமல்ல டான்சிலிட்டிஸ் தொற்றினால் பாதிக்கப்படுபவர்களில் சுமார் 10 சதவீதத்தினருக்கு டான்சில் கற்கள் அல்லது டான்சில்லர் கால்குலி என்று அழைக்கப்படும் டான்சிலோலித்ஸ் நோயினால் பாதிக்கப்படலாம். டான்ஸில் பிளவுகளில் கால்சிஃபைடு மெட்டீரியல் ஃபில்ட்-அப் ஆவது டான்சிலோலித்ஸ் எனப்படுகிறது. டான்சிலோலித்ஸால் பாதிக்கப்பட்டவர் உணவு அல்லது எச்சிலை விழுங்க முயற்சிக்கும்போது, தொண்டையில் ஒரு கடினமான கல் இருப்பதை போன்ற உணர்வு மற்றும் வலி ஏற்படும்.
அணுகுமுறை
பெரும்பாலான சந்தர்ப்பங்களில், வைரஸ் தொற்றினால் ஏற்படும் டான்சிலிட்டிஸ் 3 முதல் 10 நாட்களுக்குள் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியினால் தானாகவே சரி ஆகிவிடும். ஆனால் பாக்டீரியாவால் ஏற்படும் டான்சிலிட்டிஸ் குறிப்பாக ஸ்ட்ரெப் த்ராட் பிரச்சினையை கொடுக்கும் நோய் தொற்றிற்கு உடனடியாக மருத்துவரை அணுகி ஆன்டிபயாட்டிக் மருந்துகளை எடுத்து கொள்வது அவசியம்.
தொண்டை அழற்சி
பொதுவாக வைரஸால் ஏற்படும் தொண்டை அழற்சிக்கு (டான்சிலிடிஸ்) எந்த ஒரு குறிப்பிட்ட சிகிச்சையும் தேவையில்லை வீட்டிலேயே சூடான தேநீர், வலி நிவாரணிகளை கொண்டு குணப்படுத்தலாம். ஆனால் ட்ரெப்டோகாகஸ் பாக்டீரியாவால் ஏற்படக்கூடிய அழற்சிக்கு, முறையான சிகிச்சை அவசியம். உலர்ந்த நாக்கு, உலர்ந்த வாய், காது வலி மற்றும் மேல் குறிப்பிட்ட தொண்டை அழற்ச்சியின் பொதுவான அறிகுறிகள் இருக்குமேயானால் அது ஸ்ட்ரெப் த்ராட் பிரச்சினையாக இருக்கலாம், உடனே மருத்துவரை அணுகுங்கள்.
பரிசோதனை
பரிசோதனைக்கு பின் உங்களது மருத்துவர் ஸ்ட்ரெப் பாக்டீரியாவால் உண்டாகும் நோய் தோற்று இல்லை என்பதை உறுதி செய்தால் அதன் பிறகு வீட்டிலேயே குணப்படுத்துவதற்கான வழி முறைகளை பின்பற்றலாம்.
டான்சிலிடிஸை குணப்படுத்துதல்: பொதுவாக வலுவற்ற நோய் எதிர்ப்பு சக்தி கொண்டவர்களை டான்சிலிடிஸ் எளிதாக தொற்றிகொள்ளும் என்பது ஏற்கனவே வல்லுநர்களால் உறுதி செய்யப்பட்ட ஓன்று. ஆகையால், முதல் மற்றும் மிக முக்கியமானது உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்வதாகும். இரண்டாவதாக, தொண்டை அழற்சி பொதுவாக ஒன்று அல்லது இரண்டு வாரங்களுக்குள் தானாகவே சரியாகிவிடும், நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் தொண்டை எரிச்சல் மற்றும் வலியை சரி செய்ய சில வீட்டு வைத்திய முறைகளை பின்பற்றினால் போதுமானது. இதன் மூலம் விரைவாக குணமடையலாம்.
ஓய்வு
அதிகமான மன அழுத்தம் உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை குறைத்து விடுகிறது. நீங்கள் தொண்டை அழற்சியால் பாதிக்கப்பட்டிருந்தால், நீங்கள் உங்களது மன அழுத்தத்திலிருந்து விடுபட வேண்டும். அதற்கு சிறப்பான தூக்கம் மிக அவசியம் இது உங்களின் குணப்படுத்தும் வேகம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. மேலும் இரண்டு நாட்களுக்கு உங்கள் தினசரி உடற்பயிற்சியை தவிர்க்கவும். இதனால் உங்கள் ஆற்றல் வீணாவதை தடுத்து நோயை குணப்படுத்துவதற்கு உதவும். மன அழுத்தமற்ற சிறந்த ஓய்வு நீங்கள் வேகமாக குணமடைய உதவியாக இருக்கும்.
ஹுமிடிபயர் அல்லது வேப்பரைசர்: தற்போதைய சூழலில் சுத்தமான காற்றை பெறுவது இயலாத காரியம், எனவே உங்கள் வீட்டிற்கு உள்ளே இருக்கும் போது, ஹுமிடிபயர் அல்லது வேப்பரைசரை பயன்படுத்தவும். ஈரப்பதமான காற்று தொண்டை தொற்றினால் ஏற்படுகின்ற சிரமங்களைத் தடுக்க உதவுகிறது. மேலும் சுத்திகரிக்கப்பட்ட காற்றை சுவாசிக்கும்போது உங்களுக்கு விரைவான நிவாரணம் கிடைக்கிறது.
நோய் எதிர்ப்பு சக்தி:
நீங்கள் தொண்டை அழற்ச்சியால் பாதிக்கப்படுகையில், உங்களது நோயெதிர்ப்பு சக்தி குறைந்து விடுகிறது என்பது உங்களுக்கே தெரியும். எனவே உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கவும். இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சத்துள்ள உணவுகளான காய்கறிகள், பழங்கள், மூலிகைகள் மற்றும் மூலிகைகள் சார்ந்த மசாலா பொருட்கள் ஆகியவற்றை அதிகமாக உண்ணவும் அதுமட்டுமல்லாது ஜங்க் ஃபுட்ஸை அறவே தவிர்க்கவும். நீங்கள் எவ்வளவு அதிகமான ஆர்கானிக் உணவுகளை உண்ணுகிறீர்களோ அவ்வளவு நல்லது.
சூடான உப்பு நீர் கொண்டு வாய் கொப்பளித்தல்:
சூடான உப்பு நீர் கொண்டு வாய் கொப்பளிப்பது டான்சிலிடிஸினால் ஏற்படும் தொண்டை புண்ணை குணப்படுத்த பொதுவான மற்றும் மிகவும் பயனுள்ள வீட்டு வைத்தியம் இதுவாகும். சூடான நீர் உங்கள் தொண்டை பகுதியை சுத்தப்படுத்துவதுடன் அந்தப் பகுதியில் இருக்கும் சளிகளை அகற்றி, தொண்டை வலி மற்றும் வீக்கம் ஆகியவற்றிலிருந்து விடுதலை அளிக்கிறது. மேலும் உப்பு பாக்டீரியா மற்றும் வைரஸ் ஆகியவற்றை அழித்து பாதுகாப்பு வழங்குகிறது. இது ஆஸ்மோசிஸை முறையை ஊக்குவிக்கிறது, இதன் மூலம் பாக்டீரியாவிலிருந்து ஈரப்பதம் நீக்கப்பட்டு வீக்கமான திசுக்களின் வழியே ஊடுருவி தொண்டை அழற்ச்சியினால் உண்டாகும் சிரமங்களை போக்குகிறது.
தேவையானவை:
சூடான நீர் - 1 டம்ளர்
உப்பு - 1/4 - 1/2 தேக்கரண்டி
செய்முறை:
சுத்தமான சூடான நீரை எடுத்து அதில் உப்பு சேர்க்கவும்.
உப்பு நன்றாக குறைந்த பின்பு, சிறிது உப்பு கரைசலை உங்கள் வாயில் எடுத்துக் கொள்ளுங்கள்.
உங்கள் தலையை உயர்த்தி, சற்று பின்னோக்கி சாய்த்து
உப்பு கரைசலை தொண்டை வரை கொண்டு செல்லவும், விழுங்கி விட வேண்டாம்.
இப்போது முன்னும் பின்னும் நீரை தொண்டைக்குள் நகர்த்தி, சிறிய சுழலை உருவாக்கவும்.
சில விநாடிகள் அல்லது ஒரு நிமிடத்திற்கு இவ்வாறு செய்யவும்.
இப்போது உங்கள் வாயில் இருந்து தண்ணீரை உமிழ்ந்து விடுங்கள்.
மீண்டும் தண்ணீரை எடுத்து, மேற் சொன்ன முறையில் மீண்டும் செய்யவும்.
ஒரு டம்ளர் சூடான உப்பு நீர் தீரும் வரை இதை தொடருங்கள்.
இவ்வாறு ஒரு நாளைக்கு 3-4 முறை செய்யவும்.
குறிப்பு: சாப்பிட்ட உடனே செய்யவேண்டாம். குறைந்தபட்சம் 1-2 மணி நேரம் இடைவெளி விட்டு செய்யவும்
இஞ்சி டீ
இஞ்சி நமது சமையலறையில் கிடைக்கும் இயற்கையான மூலிகை மருந்து. இது தொண்டை அழற்ச்சி, சளி மற்றும் காய்ச்சல் போன்ற நோய்களுக்கு மிகவும் நல்ல மருந்தாகும். இஞ்சியில் உள்ள சிஞ்சர்டியோல்ஸ், ஷோகல்ஸ் மற்றும் சிஞ்சரால்ஸ் ஆகியவை இஞ்சியை அழற்ச்சி எதிர்ப்பு மற்றும் ஆண்டி-மைக்ரோபியல் கொண்ட சிறந்த மருந்தாக ஆக்குகின்றன. இஞ்சியின் இந்த பண்புகள் உங்களின் தொண்டை அழற்ச்சியினால் உண்டாகும் நோய்களை குணப்படுத்த உதவுகின்றன. மேலும் சூடான தேநீர் நிச்சயமாக உங்கள் தொண்டைக்கு இதமாக இருக்கும்.
தேவையான பொருட்கள்
• இஞ்சி வேர் - 1-2 அங்குல துண்டு
• தண்ணீர் 1-2 கப்
• எலுமிச்சை சாறு (விரும்பினால்) - சில சொட்டுகள்
• தேன் (விரும்பினால்) - 1-2 தேக்கரண்டி
செய்முறை
• முதலில் தண்ணீரை நன்கு கொதிக்க வைக்கவும்
• கொதிக்கும் நீரில் சிறு தொண்டுகளாக வெட்டப்பட்ட இஞ்சியை சேர்த்து கொதிக்க விடவும்
• சுமார் 3-4 நிமிடங்கள் அடுப்பை சிம்மில் வைத்து கொதிக்க விடவும்
• பின்பு அடுப்பை அணைத்து விட்டு, சாறை வடிகட்டவும்
• அதன் பிறகு நீங்கள் விரும்பினால் சுவைக்காக எலுமிச்சை சாறு சில துளிகள் சேர்க்கவும்.
• இன்னும் இனிப்பு சுவை தேவையென்றால் அதனுடன் சிறிது தேன் சேர்க்கவும்
• ஒருமுறை நன்கு கலக்கி விட்டு சுவைக்கவும். இந்த இஞ்சி தேநீரை ஒரு நாளைக்கு 3 முதல் 4 முறை தயார் செய்து பருகவும்.
டான்சிலிடிஸை குணப்படுத்த வெங்காயம்:
டான்சிலிடிஸை குணப்படுத்த இஞ்சி மட்டுமல்ல வெங்காயம் கூட சிறந்த மருந்தாகும். வெங்காயத்தில் ஆண்டிசெப்டிக் மற்றும் ஆன்டி-பாக்டீரியல் பண்புகள் நிறைந்து உள்ளன அது தொண்டை அழற்சி காரணமாக ஏற்படும் தொண்டை புண் குணமாக உதவுகிறது. இன்னும் சொல்ல போனால், பெரும்பாலானோர் இது ஸ்ட்ரெப் தொண்டைக்கு நல்ல தீர்வு என்று நம்புகிறார்கள். உங்களால் முடியுமானால், சில வெங்காய தொண்டுகளை நேரடியாக மெல்லலாம், இதனால் அதன் சாறு உங்கள் தொண்டையில் பட்டு நிவாரணம் அளிக்கும். மாற்று வழியாக, கீழே கூறப்பட்டுள்ளது போல வெங்காய சாறு தயார் செய்து அதில் வாய் கொப்பளிக்கலாம்.
தேவையான பொருட்கள்
• வெங்காயம் - 1-2
• சூடான நீர் - 1 டம்ளர்
செய்முறை:
• தோல் உறிக்கப்பட்டு தொண்டுகளாக வெட்டப்பட்ட வெங்காயத்தை மிக்சியில் போட்டு சாறு பிழிந்து கொள்ளவும்.
• வெங்காயம் சாற்றில் சூடான நீரை கலந்து நன்கு கலக்கவும்
• மிதமான சூடு வந்தவுடன் இதை கொண்டு வாய் கொப்பளிக்கவும்.
பூண்டு தேநீர்:
பூண்டு கூட சிறந்த ஆன்டி-பாக்டீரியல் மூலிகை மருந்தாகும். உங்களுக்கு தொண்டை அழற்ச்சி உள்ள காலங்களில், குறிப்பாக பாக்டீரியா தொற்றினால் ஏற்படும் தொண்டை அழற்ச்சிக்கு சிறந்த மருந்து. இருந்து கிடைக்கும் ஒரு பெற அதை பயன்படுத்த முடியும்.
தேவையான பொருட்கள்:
• பூண்டு கிராம்பு - 2-3 பல்
• நீர் - 1 கப்
• தேன்- 1-2 தேக்கரண்டி
செய்முறை:
• தண்ணீரை கொதிக்க வைக்கவும்
• பூண்டு மற்றும் கிராம்பை நசுக்கி அவற்றை கொதிக்கும் நீரில் சேர்க்கவும்
• சிம்மில் 1-2 நிமிடங்கள் விடவும்
• தேநீரை வடிகட்டி, அதனுடன் தேனை சேர்க்கவும்
• நன்கு கலக்கிய பின்பு பருகவும்
சீரகம்:
சீரகத்தில் வைட்டமின் சி மற்றும் வைரஸ் எதிர்ப்பு பண்புகள் நிறைந்து உள்ளது. நாம் காலங்காலமாக சமையலுக்கு பயன்படுத்தும், எப்போதும் நமது சமையலறையில் கிடைக்கும் சீரகத்தை கொண்டு சளி மற்றும் இருமல், தொண்டை அழற்ச்சி போன்ற பல நோய்களுக்கு எதிராகப் பயன்படுத்தலாம்.
தேவையானவை
• சீரகம் - 1 தேக்கரண்டி
• இஞ்சி (சிறு துண்டுகளாக வெட்டப்பட்டது) - 1 தேக்கரண்டி
• காக்னக் பிராண்டி அல்லது விஸ்கி (விரும்பினால், குளிர்காலத்திற்கு ஏற்றது) - 1 டீஸ்பூன்
• தண்ணீர் -1 டம்ளர்
செய்முறை:
• தண்ணீரை கொதிக்க வைக்கவும்
• தண்ணீர் கொதிக்கும் பொழுது, சீரகம் மற்றும் துண்டுகளாக வெட்டப்பட்ட இஞ்சியை சேர்க்கவும்
• சுமார் 15 நிமிடங்கள் அடுப்பை சிம்மில் வைக்கவும் அல்லது சற்று திக்காக வரும் வரை அடுப்பில் வைத்திருக்கவும்
• அதன் பிறகு சாற்றை வடிகட்டவும்
• இப்போழுது வடிகட்டிய சாற்றில் மீண்டும் ஒரு கப் தண்ணீர் சேர்த்து, கொதிக்க விடவும்
• நீங்கள் விஸ்கி அல்லது காக்னக் பயன்படுத்த விரும்பினால், இப்போது 1 டீஸ்பூன் சேர்க்கவும்
• பிறகு சிறிது சூடு குறையுமளவு ஆற விடவும்.
• இவ்வாறு தயார் செய்த கஷாயத்தை ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 1 டீஸ்பூன் எடுத்து கொள்ளவும்.
• நீங்கள் 3-4 மணி நேரத்தில் நிவாரணம் பெறலாம், குணமடைந்து விட்டால் 4 மணி நேரத்திற்குப் பிறகு நிறுத்தி விடவும். இல்லையெனில், அடுத்த 3-4 மணி நேரத்திற்கும் ஒவ்வொரு மணி நேர இடைவெளியில் எடுத்துக்கொள்ளவும்.
எலுமிச்சை சாறு:
அனைவருக்கும் தெரியும் எலுமிச்சையில் வைட்டமின் சி நிறைந்து உள்ளதென்பது. வைட்டமின் சி நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது அது மட்டுமல்லாமல் இதில் உள்ள ஆன்டி-மைக்ரோபியல் தொண்டை அழற்சி போன்ற தொற்றுநோய்களை குணப்படுத்துகிறது. இது தொண்டை அழற்ச்சியால் பாதிக்கப்பட்ட நேரங்களில் பேருதவியாக இருக்கும்.
தேவையான பொருட்கள்:
• எலுமிச்சை சாறு - 1 எலுமிச்சையை முழுவதும் பிழிந்து கொள்ளவும்
• உப்பு - இது ஒரு சிட்டிகை
• தேன் - 1 தேக்கரண்டி
• சூடான நீர் - 1 டம்ளர்
செய்முறை:
• ஒரு டம்ளரில் சூடான நீரை எடுத்துக்கொள்ளவும்
• இந்த நீருடன் எலுமிச்சை சாறு, உப்பு மற்றும் தேன் சேர்க்கவும்
• எல்லாவற்றையும் நன்றாக கலக்க வேண்டும்
• இந்த சாற்றை உங்கள் தொண்டையில் படும்படி மிக மெதுவாக பருகவும்
• ஒரு நாளில் இரண்டு முறை சூடான எலுமிச்சை சாறு பருகுவது சிறந்த நிவாரணம் தரும்.
தேன்:
தேன் இயற்கையாக தேனீக்களால் தயாரிக்கப்படுகிறது. இத்தகைய இயற்கையான தேன் குடிப்பதனால் தொண்டை அழற்சி போன்ற பாக்டீரியா நோய்த்தொற்றுகளிலிருந்து உங்களை பாதுகாத்து கொள்ளலாம். தேனில் ஆன்டிஆக்சிடன்ட்கள், இரும்பு, பல்வேறு தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள் அதிகமாக உள்ளன. அது மட்டுமல்லாமல் இது ஒரு மிக சிறந்த ஆன்டி-பாக்டீரியல் உணவாகும். தேன் சாப்பிடும் போது, அது உங்கள் தொண்டையில் ஒரு படலத்தை ஏற்படுத்தி இதமான நிவாரணத்தை வழங்கும். மேலும் மனுகா தேன் ஸ்ட்ரெப்டோகாகஸ் கிருமிகளை அழிக்கும் திறனை கொண்டுள்ளது என ஆய்வில் நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நீங்கள் தேன் மூலம் ஸ்ட்ரெப் த்ராட் பிரச்சினையை எளிதாக குணப்படுத்தலாம்.
தேனை உட்கொள்ளும் வழிமுறைகள்
• ஒரு தேக்கரண்டி அளவுள்ள தேனை நாளில் பல முறை தினமும் சாப்பிடுங்கள்
• தேனில் ஒரு தேக்கரண்டி ஒரு இலவங்கப்பட்டை தூள் சேர்த்து அதை ஒரு நாளைக்கு 3-4 முறை சாப்பிடலாம்.
• சூடான இஞ்சி தேநீரில் அல்லது வேறொரு மூலிகை தேநீரில் 1-2 தேக்கரண்டி தேனைச் சேர்த்து பருகலாம்.
• ஒரு டம்ளர் சூடான நீரில் 1-2 தேக்கரண்டி தேன் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து குடிக்கலாம்.
டான்சிலிடிஸை குணப்படுத்தம் ஜூஸ்:
பாக்டீரியா அல்லது வைரஸ் தொற்று ஏற்படும் பொழுது நம் உடல் அதிகமாக சோர்வடைந்துவிடும் அப்போது நமக்கு நிறைய ஓய்வு தேவைப்படும், இதை நான் சொல்லவில்லை இது நிபுணர்களின் கருத்தாகும். இந்த ஓய்வானது உடலின் வெளி பாகங்களுக்கு மட்டுமல்ல உள் பாகங்களுக்கும் தேவை. தெளிவாக கூற வேண்டுமானால், உங்கள் உடலின் அனைத்து பாகங்களுக்கும் ஒய்வு கொடுக்க வேண்டும். அதாவது உங்களின் செரிமான அமைப்புகளுக்கும் சேர்த்து ஓய்வு தேவை. ஆகையால், திட உணவுகளை தவிர்த்து அதற்கு பதிலாக, சாறு பிழிந்து பருகுவது நன்று. இம்முறை உங்கள் உடலுக்கு முழு ஊட்டச்சத்து கொடுக்கும் அதே நேரம் செரிமான அமைப்புகளுக்கு நிறைய வேலை இருக்காது. அதே நேரம் ஜூஸானது உங்கள் உடலை சுத்த படுத்துவதுடன், பாக்டீரியா மற்றும் நுண்ணுயிர் கழிவு போன்ற அனைத்து நச்சுபொருட்களையும் உங்கள் உடலில் இருந்து வெளியேற்றி விடும்.
டான்சிலிடிஸை குணப்படுத்தம் பழச்சாறு எவ்வாறு தயாரிப்பது:
வாழை அல்லது ஆப்பிள் கொண்டு ஜூஸ் தயாரிக்கலாம் அதனுடன் புளுபெர்ரி, பிளாக்பெர்ரி, எல்டர்பெர்ரி, எலுமிச்சை, பேஷன் பழம், ஆரஞ்சு, திராட்சை, பப்பாளி, பேரி மற்றும் மாதுளை போன்ற பிற பழங்களை சேர்த்து ஜூஸ் செய்யுங்கள். அதாவது வாழை அல்லது ஆப்பிள் அதிகமாகவும் மற்ற பழங்களை சிறிய அளவுகளில் சேர்த்து கொள்ளவும். பரிந்துரைக்கப்பட்ட அனைத்து பழங்களையும் சேர்க்க வேண்டிய அவசியம் இல்லை வாழை அல்லது ஆப்பிளுடன் 3-4 வகையான பழங்கள் சேர்த்தால் போதுமானது.
நாள் முழுவதும் பழச்சாற்றுடன் மூலிகைகளையும் சேர்த்து பருகலாம். நோய் எதிர்ப்பு கொண்ட மூலிகைகள் மற்றும் வைரஸ் எதிர்ப்பு மூலிகைகளான புதினா, கெமோமில், சேஜ், வெந்தயம், ஹேசொப், மார்ஷ்மெல்லோ மற்றும் மல்லீன் மற்றும் தைம் ஆகியற்றை பயன்படுத்த்துவது நல்லது.
காய்கறி சாறு:
நீங்கள் ஜூஸ் சிகிச்சை எடுத்துக்கொள்ள முடிவு செய்தால், பழச்சாற்றுடன் சேர்த்து காய்கறி சாற்றையம் உங்கள் லிஸ்டில் சேர்த்துக்கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
• 2 கேரட்
• 1 பீட்ரூட்
• 2 வெள்ளரிக்காய்
இதை செய்ய:
• அனைத்தையும் துண்டுகளாக வெட்டி மிக்சியில் போட்டு நன்கு அரைத்து கொள்ளவும்.
• அரைத்ததை ஒரு டம்ளரில் ஊற்றவும்
• தேவைப்பட்டால், எலுமிச்சை சாறு சிறிது சேர்த்து பருகவும்.
புனித துளசி:
பொதுவாகவே துளசி நமது வீட்டில் கடவுளின் அடையாளமாக வளர்க்கப்படுகிறது. துளசியானது நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் மற்றும் குளிர் மற்றும் தொண்டைசம்பந்தமான அனைத்து தோற்று நோய்களுக்கும் அதி சிறந்த மூலிகை மருந்து. துளசி அற்புதமான வீக்கத்தை குறைக்கும் மற்றும் ஆன்டி-மைக்ரோபியல் பண்புகளை கொண்டுள்ளது, அதனால் உங்கள் தொண்டை அழற்சி வேகமாக குணமாக துளசியை பயன் படுத்தவும்.
தேவையானவை.
• புனித துளசி இலைகள் - 10-12
• எலுமிச்சை சாறு - 1 தேக்கரண்டி
• தேன் - 1 தேக்கரண்டி
• நீர் - 1 கப்
செய்முறை:
• தண்ணீரை கொதிக்க வைக்கவும்
• துளசி இலைகளை சேர்த்து 5-10 நிமிடங்கள் இளம் சூட்டில் கொதிக்க வைக்கவும்
• இதை வடி கட்டிய பின்பு தேன் மற்றும் எலுமிச்சை சாறு சேர்க்கவும்
• ஒரு நாளைக்கு 3-4 முறை பருகவும்
மஞ்சள்:
மஞ்சளை பற்றி சொல்லி தெரியவேண்டியதில்லை, ஏனென்றால் மற்றுமொரு சிறந்த மூலிகை-மசாலா மஞ்சள். இது உலகம் முழுவதிலும் பலதரப்பட்ட சோதனைகளால் நிரூபிக்கப்பட்டுள்ளது. தமிழ் பெண்கள் முகபொலிவுடன் மின்ன மஞ்சளே காரணம். ஏனென்றால் மஞ்சள் ஒரு சிறந்த கிருமி நாசினி. மஞ்சளை பயன்படுத்துவதன் மூலம் ஆன்டி-பாக்டீரியல் மற்றும் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். எனவே தொண்டை சம்பத்தப்பட்ட நோய் தொற்றிலிருந்து விடுபட மஞ்சளை பயன்படுத்துங்கள்.
தேவையான பொருட்கள்:
• மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
• கருப்பு மிளகு தூள் - 1/2 தேக்கரண்டி
• சூடான பால்- 1 டம்ளர்
செய்முறை:
• சூடான பாலில் மஞ்சள் மற்றும் மிளகு தூளை சேர்க்கவும்
• நன்றாக கலந்து தூங்குவதற்கு முன்பு பருகவும்.
• 3-4 நாட்களுக்கு தொடர்ந்து பருகுவது விரைவான பலனை தரும்
எச்சினாசியா மூலிகை:
தொண்டை அழற்சியின் காரணமாக நமது உடலின் நோயெதிர்ப்பு சக்தி குறைந்து பலவீனமாக இருக்கும்.எனவே உங்கள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோன்ற நேரத்தில் எச்சினாசியா மூலிகை நமக்கு உதவும். இந்த மூலிகை உங்கள் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்து இரத்தத்தில் உள்ள நச்சுத்தன்மையை அழிக்க உதவுகிறது. பல ஆய்வுகளில், எச்சினாசியா மூலிகை சளி மற்றும் காய்ச்சலின் வீரியத்தை குறைக்கும் திறனை கொண்டுள்ளதென்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. உங்கள் தொண்டை அழற்சி சிகிச்சைக்காக இந்த எச்சினாசியா மூலிகை டீயை தயாரித்து பருகவும்.
தேவையானவை :
• எச்சினாசியா மூலிகை - 1-2 தேக்கரண்டி
• எலுமிச்சை புல்- 1/2 தேக்கரண்டி
• புதினா இலைகள் -1/2 தேக்கரண்டி
• தேன்
• தண்ணீர் 1-2 கப்
செய்முறை :
• நீரை கொதிக்க விடவும்
• எச்சினாசியா, எலுமிச்சை புல் மற்றும் புதினா இலைகளை அதனுடன் சேர்க்கவும்.
• சில நிமிடங்கள் ஊறிய பின்பு தேனீரை வடிகட்டி எடுத்துக்கொள்ளவும்
• பின்பு தேன் சிறிது சேர்த்து பருகவும்
சிலி எள் (சிலிப்பரி ஃஎல்ம்)
பல வருடங்களாக தொண்டை அழற்ச்சியை குணப்படுத்துவதற்கு சிலி எள் மூலிகை பயன்படுத்தப்படுகிறது. இது அழற்ச்சி, வீக்கம் மற்றும் வலி ஆகியவற்றைக் குறைக்கும் மெசிலேஜை (ஜெல் போன்ற பொருள்) கொண்டுள்ளது மற்றும் இதனால் டான்சிலிடிஸ் தீர்வுக்கு இது சரியான மூலிகை மருந்து. இதில் டிமல்சன்ட், ஏமோலியன்ட் எக்ஸ்பெடோரண்ட், டையூரிடிக் மற்றும் நூயுற்றியெட்டிவ் பண்புகளைக் கொண்டுள்ளது. சிலிப்பரி ஃஎல்ம் மூலிகையை கொண்டு தேநீர் தயாரித்து பருகினால், தொண்டை அழற்சிக்கு நல்லது. இதை நாமே வீட்டில் தயாரிக்கலாம்.
தேவையானவை
• சிலி எள் (சிலிப்பரி ஃஎல்ம்) தூள் - 1 தேக்கரண்டி
• இலவங்கப்பட்டை - 1/4 தேக்கரண்டி
• எலுமிச்சை சாறு - சில துளிகள்
• நீர் - 1 கப்
செய்முறை
• சிறிது தண்ணீரைப் பயன்படுத்தி, சிலி எள்ளை பசை போல் பிசையவும்.
• இப்போது இந்த பசை மீது கொதிக்கும் நீரை ஊற்றவும்.
• நன்கு கலந்து, இலவங்கப்பட்டை தூள் மற்றும் எலுமிச்சை சாறு சேர்க்கவும்
• சிறிது சிறிதாக எடுத்துக்கொள்ளவும் , நல்ல பலன் கிடைக்கும்
வெந்நீர்
பொதுவாக சூடான நீர் தொண்டை அழற்சிக்கு நல்ல நிவாரணம் தரும் அதனுடன் மூலிகை மருந்துகளை சேர்த்து தேநீராக பருகும் பொது விரைவான நிவாரணம் மற்றும் உடலுக்கு சக்தியையும் வழங்கும். எனவே வீட்டிலேயே எளிதாக கிடைக்கும் மேல் சொன்ன மூலிகைகளை பயன்படுத்தி பயன் பெறுங்கள். அதுமட்டுமல்லாது சாதாரண நேரங்களில் கூட நோய் எதிர்ப்பு உணவுகள் மட்டும் தேனீர் போன்றவைகளை எடுத்து கொள்ளுங்கள். இது தொண்டை அழற்சி மட்டுமல்ல அணைத்து விதமான நோய்களுக்கும் ஏற்றது.