Latest Updates
-
கேஸ் அதிக தேவைப்படாத அட்டகாசமான சாம்பார் சாதம் ரெசிபி... இந்த மாறி செஞ்சு பாருங்க... டேஸ்ட் செமயா இருக்கும்... -
அடுப்பில்லாமல் செய்யக்கூடிய பச்சப்புளி ரசம் - செஃப் மாதம்பட்டி ரங்கராஜ் ஸ்டைலில் எப்படி செய்றதுன்னு பாருங்க.. -
கேது-சந்திரன் உருவாக்கும் கிரகண யோகம் 2026: இந்த 3 ராசிக்காரங்க கோடிகளை குவிக்கப்போறாங்களாம்..உங்க ராசி என்ன? -
இந்த ஒரு மூலிகை டீயை தொடர்ந்து 14 நாட்கள் குடித்தால் சிறுநீரக கல் கரையுமாம் - கூறும் ஆயுர்வேத டாக்டர்! -
பாபா வாங்கா-நோஸ்ட்ரடாமஸ் கணிப்பு படி மூன்றாம் உலகப்போருக்கு பின் எந்த நாடு சக்திவாய்ந்ததாக இருக்கும் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடைந்த குரு பகவான்: எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், யாரெல்லாம் கவனமா இருக்கணும் தெரியுமா? -
வெயில் காலத்தில் இந்த கஞ்சியை அடிக்கடி செஞ்சு குடிங்க.. கொழுப்பும் குறையும், உடலும் குளிர்ச்சியா இருக்கும்... -
இன்றைய ராசிபலன் 12 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு நினைத்தது நடக்கும் நாளாக இருக்குமாம்...! -
30 ஆண்டுக்கு பின் சனியும்-செவ்வாயும் மீனத்தில் இணைவதால் இந்த 3 ராசிக்காரங்க டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
No Oil Noi Boil Recipe: அடுப்பே தேவைப்படாத ஆரோக்கியமான, சுவையான இட்லி மற்றும் சட்னி ரெசிபி...ட்ரை பண்ணுங்க...!
பக்கவாதம் வந்தவர்களுக்கு ஏன் குடிக்கும் ஆசை வருகிறது என உங்களுக்கு தெரியுமா?
பக்கவாதத்தால் மூளையில் ஏற்படும் மாற்றங்களை அதிகமாக ஆல்கஹால் பருக ஒருவரை தூண்டும் என்று ஒரு விலங்குகள் ஆய்வு தெரிவிக்கிறது. பக்கவாதம் மூளையில் உள்ள டோர்சல் லேட்ரல் ஸ்ட்ரியாடம் என்ற நரம்பணுக்களை அழித்துவிடுகிறது. இதனால் மூளையின் மத்தியில் உள்ள நரம்பணுக்கள் பாதிப்பிற்குள்ளாகின்றன என ஆய்வுகள் கூறுகின்றன.

மூளை மத்தியில் உள்ள நரம்பணுக்கள் உணர்வுகளை தூண்டக்கூடியவை. அதிலும், ஒரு குறிப்பிட்ட வகை டோபமைன் உடல் செலகளுக்கு ஒரு சமிக்ஞையை அனுப்புகின்றன, இது D1 என்று அழைக்கப்படுகிறது. இது ஒருவரை ஆல்கஹால் குடிப்பது போன்ற நிகழ்வுகளை கட்டாயப்படுத்துகிறது.
இந்த செயல் சற்று ஆர்வமான செயல் தான். ஏனென்றால், எப்பொழுது டோர்சல் லேட்ரல் ஸ்ட்ரியாடம் என்ற நரம்பணுக்கள் இறந்தால், D1 நரம்பணுக்களில் உற்சாகத்தை தூண்டுகிறது என்று ஜங் வாங் என்ற டெகாஸ் ஏ&எம் பல்கலைகழக உதவி பேராசிரியர் கூறுகிறார். இந்த அணுவின் அதிகப்படியான ஆற்றல் தான் ஆல்கஹால் பருக ஆர்வத்தை தூண்டுகிறது என்றும் தெரிவித்தார்.
பத்திரிக்கையில் வெளியிடபட்ட ஒரு அறிவியல் ஆய்வறிக்கையில்,பக்கவாதம் வந்த விலங்குகளின் மாதிரியை வைத்து ஆராய்ந்ததில், மனிதனுக்கு வரக்கூடிய சாதாரண பக்கவாதம் ஏற்பட்டிருந்தது. இந்த பக்கவாதத்தால் நீரின் அளவை போல் ஆல்கஹால் உட்கொள்ளும் அளவு இருந்ததாக கண்டறியப்பட்டதாக தெரிகிறது. மேலும்,இது தொடர்பாக வாங் கூறியதாவது, இந்த தூண்டலானது பக்கவாதம் ஏற்பட்டு 5வது நாளில் இருந்து ஒரு மாதத்திற்கு பின் ஏற்படுகிறது என்று தெரிவித்தார்.
குறிப்பாக சொல்லப்போனால், தண்ணீர் அல்லது ஆல்கஹால் இரண்டையும் கொடுத்தார் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டோர் பெரும்பாலும், ஆல்கஹாலையே தேர்ந்தெடுப்பர் என்று வாங் கூறுகிறார்.
அதுவே, D1 அணுக்கள் தடுக்கப்படும்போது, ஆல்கஹால் பருவதற்கான தூண்டல் குறைக்கப்படும். மேலும் வேறு எந்த மாற்றத்தையும் ஏற்படவிடாது. மூளை நன்கு செயல்பட ஒரு சிறந்த குறிப்பு என்றால், D1ன் அதிகப்படியான ஆற்றலுக்கு மருத்துவரின் ஆலோசனைப் படி ஏதாவது மருந்து எடுத்துக்கொண்டால் மூளைக்கு ஏற்படும் பாதிப்பை குறைக்கலாம் என்று வாங் கூறுகிறார்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications













