Latest Updates
-
வார ராசிபலன் (03 May 2026-09 May 2026)- இந்த வாரம் இந்த 6 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமா இருக்கும்.. -
நேபாளி ஸ்டைல் சிக்கன் சுகௌனி - 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
பிஜ்னோர் சம்பவம்: லிவ்-இன் உறவில் இருப்பவர்கள் கவனத்திற்கு! உங்கள் பாதுகாப்பை உறுதி செய்வது எப்படி? -
சனி, குரு, ராகு-கேதுவின் நிலைகளால் 2027 வரை ராஜயோகத்தைப் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா? -
பிஜ்னோரில் நடந்த கொடூரம்! லிவ்-இன் உறவில் இந்த அறிகுறிகள் தெரிந்தால் உஷார், இல்லையென்றால் ஆபத்து! -
கோடையில் பால் போன்ற சருமம் வேண்டுமா? அப்ப இந்த மைதா ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மே 8 முதல் இந்த 3 ராசிக்காரர்களின் செல்வம் டபுள் ஆகப்போகுது! -
வீட்டில் இந்த 4 செடிகள் இருந்தா போதும்… புழுதிப் புயலையும் தாண்டி அதிர்ஷ்டம் தேடி வரும்! -
கேரட்டும், மாங்காயும் இருந்தா.. இப்படி செஞ்சு பாருங்க.. எல்லாத்துக்குமே டக்கரா இருக்கும்.. -
கப்பர் யோக காலத்தில் பணத்தை இழக்காதீங்க! இந்த 5 வாஸ்து மாற்றங்கள் செழிப்பை அள்ளித்தரும்!
ஏன் மூக்கடைப்பு உண்டானால் காது வலி உண்டாகிறது தெரியுமா?
காது வலி உண்டானால் வலி உயிர் போய் விடும். காது வலிக்கு பல காரணங்கள் உள்ளன. காதுவலிக்கு காரணங்கள், அதனை எப்படி குணப்படுத்தலாம் எப்படி தவிர்க்கலாம் என்று இங்கே விளக்கமாக கொடுக்கப்பட்டுள்ளது
காது வலி எளிதில் வராது. வந்தால் உயிர் போகும் அளவிற்கு வலி உண்டாகும். காதுவலி வருவதற்கு பல காரணங்கள் உள்ளன.
எதனால் காது வலி வருகிறது? எங்கே வலி உண்டாகிறது அதனை எப்படி கண்டறியலாம். எப்படி குணப்படுத்தலாம் என்று அடிப்படையான விஷயங்களை நீங்கள் தெரிந்து வைத்துள்ளீர்களா? இதோ தெரிந்து கொள்ளுங்கள்.

காதுவலிக்கு காரணம் என்ன?
மூக்கிலிருந்து காதிற்கு ஒரு சிறு குழாய் இணைகிறது. சளி பிடிக்கும்போது இந்த குழாய் வீக்கமடைகிறது. இதனால் சுரக்கும் திரவமானது காதினுள்சென்று அங்கே கிருமிகளை பெருக்குகிறது. இதனால் காதிலும் வீக்கம் உண்டாகி வலி ஏற்படுகிறது.

யாருக்கெல்லாம் அதிகம் உண்டாகும் :
இது அதிகமாக குழந்தைகளுக்கு உண்டாகும். அவர்களுக்கு மூக்கையும் காதையும் இணைக்கும் குழாய் வெகு அருகிலேயே இருப்பதால் விரைவில் ஜலதொஷம் பிடித்தால் விரைவில் காதிலும் தொற்று உண்டாகிவிடும்.

எப்படி குணப்படுத்துவது :
கண்டதையும் காதில் விடுவது இன்னும் தொற்றை அதிகப்படுத்திவிடும். ஆகவெ மருத்துவரின் ஆலோசனையின்றி எதையும் காதில் செய்ய வேண்டாம்.
இது காதுகேட்கும் திறனையே பாதிபப்டைய செய்துவிடும். ஆகவே என்ன பிரச்சனை என்று கண்டறிந்து மருத்துவர் தரும் சொட்டு மருந்து மற்றும் மாத்திரைகளை மட்டும் சாப்பிடுவது நல்லது.

எப்படி தடுக்கலாம்?
புகை பிடிப்பது தவிர்க்க வேண்டும். அதுபோல் குழந்தைகளுக்கு காது வலி இருந்தால் அவர்கள் முன்னிலையில் புகைப்பிடித்தலும் தவறு.

எப்படி தடுக்கலாம்?
சளி இருமம் தொண்டையில் உண்டாகும் தொற்றின் காரணமாகவும் காதில் வலி உண்டாகும். ஆகவே விரைவில் இவற்றை குணப்பெறச் செய்தால் காதில் உண்டான தொற்றும் குணமாகும்.



Click it and Unblock the Notifications